Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 16 of 16

Thread: கடைசியான முதல்

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    முதலும் முடிவும்
    மூலவனின் கையில்
    முடிவைத் தேடி
    முதலை இழந்தோம்
    ஆக்கிய முதலை
    ஆணவம் அழிக்க
    மானம் இழந்தனிலை
    மனிதப்பிறப்பினுக்கு
    படிகள் கடந்து
    பகலவன் முகத்தில்
    பளிச்சென்று நின்றால்
    இழந்த முதலும் ஈடுகட்டி
    இல்லம் வரும்
    மூலவனும் முகம் பார்த்து
    முக்தியெனும் முதலை
    மும்முறை ஈவான்
    கேடு கெட்ட இப்பிறப்பின்
    பாடுகள் பலவும்
    பாவம் என்பது
    பகல்போல் தெரியும்
    கோடிகண்ட கோமானின்
    கோதறு அமுதத்தால்
    முதலும் வட்டியும்
    முழுதாய்ப் பெறலாம்

    அகத்தில் கட்டி முடிக்க வேண்டிய பிரம்மாண்ட கட்டங்களை புறத்தில் கட்டி அழகு பார்க்கிறோம். ஆனால் நம்முள்ளே மூலம் இருக்கும் பாதைக்கு படிகண்டால் முக்தி நிலை என்ற ஒன்றை உணரலாம். படியினை வர்ணித்தவுடன் எழுந்த கவிதை வரிகள். உங்களுடைய கருத்துக்களோ தொடர்புடையதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கூர்ந்து நோக்கவும். இதில் ஒரு செய்தி இருக்கிறது.
    Last edited by சாலைஜெயராமன்; 12-02-2008 at 03:45 PM.

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post

    சூரியனைச் சூடிக்கொள்ள

    நட்டு வைத்த ஏணிபோல
    அடுக்கு மாடிக் கட்டம்.

    முகிலைக் கிழித்து
    வானம் தொட்டு
    விண்மீன் பறிக்க
    அமைத்த கட்டிடமுற்றம்...!

    முதற்றளத்தின் பிரவேசிப்பில்
    இறுமாப்பின் பிரமாண்டம்
    பிரமிப்பாக
    நரம்பெல்லாம் பரவுகிறது..
    தரைத்தளம் தாண்டி
    கண் மேல பார்க்க
    உடல் சிலிர்த்து
    சில்லிடுகிறது..!

    படிப்படியாய்
    மேல் நோக்கிய தளங்களில்
    சுவடுகளைப் பதிக்கிறேன்.
    பதம் பட்டு
    சுற்றம் தொட்டு
    கண் பரவிச் செல்கிறேன்..!

    படிகளின் முடிவில்
    விரிந்த பரந்த வெளியில்
    ஆழ மூச்சை உள்ளிழுத்து
    ஆசுவாசப் படுத்துகிறேன்.
    இறுதி தளம்
    சடுதியில் வர
    தகுந்த இடம்
    வந்ததென நுரையீரல்
    காற்றை விடுதலையாக்குறேன்..!

    இப்போது...
    முதலாய் இருந்தது
    நசுங்கிய நிலையில்
    தளங்களை தாங்கியபடி
    இறுதியாக தோன்றுகிறது..
    மெல்ல கீழ் பார்க்கிறேன்..!
    வந்த சுவடுகள் துடைத்திருக்க
    தரைத்தளம் தோன்றுகிறது
    சிறுபுள்ளியின் கால் பாகமாய்...!

    --------------
    அசர வைத்த கவிதை.
    பலதையும் சிந்திக்க வைத்த கவிதை. அது தான் உங்களின் கவிதைகளின் சிறப்பம்சம்.
    வாழ்த்துகள் தொடருங்கள்.

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    புரியும் வரை எதுவும் கடினம்
    வெல்லும் வரை எதுவும் பெரிது
    உயரும்வரை எதுவும் மேலே..

    தன்னிலை மாறும்போது தான் சார்ந்த சூழல் மதிப்பீடும் மாறும்..

    இதுவும் ஒரு வகை '' தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி''!!!

    வாழ்த்துகள் அமரா!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எனது ஆக்கத்துக்கு ஊட்டமிட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. ஜெயராமன் அய்யாவின் கொலுசுக்கவி பொருத்தமாக அமைந்து ஜொலிக்கிறது.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •