Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: உறவுகள் பலவிதம்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    உறவுகள் பலவிதம்.

    இரவுப்பணி முடித்து
    இரவி வீடேகும் போது
    விழிமலர்ந்து
    விழி மலர்விப்பாய்..

    தூரிய சேதிகளை
    தூறியதும் நூரும் நம்முறவு
    தொடர்வண்டி பயணத்தின் பின்
    தொடர்கிறது மீண்டும்..

    நமதுறவுப் பாசனத்தில்
    குறுக்கோடும் இடையூறுகளால்
    ஊறிய பசியுடன் காத்திருப்பேன்
    நீ தரும் போசனத்துகாய்.

    வீடடையும் வேளைதனில்
    என்னிலை உணர்ந்து
    நாணிச் சிவக்கும் வானம்.
    தளிர்க்கும் வாடிய நம்வதனம்.

    உரசல்களும் ஊடல்களும்
    அமைத்த பஞ்சணையில்
    துவங்கும் ஆட்டத்தின் முடிவில்
    உறங்குவோம் திருப்தி மடியில்..

    நான் நலங்கெட்ட நாட்களில்
    உன்விரல் தீண்டல் கிட்டாது
    மங்கிப்போகும் என் முகம்..
    இரட்டையாக உன் முகம்..

    எனக்கு நானே வினவுகிறேன்
    என்ன உறவு
    எமக்கிடையான இவ்வுறவு
    மடிக்கணினியே கணி நீயே!
    Last edited by அமரன்; 08-03-2008 at 07:03 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    வர வர அமரு கன்னியை கணிணியா நினைத்து
    சே..... கணிணியை கன்னியா நினைச்சி
    கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாரு.....
    ஹீ..ஹீ..... சும்மா.....சும்மா....

    அமரு உங்க கவிதை
    மலருக்கு புரிஞ்சிட்டு.........!!!
    புரிஞ்சிட்டு.........!!!
    புரிஞ்சிட்டு.........!!!

    இனிமே தைரியமா கதை எழுதலாம்......
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அண்ணனுக்கு சீக்கிரம் ஆத்துல உள்ளவங்களுக்கிட்ட சொல்லி கல்யாணம் கட்டிப்போட வேண்டியதுதான்...!!

    எப்படிதான் உங்களால முடியுதோ... உங்கள் பார்வைகள் பலவிதம்... எல்லாமே தனிரகம்..!!

    வாழ்த்துக்கள் அண்ணனே...!! தொடருங்கள் கவி மன்னனே..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பாருங்கப்பா பாசமலர்களை.. பாருக்குள்ள உங்களைப்போல் யாரையும் பார்த்ததில்லப்பா.. எம்புட்டுப்பாசம் என்னைய மாட்டிவிட.. அதிப்பூவாட்டம் பிறத்தியாக இருந்தமலரை கவிச்சோலைக்கு இழுத்து வந்தவகையில் வெற்றி அடைந்துவிட்டது இக்கவிதை. உற்சாக உதவிக்கு நன்றி இருவருக்கும்..

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கன்னிக்கும் கணிணிக்குமாய் நல்லதொரு கவிதை....அழகான வார்த்தை தேர்ந்தெடுப்பு அமரன்...கடைசிவரை சஸ்பென்ஸ் அசத்தல்....
    கலக்குறீங்க....வாழ்த்துகள்.
    (மலருக்கு கவிதை புரிஞ்சிடுச்சே....டுச்சே....ச்சே....சே....)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    செய்தொழில் தெய்வம்
    தெய்வமே அன்னை
    அன்னையிலும் மேல் மனை

    தொழில்பொருள் காதல்,
    தொலைவில்லாத வாழ்க்கைப் பயணம்

    உறவு என்ன உறவு?
    இது ஆசைகள் பேணிய துறவு..

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தென்றல் View Post
    செய்தொழில் தெய்வம்
    தெய்வமே அன்னை
    அன்னையிலும் மேல் மனை..
    என் போன்றவர்களைப் பொறுத்தமட்டில் இம்மூன்றுக்கும் ஆணிவேராக இருப்பது கணினி. அந்த உறவு பல இதம்தானே தென்றலே.. இந்தப்பக்கம் வீசிய தென்றலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    கருத்துப் பதிந்து ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    இரு பொருள் ஒன்றாக
    ஒரு பொருள் புரிவித்ததோ?

    புரிந்து சிலிர்த்து
    நெகிழ்ந்தேன்..!

    கவியும் கவிப்பொருளும்
    கடைசியில் முத்தாய்ப்பாக
    முடிவு சொல்லின
    வார்த்தை ஜாலத்தில்
    சொக்க வைத்தன.!!

    இரு கோணங்கள்
    எப்போதும் என்னை
    இனிமையாக சுவைக்க
    வைக்கும்..!!

    நல் கவிவிருந்து
    சுவைத்த திருப்தி..!!


    பாராட்டுகள் அமரன் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    பாருங்கப்பா பாசமலர்களை.. பாருக்குள்ள உங்களைப்போல் யாரையும் பார்த்ததில்லப்பா..
    பீரையும் சரி.... பாரையும் சரி மல்ரு இதுவரை பாத்ததே இல்லை...
    அப்பிடி பட்ட எங்களை போயி பாருக்குள்ள பாத்தேன்னு
    பொய் சொல்ற அமரை வன்மையாக கண்டிக்கிறேன்....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by மலர் View Post
    பீரையும் சரி.... பாரையும் சரி மல்ரு இதுவரை பாத்ததே இல்லை...
    மல்ரு நீ கண்ண மூடிட்டு பீர் குடிக்கறதை இப்படி சொல்லியா மாட்டிக்கறது...??

    அப்பிடி பட்ட எங்களை போயி பாருக்குள்ள பாத்தேன்னு
    பொய் சொல்ற அமரை வன்மையாக கண்டிக்கிறேன்....
    பாருக்குள்ள போன உடனே நம்ப அமருக்கு உலகம் கண்முன்னாடி சுத்த ஆரம்பிச்சுடும்.. அதாத்தான் அவரு மறைமுகமா பாருக்குள்ள பாத்தேன்னு சொல்லுறாரு...

    (எப்படியும் இந்த ரெண்டு பதிவும் அரட்டை பகுதிக்கு வந்து சேர்ந்திடும்ங்கிற நம்பிக்கைதான்..!!)
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அமரன் View Post
    பாருங்கப்பா பாசமலர்களை.. பாருக்குள்ள உங்களைப்போல் யாரையும் பார்த்ததில்லப்பா...
    பார்த்தேன்னு சொல்லலையே!!!!!


    Quote Originally Posted by மலர் View Post
    பீரையும் சரி.... பாரையும் சரி மல்ரு இதுவரை பாத்ததே இல்லை...
    அப்பிடி பட்ட எங்களை போயி பாருக்குள்ள பாத்தேன்னு
    பொய் சொல்ற அமரை வன்மையாக கண்டிக்கிறேன்....
    பார்த்த பின்பு என் பார்வை குறைபாடோன்னு சந்தேகிக்கிறேன்

  12. #12
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    //நான் நலங்கெட்ட நாட்களில்
    உன்விரல் தீண்டல் கிட்டாது
    மங்கிப்போகும் என் முகம்..
    இரட்டையாக உன் முகம்..
    //
    இதையே ஒரு பெண் சொல்வதாய் எடுத்துக் கொண்டாலும்
    கருத்து குன்றாத தன்மை இக்கவிதைக்கு இருக்கிறது.மடிக்கணிணி,மனதிற்கு
    பிடித்த கன்னி என இரண்டு படிமங்களையும் ஒன்றிணைக்கும் பாங்கு
    உள்ள கவிதை.பாராட்டுக்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •