மொட்டை மாடிகளும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
டிஷ் அண்டனாக்களால்...!!
மொட்டை மாடிகளும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
டிஷ் அண்டனாக்களால்...!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தொலைக்காட்சிப் பெட்டிகளும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
டிவி சானல்களினால் ...!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
டிவி சானல்களும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
மெகா சீரியல்களால் ...!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வைரமுத்து அண்மையில் சொன்னார் -
நெரிசலைத் தவிர்க்க ஒவ்வொரு மனிதனும்
சிறு இறக்கை ஊர்தியில் பறந்தே இனி பயணிப்பான் என...
அப்படிப் பறந்தாலும்
மதுராந்தக வான்பரப்பில் விபத்து என
மாலைமலரில் வரா நாளிருக்காது..
நெரிசல்களுக்காப் பஞ்சம்?
தொடரட்டும் ஓவிய விவரிப்புகள்..
பாராட்டுகள் ஓவியன்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
காதலும் தவிக்கிறது
கவிதைகளின்
நெரிசலால்..
என்னங்க ஓவியன்..என் தங்கச்சியக் கூப்பிட்டுட்டு மொட்டை மாடிக்கு காத்து வாங்க போயிருப்பீங்க...அங்க காலாற ரெண்டு ஸ்டெப் வெச்சு ஒரு டூயட் கூட பாட முடியாம.,டிஷ் வில்லன்கள்...அந்தக் கடுப்பில இறங்கி வந்தவுடன கவித..கவித..
கொஞ்ச நாள் அப்படித்தான் எல்லாம் நெரிசலாத் தான் தெரியும்....அப்புறம் தன்னால சரியாப் போகும்...
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
நகரத்துப் பறவைகள்
மகிழ்ச்சியில் துள்ளட்டும்
டிஷ் அண்டனாக்களால்
ஒன்றன்பின் ஒன்றாய் நெரிசல்களைப் பட்டியலிட்ட கவிதைகள் அருமை...எனக்குள்ளும் நெரிசல்கள்தான்...வேண்டாத..பலவேறு எண்ண ஓட்டங்களால்...வாழ்த்துகள் ஓவியன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நன்றி ஓவியன் அவர்களே!!
நெரிசல் எங்கும் உண்டு..
எதிலும் உண்டும் போல
கவி மிக அருமை..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
பூங்கா மரங்களும்
நெரிசலால் தவிக்கின்றன..
காதல் ஜோடிகளின்
நெருக்கத்தால்...!!
60 கிலோ எடையோடான இருவர் அமரக் கூடிய பறக்கும் காரை தயாரித்துவிட்டார்கள் இளசு அண்ணா.
சென்ற வாரம் தான் தொலைக்காட்சியில் கண்டேன்..!!
இனி எல்லாரும் வானத்தில் பறந்துட்டே, மொட்டை மாடியில் பார்க்கிங் செய்துட்டு.... வீட்டுக்குள் செல்வார்கள்..!!
அப்புறம் அங்கும் நெரிசல் தான்...!!
அழகான நெரிசல்கள் கவிதைகளாக...!!
ஆனால்.. இங்கே பல கவிதைகளால் நெரிசல் இருத்தல் பாராட்டத் தக்கது தானே..!!
பாராட்டுகள் ஓவியன் அண்ணா...
அசத்துறீங்களே...!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks