Results 1 to 7 of 7

Thread: சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்

    தூக்கி சொருகிய பாவாடையும்
    நனைந்து மின்னிய கால்களும் கண்டு
    வயற் காற்றுக் காமுகன்
    மானபங்கம் செய முயல்வான்.

    அங்கத்திற்கு திரையிட்டு-என்
    உள்ளத்தில் உனை சிமிழ்ப்பாய்.

    தேம்பல் துளிகள் ஏந்தியபடி
    வீடேகிய கடநீரேறி மிச்சத்தில்
    தூண்டிலிட்டுக் காய்வோம்..

    காத்திருப்பில் கால்கடுக்க
    தோள்சாய்ந்த தலை கோதி
    தாயாகி நீ நிமிர்வாய்.

    சொக்கட்டான் ஆட்டத்தில்
    உருட்டிய சோகி தாயம்தர-என்
    தொடை தட்டி மாயம்செய்வாய்.
    கோவில் தீபமாய் காயம்வைப்பாய்!

    குலசாமி அமர்ந்த அரசமர நிழலில்
    கண்மடல் குவித்து இதழுக்கு தாழிட்டு
    புறாக்கீதத்துடன் உறவாடுகையில்
    பின்னின்று பயங்காட்டி மலர்வாய்.

    காலவாரியம் இடமாற்றிய தோழியே..

    வேசக் காட்டு மிருகங்கள் தரும்
    துரோகக் கீறல்களின் எரிவுகளிற்கு
    ஒத்தடமாகும் உன் நினைவுகள்
    புன்னகையாய் பூத்து சொன்னது
    சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்.
    Last edited by அமரன்; 16-03-2008 at 08:51 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    தூக்கி சொருகிய பாவாடையும்நனைந்து மின்னிய கால்களும் கண்டு
    வயற் காற்றுக் காமுகன்
    மானபங்கம் செய முயல்வான்.


    காலவாரியம் இடமாற்றிய தோழனே..

    வேசக் காட்டு மிருகங்கள் தரும்
    துரோகக் கீறல்களின் எரிவுகளிற்கு
    ஒத்தடமாகும் உன் நினைவுகள்
    புன்னகையாய் பூத்து சொன்னது
    சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்
    பால் மாறிப் போனதேனோ அமரா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தூக்க கலக்கம் அண்ணா.. மிக்க நன்றி...

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    வேசக் காட்டு மிருகங்கள் தரும்
    துரோகக் கீறல்களின் எரிவுகளிற்கு
    ஒத்தடமாகும் உன் நினைவுகள்
    புன்னகையாய் பூத்து சொன்னது
    சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்
    வெகு நாட்களுக்கு பிறகு மனம் தொட்ட கவிதை..!!

    என்னுள் வருடிச் சென்ற
    மயிலிறகு குறுகுறுப்பில்
    மையல் கொண்டு
    திரும்ப திரும்ப
    படித்து மனதுக்குள்
    மடித்துக் கொண்டேன்..!!


    ஏனோ இறுதி வரிகள் என்னுள் பெரும் அசைவை ஏற்படுத்தி அசைவற்று கிடத்திச் சென்றது..!!

    கிராமிய சூழலில் கற்பனை வீதியில் ஒற்றையடிப்பாதையில் பயணித்த உணர்வு அமரன் அண்ணா.

    மனம் நெகிழ்ந்து பாராட்டி வாழ்த்துகிறேன்.
    Last edited by பூமகள்; 10-03-2008 at 09:37 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    தூக்கக்கலக்கத்தில் கூட கவிதை வருது...எங்களுக்கு கனவு தான் வரும்...

    சொக்கட்டான் ஆட்டத்தில்
    உருட்டிய சோகி தாயம்தர-என்
    தொடை தட்டி மாயம்செய்வாய்.

    நல்லாருக்கு அமரன்...
    தாயத்துக்கு ஒரு ஆட்டம் எச்சு உண்டா...உங்க ஊரில...
    பண்ணிரண்டு விழுந்திருக்கணுமே...அதில...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தூண்டிலிட்டு காய்ந்ததும்,தலை கோதி தோள் சாய்ந்ததும்,சொக்கட்டானில்..தொடைதட்டியதும், புறம் நின்று பயங்காட்டி மாயம் செய்ததும்...மனதைவிட்டு நீங்கவில்லை....
    ஆனால் இந்த பாழும் காலம்..மாற்றியதே அத்தனையையும்...
    நீங்காத நினைவுகளுடன்...என்றும் அல்லாடும் உள்ளம் சொல்லும் சோக கீதம்...சிரிப்பையும் அழுகையாக்கிய கசப்பு நாதம்.

    மனதுக்குள் நுழைந்த கவிதை அமரன்.வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என் மனதில் பதிந்த வலியின், குறைந்தளவு கற்பனை தொழில்நுடபம் புகுத்தப்பட்ட மறுமதிப்பு இந்தக்கவிதை.. பதிலிட்ட நல்லுள்ளங்களுக்கு நன்றி நவில்கிறேன்.
    Last edited by அமரன்; 11-03-2008 at 01:17 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •