ஒருநாள் நான் தலையை பற்றி மலரிடம் புகழ்ந்து பேச வந்தது வினை.. அதாவது தலைக்கு எல்லா வயதிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். பெரிய பெரிய விஐபி எல்லாம் தலையின் நண்பர்கள்.. தலை உலகம் முழுக்க ஃபேமஸ்' என்று சொல்ல, அது எல்லாம் கப்ஸா நான் நம்ப மாட்டேன் என்று மலர் ஒரே அடம்.. அட..எப்படி இதையெல்லாம் நிரூபிப்பது என்று எனக்கு ரொம்ப சங்கடமாகி போய்விட்டது.
மலரை கூட்டிகிட்டு சென்று..தலையிடம் இந்த பிரச்சனையை சொன்னால்..அவர் ' அடப்போப்பா.. நான் ரொம்ப பிஸி..இப்ப கூட
மன்மோகன் போன் பண்ணி, பட்ஜெட்டில் எதாவது குறை இருந்தா சொல்லுங்க என்று கெஞ்சுறார்..' அப்படின்னார்..
உடனே மலரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.. இவர்கள் கண்டிப்பாக கப்ஸா பார்ட்டிகள் என்று அவள் மனதில் நினைத்தது எனக்கு தெரிந்து விட்டது..
நான் தலையிடம், 'சரி அமிதாப்பச்சன் மும்பைல எதோ பிரச்சனைன்னு சொன்னாரே..போய் பார்த்தீங்களா'ன்னு கேட்டேன்.. போன வாரம்தான் அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணினோம்'னு சொன்னார்..
மலருக்கு மு டி ய ல.. இதையெல்லாம் நான் நேரில பார்த்தாதான் நம்புவேன்னு அடம். உடனே தலை 'அமெரிக்காவுல சின்ன வேலை ..நீயும் கூட வாயேன்னு' மலருக்கும் எனக்கு சேர்த்து 3 டிக்கெட் போட்டுட்டாரு..
முதலில் வெள்ளை மாளிகைக்கு சென்றோம்.. தலை வந்த செய்தி அறிந்ததும் புஷ் வாசல் வரை வந்து வரவேற்று, அவருடைய அனைத்து வேலைகளையும் விட்டுட்டு எங்க கூட சாப்பிட்டு விட்டுதான் சென்றார்..
மலருக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.. அடுத்து யாரை பார்க்கணும்னு தலை கேட்டார்.. மலர் 'எனக்கு டைட்டானிக் ஹீரோயின் ரோஸ் பாக்கணும்னு' சொன்னா..
உடனே ஹாலிவுட் சென்றோம்.. அங்கே தலை வந்திருப்பதை அறிந்து ரோஸ், தனது படத்தின் சூட்டிங்கை கேன்சல் பண்ணிவிட்டு தலையிடம் கொஞ்சி கொஞ்சி பேசி விட்டு சென்றார்..
மலருக்கு நல்ல நம்பிக்கை வந்துவிட்டது.. தலை 'இந்தாம்மா.. எனக்கு நிறைய வேலை இருக்கு. உன் கூட ஊர் சுத்திகிட்டெல்லாம் இருக்க முடியாது.. கடைசியா யாரை பார்க்கணும்னு சொல்லு' என்றார்..
கடைசியா நான் உலகின் முதல் பணக்காரர் பில்கேட்ஸ் பார்க்கணும்னு அந்த பொண்ணு சொல்லிச்சி..
மைக்ரோ சாஃப்ட் ஆபிஸ்..
ரிசப்சனுக்கு அப்புறம் எங்களுக்கு அனுமதி இல்லை..
தலை மலர்கிட்ட சொன்னார். 'இங்க செக்யூரிட்டி அதிகம் .. நான் மட்டும் உள்ளே போறேன். அங்கே தொலைவில் ஒரு கேபின் இருக்கு பாத்தியா.. அங்கேதான் பில் வருவான்..நான் அவனை அங்கே கூட்டிகிட்டு வந்துடுறேன்.அப்புறம் நீ எங்களை பார்க்கலாம்' னு சொல்லிட்டு உள்ளே போனார்..
கொஞ்ச நேரத்தில் அந்த கேபினில் இருவரும் படு ஜாலியாக சிரித்த படி உள்ளே அமர்ந்தனர்..
நாங்க நின்று கொண்டிருந்த பக்கம் சென்ற ஒரு ஊழியர் மலரின் காதில் ஏதோ சொன்னதும்..மலருக்கு மயக்கம் வந்து விட்டது.. பொதீர் என்று ஒரு சவுண்டு.. அப்புறம் தலையில் தண்ணீர்/சோடா/மற்றும் மலருக்கு பிடித்த ரெண்டெழுத்து பானம் எல்லாம் தெரித்தது மலரை எழுப்பி விட்டேன்..
நான் 'என்ன மலர் ..எப்பவாவது நம்ம தலையின் ரேஞ்ச் தெரிந்ததா? ஆமா ஏன் பில் கேட்ஸை பார்த்ததும் மயங்கிட்டே'?
மலர் : 'நான் ஒண்ணும் அவரை பார்த்து மயக்கம் போடல.. இந்த வழியா போன ஒரு ஊழியன் அந்த கேபினை பார்த்துட்டு என்னிடம் ஒரு கேள்வி கேட்டான் .. அதான் மயக்கம் போட்டுட்டேன்...'
நான் 'அப்படி என்ன கேட்டான்?'
'நம்ம தலையோட பேசிகிட்டு இருக்காரே ..அவர் யாருன்னு கேட்டான் மாம்ஸ்..அவர் யாருன்னு கேட்டான்.......'
ம்ம்.. இப்ப புரிந்திருக்கும் நம்ம தலையோட ரேஞ்ச் பத்தி....
Bookmarks