சிக்னலில் சிவப்பை தாண்டிய வாகன ஓட்டியிடம் போலீஸ் விசாரிக்கிறது...
போலீஸ்; ஏன்யா சிக்னல் கிராஸ் பண்ணே.....லைசன்ஸ் எடு...
ஓட்டுநர்: இனிமேத்தாங்க எடுக்கனும்...
போலீஸ்: அடப்பாவி லைசன்ஸ்-ஏ இல்லையா...இதுல ரெட்-ஐ வேற க்ராஸ் பண்ணியிருக்கே என்னா தைரியம் உனக்கு..?
ஓட்டுநர்: ஹி...ஹி..தண்ணியடிச்சிருக்கறதுனால சிக்னலைப் பாக்கல சார்...
போலீஸ்: தண்ணி வேற அடிச்சிருக்கியா...
ஓட்டுநர்: அதனாலத்தான் சார்.. இந்த சிக்னலுக்கு முன்னால இருக்குற சிக்னல்ல நின்னுக்கிட்டிருந்த போலீஸ்காரர் மேல வண்டியை ஏத்திட்டு வந்துட்டேன்...
போலீஸ்: என்னாது...போலீஸ் மேலேயே ஏத்திட்டு வந்துட்டியா...
ஓட்டுநர்: சார் வண்டியை திருடிட்டு வரும்போது மெதுவாவா சார் வருவாங்க..அதான் வேகமா வந்தேன்..அவருதான் குறுக்கே வந்துட்டாரு...
போலீஸ்:??????????????????
Bookmarks