Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 52

Thread: அற்புத மருத்துவம் வாங்கோ!!!

                  
   
   
  1. #37
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி கமலகண்ணன் அவர்களே..!!
    நன்றி ராஜா அவர்களே!!
    தொடர்ந்து வாருங்கள்...
    நல்ல தகவல் யார் தந்தா என்ன?
    நன்றி...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    சோயாபீன்ஸ் பற்றிய குறிப்புகள்

    சோயா பீன்ஸ்

    உடல் ஆரோக்கியங்களை நமக்கு வழங்கும் சக்தி கொண்ட உணவுப்பொருள் என்பது முக்கியமானது. நம்பமுடியாத நல்ல விஷயங்களை நமக்குக் கொடுக்கிறதா சோயா பீன்ஸ் (Soybeans)?
    என்ன இருக்கிறது?


    சோயாவில் அனைத்து வைட்டமின் "பி" வகைகளும் இருக்கின்றன. குறிப்பாக தயாமின் (Thiamin Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவை இருதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கின்றன. (இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது). மாமிச புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான்.

    சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்கிறது.

    சோயாவில் கார்போஹைட்ரேட் (Carbohydrate) அளவும் குறைவுதான். 100 கிராமில் 30 கிராம்தான்.

    சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது.

    சோயா ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட். இதில் லெசித்தினும், வைட்டமின் "ஈ" யும் சேர்ந்து இருக்கிறது.

    மினரல்கள் சோயாவில் நிறைய இருக்கின்றன.மக்னீஷயம் (magnesium) 280 மி.கி.,கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி. இருக்கிறது. இதனால் சோயா சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். தவிர, சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    சோயா மூலம் கிடைக்கும் நேரடியான பலன்கள் என்ன?

    1. உறுதியான எலும்புகள் உங்களுக்கு நிச்சயம் தொடர்ந்து நீங்கள் சோயா பால் குடிப்பதால். சோயாவில் கால்சியம் குறைவாக இருந்தாலும், சோயாவில் இருக்கிற தாவர ஹார்மோன் எலும்புகளின் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டது.

    2.மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. இது அற்புதமாக மெனோபாஸ் நிலையின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டது.

    2. இருதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் சோயா அபாரமாகச் செயல்படும். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

    4. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. தினசரி 25கி. நீங்கள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் போதும். ரிஸ்க் இருக்கிறது என்றால், 50 கி. எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ராஸ்டேட் கான்ஸர் உருவாக்குகிற என்ஸைமைத் தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை கான்ஸர் வராமல் தடுக்கும்.

    5. சோயாவின் உணவுப்பொருள் தகுதி மற்றவற்றைவிட அதிகம். இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் ''ஈ'' லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன.

    சோயாவில் ஐசோபிளேவோன்கள் இருக்கிறது என்கிறீர்களே? அப்படி என்றால் என்ன?

    இவற்றை தாவர ஹார்மோன்கள் என்று சொல்கிறார்கள். இவை நம் உடல் ஹார்மோன் போலவே செயல்படும் திறன் கொண்டவை. சோயாவில் இருக்கும் இந்த ஐசோபிளேவோன்கள் பெண்களின் முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. பருவ வயதில் அதிக சோயாவை எடுத்துக்கொள்வதால் பிற்காலத்தில் வரும் மார்புப் புற்றுநோய்கள் தடுக்கப்படும் என்று உறுதி சொல்லப்படுகிறது.

    சோயா புரோட்டின் கடைகளில் கிடைக்கிறது. வாங்கும்போது இதில் கவனிக்க வேண்டியது என்ன?


    கடைகளில் சோயா புரோட்டின் இரண்டு விதங்களில் கிடைக்கும்.

    1. சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட்: இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கும். இது சுலபத்தில் கரையாது. நிறைய முயற்சி செய்து கரைக்க வேண்டி இருக்கும். சுலபத்தில் ஜீரணமாகக் கூடியது. குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு, பால் கொடுக்கும் பெண்களுக்கு, வயதானவர்களுக்கு இந்த வகை நிறைய உதவும். இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. முதலில் சுவை சிலருக்குப் பிடிக்காத மாதிரி இருக்கும். இரண்டாவது சிலருக்கு காற்று வெளியேறிக்கொண்டே இருக்கும். மூன்றாவது இதில் ஐசோபிளேவினேன்கள் அளவு குறைவாக இருக்கும். இதனால் மெனோபாஸ் பிரச்னைக்காக சாப்பிடும் பெண்களுக்கு இந்த சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட் உதவாது.

    2. சோயா புரோட்டின் ஐசோலேட்: இதில் புரோட்டின் அளவு 90 சதவிகிதம் இருக்கிறது. கூடவே அத்தனை அடிப்படை அமினோ அமிலங்களும் உள்ளன.

    சோயாவில் எந்தக் கெடுதலும் இல்லையா?

    இருக்கிறது. வயிற்றில் ஜீரணத்திற்கு உதவும் டிரிப்சின் என்கிற என்ஸைமின் வேலையைத் தடுப்பதில் சோயா ஈடுபடுகிறது. ஆக இதைத் தடுக்க சோயாவை நல்ல சூட்டில் வேக வைக்கவேண்டும். தவிர உடலில் இரும்புச்சத்து கிரகிப்பை சோயா தடுக்கிறது. இதனால் இரத்த சோகை உருவாகலாம். இதைத் தடுக்க வைட்டமின் "சி" நிறைந்த பழங்களைச் சாப்பிடுங்கள்.

    சோயாவை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

    சோயா பல விதங்களில் கிடைக்கிறது. உங்கள் விருப்பத்திற்குப் பயன்படுத்தலாம். சிலவற்றை கீழே கவனியுங்கள்.


    1. சோயாபீன்: இது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் பெரிய மணிகளின் அளவில் கிடைக்கும். உலர்ந்த சோயா பீன்களை காற்றில் புகாத டப்பாக்களில் வையுங்கள். இரண்டு கப் சோயா பீன்களைத் தயாரிக்க, ஆறு கப் தண்*ரில் இரவு முழுக்க ஊற வையுங்கள். பின் காலையில் வடித்து, கழுவி, ப்ரஷர் குக்கரில் மறுபடியும் 6 கப் தண்*ர் ஊற்றி 40 நிமிடத்திற்கு குறைந்த சூட்டில் வேக வையுங்கள். இதற்குப் பின்பே உப்பு தேவை என்றால் சேர்க்கவும். முன்பே சேர்த்தால் சோயாபீன்கள் மென்மையாவதை உப்பு தடுக்கும்.

    2. சோயா பால்: தினசரி பாலைத் தவிர்த்துவிட்டு 200 மி.லி. சோயா பாலுக்கு மாறிவிடலாம். நீங்களே தயாரிப்பதில் அந்த வாசனை உங்களை குடிக்கவிடாமல் தடுக்கும். கடைகளில் கிடைக்கிற சோயா பால் நல்ல சாய்ஸ்.

    3. டெக்ஸ்டர்ட் சோயா: இதுவும் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்கு மாமிசத் துண்டுகள் போலவே இருக்கும். உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வழக்கமான கறிகளுக்குப் பதில் இந்த வகை சோயாவை பயன்படுத்தலாம். இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கிறது. மிகக் குறைந்த கொழுப்பு, நிறைய நார்ச்சத்து மற்றும் ஐசோபிளேவினோன்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு பிழிந்து ஈரப்படுத்திக்கொள்ளலாம்.

    4. டோபு: பார்ப்பதற்கு வெண்ணெய் மாதிரி இருக்கும். இது சோயாவை, ஜிப்ஸம் என்கிற கால்சியம் கோயாகுலன்ட் சேர்த்து கர்டிலிங் செய்து தயாரிக்கப்படுகிறது. புரோட்டின், வைட்டமின் "பி" நிறைந்தது. அரை கப்பில் 10.1 கி. புரோட்டின் இருக்கும். இது சாதாரண பாலில் 5.1 தான் இருக்கும். சோயா பால் மாதிரி இல்லாமல் இதில் கால்சியம் சேர்ந்து இருக்கும்.

    குளிர்பதனப் பெட்டியில் ஒரு பௌல் தண்*ரில் போட்டு வைத்துவிடலாம். ஒரு வாரம் கெடாமல் இருக்கும்.

    5. சோயா எண்ணெய்: மற்ற எண்ணெய்களைப் போல இல்லாமல் சோயா எண்ணெயில் எந்த ஒரு சிறு கெடுதலும் இல்லை. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பது இரத்தக்குழாய்களுக்கும், இருதயத்திற்கும் நன்மை செய்யும்.

    6. சோயா சாஸ்: சோயாவை ஃபெர்மென்ட் செய்து உருவாக்கப்படும் இந்த சாஸ் பழுப்பு நிறத்தில் இருக்கும். மற்ற சாஸ் போலவே இதைப் பயன்படுத்தலாம். இதன் ஒரு குறை, இதில் ஐசோபிளேவினோன்கள் குறைவான அளவிலேயே இருக்கும். 100 கிராம் சாஸல் 1.6 மி.கிதான் இருக்கும். கூடவே உப்பு அதிகம் கலந்திருக்கும். கவனம் தேவை.

    சோயா வகை - ஐசோபிளேவினோன்
    உணவு அளவு - (100 கிராமுக்கு)

    1. சோயா பீன் - 200 மி.கி.

    2. சோயா பால் - 35 மி.கி.

    3. டெக்ஸ்டர்ட் - சோயா 92.7 மி.கி.

    4. சோயா சாஸ் - 1.6 மி.கி.


    நன்றி :தமிழ் வெப்சைட் (கூடல்)
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #39
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    சிங்கையிலிருந்து தஞ்சை வந்தும் மிக அற்புதமான தகவல்களை அள்ளித்தரும் நீங்கள் மிகவும் அற்புதம்தான் நீங்கள்...

    உங்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சுகமாக உங்களின் வாழ்வை நீங்கள் தொடங்க இருக்கும் அற்புதமான வாழ்விற்கு எனது வாழ்த்துக்கள் அனு...
    Last edited by க.கமலக்கண்ணன்; 09-03-2008 at 09:53 AM.
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  4. #40
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி கமலகண்ணன் அவர்களே!!
    என் நன்றி உங்களுக்கு...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #41
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    ஞ்சியின்

    ன்றியமையா பயனை

    னிமையாக எடுத்துரைத்த அனு

    ன்றும் வாந்தி வருவது போல

    ருந்தால் சிறிது எடுத்து வாயில் போட்டுக் கொண்டால்

    னியும் அந்த எண்ணம் வராது. நன்றி அனு
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  6. #42
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி கமலகண்ணன் அவர்களே!!
    தொடர்ந்து வாருங்கள்
    மருந்துகளை கண்டிபாக பார்த்து பயன்படுத்துங்கள்
    சில மனிதர்கள் கண்டதே உண்டு அதற்கு மருந்து தேடுவார்கள்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #43
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    சிறுநீரகத்தில் கற்கள்


    வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள்.

    உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #44
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    Post நிறமும், சத்தும்

    நிறமும், சத்தும் --------------------

    காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. சத்துக்கள் மற்றும் உட்பொருட்கள் வேறுபடும். ஒன்றைப் போல மற்றொன்று நிச்சயம் இருக்காது. இனி சில நிறங்களை அடிப்படையாக வைத்து எதை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று காண்போம்.

    வெள்ளைக் காளான், உருளைக்கிழங்கு, வெங்காயத்தைக் காட்டிலும் காலி பிளவரை அதிகமாக சாப்பிடுங்கள்.

    பச்சை, பச்சை நிறக் காய்கறிகளில் பொதுவாக நிறைய சத்து காணப்படுவது உண்மை தான். அதிலும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்ட கீரைகள், சிவப்பு நிற இலைகளை உடைய கீரைகள், பசலைக் கீரை ஆகியவற்றை தாரளமாக சாப்பிடுங்கள். பச்சை நிற காலி பிளவர், முளை விட்ட பயிர்களை நிறைய சாப்பிடலாம்.

    மஞ்சள்-ஆரெஞ்சு, ஆரஞ்சு, திராட்சை, இனிப்பு உருளைக்கிழங்கு, காரட், வாழைப் பழங்கள் ஆகியவற்றை வேண்டுகிற அளவுக்கு சாப்பிடலாம்.

    சிவப்பு, தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பதைக் காட்டிலும் தக்காளி, சிவப்பு நிற மிளகு, ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழங்களை தாரளமாக சாப்பிட்டு வரவும்.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  9. #45
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    Smile அன்னாசிபழம்-மருத்துவ பயன்!!

    அன்னாசிபழம்-மருத்துவ குணங்கள்
    பழங்களை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆயுள் அதிகம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அன்னாசிப்பழம் மிகுந்த சுவையான, மணமான, இனிமையான பழமாகும். மஞ்சள் நிறத்தில் வெளிப்பக்கம் சொரசொரப்பாக இருந்தாலும் தோலை நீக்கியப் பின் பார்ப்பதற்கும். உண்பதற்கும் இனிமையான பழச்சதையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அன்னாசி மிகுந்த சத்துடைய ஒரு பழமாகும். இப்பழம் அனைவர்க்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை ஈந்து உடலை வளர்க்கிறது. ஆரோக்கியத்தைத் தருகிறது. சில நோய்களைக் குணமாக்குகிறது.

    அன்னாசிப்பழ சதையில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.

    அன்னாசிப்பழம் குடல் செயல்களை ஊக்குவிக்கும். புழுக்கொல்லி, விஷம் நீக்கியாகச் செயல்படும். ஜீரணத்தைக்கூட்டும். சிறுநீரைப் பெருக்கும். பசியைத் தூண்டும். குளிர்ச்சியை ஊட்டும். மேலும் மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும்.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  10. #46
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    Post

    புண்பட்ட மனதை புகை ஆற்றுகிறதா?
    ---------------------------------------------


    சிகரெட் குடிப்பவர்களிடம் ஏன் புகை பிடிக்கிறீர்கள் என்று கேட்டால் புண்பட்ட மனசை புகை விட்டு ஆற்றுகிறேன் என்பார்கள். இது உண்மையா? இந்த கேள்வியை ஆராய்ச்சிப் பொருள் ஆக்கி மிச்சிகன் பல்கலைக் கழக விஞ்ஞானி கள் ஆராய்ந்தனர். புகை பிடிப்பவர்களிடமும் பரிசோதனை நடத்தினர். புகை பிடிப்பதற்கு முன்பு அவர்கள் மன நிலை என்ன? புகை பிடித்தபிறகு அவர் களின் மன நிலை எப்படி இருக்கிறது? என்று ஆராய்ந்தனர். இதில் அவர்கள் கண்டறிந்த உண்மை என்ன தெரியுமா? புகைப் பிடிப்பவர்கள் மூளையில் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் அவர்கள் திருப்தி அடைகிறார்கள். மூளை ஸ்கேன் மூலம் இதை அவர்கள் கண்டறிந்தனர். இதன் மூலம் மேலும் ஆராய்ச்சிக்கு வழி பிறந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இனி புகை பிடிப்பவர்கள் மற்றும் புகை பிடிக்காதவர்கள் பற்றி உடல் ரீதியான மாற்றங் களை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இதன் மூலம் புகையால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றி துல்லியமான விளக்கங்களை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  11. #47
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    தக்காளியின் மருத்து குணங்கள்

    இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம். பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

    காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.

    மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.

    முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.

    இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் "சிட்ரிக்"அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.

    மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

    சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வாடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.

    சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.

    தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

    தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

    கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.

    தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.

    மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

    இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன.

    இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.

    தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

    கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

    குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.

    அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.
    Last edited by அனுராகவன்; 26-04-2008 at 06:15 AM.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  12. #48
    இனியவர் பண்பட்டவர் SathyaThirunavukkarasu's Avatar
    Join Date
    15 Mar 2008
    Location
    Abudhabi
    Posts
    774
    Post Thanks / Like
    iCash Credits
    13,033
    Downloads
    81
    Uploads
    1
    அனு நீங்க ஒரு நடமாடும் மறுத்துவ குறிப்போ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •