Results 1 to 10 of 10

Thread: ஈரவெளிக் காற்று..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    ஈரவெளிக் காற்று..!

    ஈரவெளிக் காற்று..!



    குறுக்கு பாதையில்
    சூழல் கிரகித்து
    நடைபோடுகிறேன்..!

    மார்பளவு சுவற்றில்
    வண்டி பிடித்து
    ஏறி நின்று..

    அக்கா கை பிடித்து
    அனிச்சையாய்
    அநாயாசமாய்
    நடைபழகும் மழலை..!


    வேறு திசையில்
    பெரியவர் நின்றிருக்க..
    பிஞ்சு விழும் பதைப்பு
    நெஞ்சில் எழுந்து
    என்னை ஆட்டுவிக்கிறது..!


    குறுகுறு பார்வையில்
    எனைக் கண்டு
    குறும்பாய் சிரிக்கிறது
    இளம் தளிர்கள்..!


    வரும் துயர் எண்ணி
    அஞ்சி அழைத்துச்
    சொல்லி என் வழி
    செல்கிறேன்..!


    ஏங்கும் விழிகளோடு
    சோகமாய் பார்க்கும்
    ஈரவிழிகள்..!


    நிம்மதி பெருமூச்சு
    நெஞ்சில் வந்தாலும்
    எங்கோ ஓர் ஓரத்தில்
    மழலையின் கண்கள்
    கேட்ட கேள்விக்கு
    விடை சொல்ல
    இயலாமல் இன்னும்
    நான்...!!
    Last edited by பூமகள்; 12-02-2008 at 07:56 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    இதற்கு விமர்சனம் சொல்ல இயலாமல் இன்னும் நான்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அச்சம் அறியா பிஞ்சு நெஞ்சம் அதை அப்படியே விட்டால் விளையும் விபரீதம்.அதை அகற்றி ஆனந்த படுகையில் அனைவரும் கவனிப்பதில்லை என்பதைவிட கண்டுக்கொள்வதில்லை.பிஞ்சுகளின் நெஞ்ச நிலையை...! அதை உற்று நோக்கி உரைத்த உன்கவிக்கு பாராட்டுக்கள்..பூ..!!
    குழந்தைகளை அதிகம் கவனிப்பீர்கள் போலிருக்கு.. அவர்களின் உணர்வுகளை தொடர்ந்து அழகாக கவிதையாக்குகிறீர்கள்..தொடருங்கள்...!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    மழலையின் கண்கள் கேள்வி தான் கேக்கும்...ஏன் கேக்காது...நல்ல வேளை பரதேவத...போட்டுக் குடுத்துட்டு போன...இதில மனசு வேதனப் பட்டு கவித வேற வடிச்சிருக்க....

    எங்க வீட்டில ஒண்ணு இருக்கு...ஸ்பைடர் மேன் ஜன்னல் வழியா குதிப்பான்...பால்கனி வழியா குதிப்பான்...வெப் போடுவான்னு கிட்டு...கேட்டா திக்குன்னு இருக்கும்...இனி ஸ்பைடர் மேன் பாத்தா...நானே ஜன்னல் வழியா உன்ன தூக்கிப் போடுவேன்..அப்படின்னு பயமுறுத்தி வெச்சிருக்கேன்.

    அடிக்கும் போதோ திட்டும் போதோ அந்த கண்களை பார்க்கவே பதைப்பாய்த் தான் இருக்கும். வரும் ஆபத்தைத் தடுக்கதானே...அதனால் கவலைப் படாதே பூ....யு ஹாவ் டன் அ குட் ஜாப்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பயமறியா பிஞ்சுகள்....கவனிப்பு நிச்சயம் தேவைதான்.
    அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதங்களை எத்தனை நாம் கேள்வி பட்டிருக்கிறோம்...அப்படி ஒன்று ஆகி விடாமல் தடுப்பதற்கு நிச்சயம் மென்மையான மனம் வேண்டும் அது என் தங்கை பூவிடம் உள்ளது
    (பூவிடம் மென்மையில்லாமலிருக்குமா)

    அக்க சொல்லியிருக்கறதப் பாரும்மா....பிஞ்சுகளுக்கென்ன...கேள்வி மேல கேள்வி கேக்கத்தான் செய்யும்..நாமதான் பதைத்துப் போய்விடுகிறோம்.

    நல்ல செயல் செய்யச் சொல்லி அறிவுறுத்தும் அழகான கவிதை.வாழ்த்துகள் பூ.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஆர்.ஈஸ்வரன் View Post
    இதற்கு விமர்சனம் சொல்ல இயலாமல் இன்னும் நான்.
    புரிந்ததாலா?
    புரியாததாலா?
    புரியாமல் நான்...!

    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அச்சம் அறியா பிஞ்சு நெஞ்சம் அதை அப்படியே விட்டால் விளையும் விபரீதம். குழந்தைகளை அதிகம் கவனிப்பீர்கள் போலிருக்கு.. அவர்களின் உணர்வுகளை தொடர்ந்து அழகாக கவிதையாக்குகிறீர்கள்..தொடருங்கள்...!!
    உண்மை தான் சுகந்த்ப்ரீதன். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடராக நல்லதைச் சொன்னாலும் விளங்கா மனநிலையில் இது இயற்கை தானே..!

    மிக்க நன்றிகள் சுகந்த்ப்ரீதன்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post
    மழலையின் கண்கள் கேள்வி தான் கேக்கும்...ஏன் கேக்காது...நல்ல வேளை பரதேவத...போட்டுக் குடுத்துட்டு போன...இதில மனசு வேதனப் பட்டு கவித வேற வடிச்சிருக்க...
    ஆமா அக்கா.. சுவையான சம்பவங்களல்ல போடலாம்னு இருந்தேன்.. அப்புறம் எல்லாரும் வந்து.. ஒன்னுமே இல்லாத மேட்டருக்கு இவ்வளோ பில்டப்பான்னு ஒத்த வார்த்தையில என்னை கேட்டு அழ வைச்சிட்டு போயிடுவாங்க..!
    அதனால கவிதையில் சின்னதா(?) சொல்லிடலாம்னு எழுதினேன்..!

    எங்க வீட்டில ஒண்ணு இருக்கு...ஸ்பைடர் மேன் ஜன்னல் வழியா குதிப்பான்...பால்கனி வழியா குதிப்பான்...வெப் போடுவான்னு கிட்டு...கேட்டா திக்குன்னு இருக்கும்...
    இதைப் போயி இன்னொரு ஸ்பைடர் கேர்ள் கிட்ட சொல்லிட்டு இருக்கீங்களே...
    நானும் அம்ரூ குட்டி போலத் தான் செய்துட்டு அழிச்சாட்டியம் பண்ணுவேன்..!!
    அதுக்காக, முதுகுல ரெண்டு வச்சிறாதீங்க அக்கா..!

    அடிக்கும் போதோ திட்டும் போதோ அந்த கண்களை பார்க்கவே பதைப்பாய்த் தான் இருக்கும். வரும் ஆபத்தைத் தடுக்கதானே...அதனால் கவலைப் படாதே பூ....யு ஹாவ் டன் அ குட் ஜாப்.
    அப்பாடா.. இப்பதான் அக்கா நிம்மதி. அந்த சின்ன குழந்தைகளின் சந்தோசத்தை கெடுத்திட்டேனோன்னு ஒரு சின்ன உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சி..! நல்லதுக்கு தானே போட்டு கொடுத்தேன்னு என்னை நானே சமாதானம் செய்துட்டேன். இப்போ உங்க பதில் பார்த்து மனம் அமைதியாகிவிட்டது.

    பின்னூட்டம் போட்டு என்னை மகிழ்வித்தமைக்கு நன்றிகள் அக்கா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பயமறியா பிஞ்சுகள்....கவனிப்பு நிச்சயம் தேவைதான். நல்ல செயல் செய்யச் சொல்லி அறிவுறுத்தும் அழகான கவிதை.வாழ்த்துகள் பூ.
    உண்மை தான் அண்ணா.
    கவனிப்பும் கவன ஈர்ப்பும் என்றுமே அவசியம்.
    மிக்க நன்றிகள் சிவா அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    புது அனுபவம் ஒருவர் தேடுவதும்
    ஆபத்து அறிந்து மற்றவர் தடுப்பதும்

    தடுக்கப்பட்டவர் ஏக்கமும்
    தடுத்தவர் இருநிலைக் குழப்பமும்...


    பல வடிவங்களில் பல பருவங்களும் தொடரும் கதை..

    முன்னவர், பின்னவர் இருநிலைகளும் ஒருவருக்கே
    வெவ்வேறு சூழல்களில் வாய்ப்பதும் அறிந்த கதை!

    சூழல் உள்வாங்கி நடக்கும் பாமகளுக்கு அண்ணனின் வாழ்த்து!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    தடுக்கப்பட்டவர் ஏக்கமும்
    தடுத்தவர் இருநிலைக் குழப்பமும்...

    பல வடிவங்களில் பல பருவங்களும் தொடரும் கதை..

    முன்னவர், பின்னவர் இருநிலைகளும் ஒருவருக்கே
    வெவ்வேறு சூழல்களில் வாய்ப்பதும் அறிந்த கதை!
    இருதலைக் கொல்லியாக
    ஏக்கமும் தவிர்ப்பும்
    தவிர்க்காமல் பலசமயம்
    மனம் படும் பாடு..!


    ----------------

    அப்பப்பா..!
    எத்தனை பெரிய விசயத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விட்டீர்கள் பெரியண்ணா..!

    அசத்தல்.. பின்னூட்டம்.. நிரம்பவே என்னை யோசிக்க வைத்தது.

    மிகுந்த நன்றிகள் பெரியண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •