Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: குருவிகளுடன் பறக்கலானது மனது...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0

    குருவிகளுடன் பறக்கலானது மனது...

    கண்கள் குளிர்ந்தன...
    கண்ணாடியூடே தெரிந்த
    பரந்து விரிந்த இளமஞ்சள் வானம்,
    பச்சைச்செடியில் தீக்கங்குகளாய்
    அடர்சிவப்பு செம்பருத்திப்பூக்கள்.....
    செம்பருத்தியைக் கொத்தியவாறு
    சிட்டுக் குருவிக் கூட்டம் ஒன்று...

    ஏதோ வாகனம் எழுப்பிய இரைச்சலில்
    எழும்பிப் பறந்தன அச்சமுற்ற
    சிட்டுக்குருவிகள் வேலியின்றும் வேகமாய்...

    கவிதை எழுத சரியான தருணம்
    சொன்னது மனம்...

    பேப்பரும் பேனாவும் எடுத்த நிமிடம்
    கவிதைக்குச் சிக்காமல்
    தப்பிப் பறந்திருந்தன குருவிகள்...

    எல்லாவற்றையும் வளைத்துப் பிடித்து
    வார்த்தையில் அடைத்தல் சாத்தியமா?

    எழுதுவதை நிறுத்தி விட்டு
    குருவிகளுடன் பறக்கலானது மனது...

    குருவிகள் பறக்கட்டும்
    கவிதையில் சிறைப்பட வேண்டாம்...

    குருவியின் பின்னால்
    மிதந்து செல்லும் மனதே...

    நீயும் தப்ப முயற்சி செய்...
    என் கவிதையிடமிருந்து...
    Last edited by அமரன்; 17-03-2008 at 11:41 AM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    குருவிகளைச் சிறைப்படுத்தாமல்
    கவிதையே குருவிகளோடு பறக்க
    நானும் பறக்கிறேன்.

    அருமையான் கவிதை, வாழ்த்துக்கள் யவனிகா.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    குருவியின் பின்னால்
    மிதந்து செல்லும் மனதே...

    நீயும் தப்ப முயற்சி செய்...
    என் கவிதையிடமிருந்து...
    அழகான கவிதை
    எதிலும் மாட்டாமல் தப்பக் கூடிய மன்மிருந்தால் மனிதன் எப்போதோ மனிதனாகி இருந்திருப்பான்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    கட்டுக்குள் சிக்காமல் பறக்க மனதால் மட்டுமே முடியும்.. அதை கட்டுபடுத்துதல் கடினம். கவிதையால் கூட..
    நல்ல கவிதை யவனி அக்கா..

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    குருவிக்கான கவிதை
    குருவியுடனே பறந்ததுவே..!!

    சிக்காத மனமும்
    பின்னால் போனதோ??!!

    கட்டுக்குள் அடங்கா கற்பனை
    விட்டுச் சிறகடித்தனவோ??

    சூப்பர் யவனி அக்கா..!!
    காட்சிகளைக் கூட கவிதையில் சொல்லி நச் என்று ஒரு கருவோடு முடிப்பது உங்களுக்கே உரிய தனித்திறன்..!!

    அசத்துங்க அக்கா..!!
    உங்கள் தங்கையானதில் பெருமிதம் கொள்கிறேன்.!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கவிதைக்குள் கட்டுண்டு கிடக்காமல் குருவியுடன் சிறகடித்து பறந்து வா மனமே என மனதை பறக்கவிட்டு....ஏற்கனவே குருவிகளைப் பார்த்த கண்கள் கவர்ந்து வைத்த வார்த்தைகளால் கவிதை வந்து விழுந்திருக்கிறது.

    மனதைக் கட்ட யாரால் முடியும்....காற்றோடும் கூட்டு சேரும்...குருவியோடும்..பறந்து திரியும்...அலையோடும் விளையாடும்....அண்டங்களைத் தாண்டியும் சென்று வரும்...

    அழகான கவிதைக்கு வாழ்த்துகள் தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    01 Dec 2007
    Posts
    117
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    6
    Uploads
    0
    வானளந்த குருவியிறகும்
    வார்த்தையளந்த மனது
    கவிதைக்கும் தப்பிக்க
    காட்சி தப்பாமல் கண்களில்.

    வாழ்த்துக்கள் யவனிக்கா
    செந்தமிழரசி

    பெரிதினும் பெரிதுகேள்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    அன்புள்ள மன்றத்தோழி யவனிகா அவர்களுக்கு,

    வரிகள் (கவிதை) மிகவும் அருமையாக இருந்தது. உண்மையிலேயே மிகவும் அருமையான கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் கவிதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்ததிலிருந்து எதைக் கண்டாலும் இதை ஒரு கவிதையாக எழுதலாமா என்ற எண்ணம் பார்ப்பதிலெல்லாம் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் கொஞ்சம் யோசித்த பிறகே தெரிந்தது, நான் செய்து கொண்டிருந்த தவறு,

    பார்த்த அழகைக் கவிதையாக்க
    அறிவு சென்றுவிட்டது, இப்போது
    பாதி மட்டுமே ரசித்த மனதால்
    கவிதையும் கெட்டது,
    காட்சியும் போய்விட்டது.

    இந்தக் கருத்தை ஒரு நல்ல பெரிய கவிதையாக எழுத முயற்சித்துக் கொண்டிருந்தேன் ( ரொம்பநாளா). ஆனால் அதே விஷயத்தைத் தாங்கள் மிகவும் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். கவிதை எழுதுவோர் அனைவருக்குமே இந்தப் பிரச்சனை இருக்குமென்றே நிணைக்கிறேன். இதனால் அழகை மட்டும்மல்ல பல உணர்ச்சிகளையும் கவிஞர்கள் அந்த நொடியில் கவிதையாக்க முயன்று வாத்தைக்ளைத்தேடி சென்றுவிட்டு அனுபவிப்பதை இழந்துவிடுகின்றனர். ஆனால் ஒரு நிகழ்வை முழுமையாக அனுபவித்து உணர்ந்த பின்னர் தானாக உதிக்கும் கவிதைகளுக்கு இணையாக நாம் தேடிப்பிடித்து ஒட்டவைக்கும் வார்த்தைகள் இருப்பதில்லை. மிகவும் அருமையான வரிகள், நன்றி.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பேப்பரும் பேனாவும் எடுத்த நிமிடம்
    கவிதைக்குச் சிக்காமல்
    தப்பிப் பறந்திருந்தன குருவிகள்...

    எல்லாவற்றையும் வளைத்துப் பிடித்து
    வார்த்தையில் அடைத்தல் சாத்தியமா?

    எழுதுவதை நிறுத்தி விட்டு
    குருவிகளுடன் பறக்கலானது மனது...

    குருவிகள் பறக்கட்டும்
    கவிதையில் சிறைப்பட வேண்டாம்...

    குருவியின் பின்னால்
    மிதந்து செல்லும் மனதே...

    நீயும் தப்ப முயற்சி செய்...
    என் கவிதையிடமிருந்து...

    படிக்கையில் இந்த வரிகளினுடன் ஒன்றிப்போனது மனது!

    வாழ்த்துக்கள் யவனி!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    விட்டு விடுதலையாகு - அந்தச்
    சிட்டுக் குருவியைப்போல்...


    எங்கெங்கோ அறியாத் தளங்களில் மனதை அலையவிடும் கவிதை!

    நான் கனவு காண்பதாகக் கனவு காண்கிறேன் - இது சர்ரியலிசம் என்பார்கள்..

    கவிதையிலிருந்து தப்பச் சொல்லி, குருவிகளை வைத்து கவிதை பாடுவது --
    குருவிகளுடன் மனதை படிமமாக்கும் இதமான உத்தி..

    கொன்றைப்பூக்களுக்குப் படித்த தீக்கங்கு வர்ணனை இங்கே செம்பருத்திக்காய்..

    வாழ்த்துகிறேன் யவனி..
    உன் கவியுலகில் இது புதுப் பரிமாண பவனி..
    Last edited by அமரன்; 17-03-2008 at 11:45 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by rocky View Post

    பார்த்த அழகைக் கவிதையாக்க
    அறிவு சென்றுவிட்டது, இப்போது
    பாதி மட்டுமே ரசித்த மனதால்
    கவிதையும் கெட்டது,
    காட்சியும் போய்விட்டது.
    மிக மிகச் சரியாக நாடி பிடித்துவிட்டீர்கள்...ராக்கி. நன்றி.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    விட்டு விடுதலையாகு - அந்தச்
    சிட்டுக் குருவியைப்போல்...
    கொன்றைப்பூக்களுக்குப் படித்த தீக்கங்கு வர்ணனை இங்கே செம்பருத்திக்காய்..
    வாழ்த்துகிறேன் யவனி..
    உன் கவியுலகில் இது புதுப் பரிமாண பவனி..
    அண்ணா...நிஜமாகவே இந்த கொன்றைப் பூவை நீங்கள் சொல்வீர்கள் என்று, செம்பருத்திப் பூவைப் பற்றி எழுதும் போது தயங்கி ஒரு விநாடி நின்றேன். ஆனாலும் ஏனோ இந்த உவமையை விட மனம் இல்லை. சிவப்பு நிறப் பூக்களைப் பார்க்கும் போது என்னையும் அறியாமல் தீம்பிழம்பு நினைவு தான் வருகிறது.வேறென்ன எழுதினாலும் நிறைவதில்லை. கோளாறு பிடித்த மனது.

    பாரதியின் வரிகளையும் நீங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன். அதே...எனக்கு மிகவும் படித்த வரிகள்.ஆனால் கவிதைக்கு இன்ஸ்பிரேசன் அந்த வரிகள் அல்ல...

    நன்றி அண்ணா...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •