முதலும் முடிவும்
மூலவனின் கையில்
முடிவைத் தேடி
முதலை இழந்தோம்
ஆக்கிய முதலை
ஆணவம் அழிக்க
மானம் இழந்தனிலை
மனிதப்பிறப்பினுக்கு
படிகள் கடந்து
பகலவன் முகத்தில்
பளிச்சென்று நின்றால்
இழந்த முதலும் ஈடுகட்டி
இல்லம் வரும்
மூலவனும் முகம் பார்த்து
முக்தியெனும் முதலை
மும்முறை ஈவான்
கேடு கெட்ட இப்பிறப்பின்
பாடுகள் பலவும்
பாவம் என்பது
பகல்போல் தெரியும்
கோடிகண்ட கோமானின்
கோதறு அமுதத்தால்
முதலும் வட்டியும்
முழுதாய்ப் பெறலாம்
அகத்தில் கட்டி முடிக்க வேண்டிய பிரம்மாண்ட கட்டங்களை புறத்தில் கட்டி அழகு பார்க்கிறோம். ஆனால் நம்முள்ளே மூலம் இருக்கும் பாதைக்கு படிகண்டால் முக்தி நிலை என்ற ஒன்றை உணரலாம். படியினை வர்ணித்தவுடன் எழுந்த கவிதை வரிகள். உங்களுடைய கருத்துக்களோ தொடர்புடையதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கூர்ந்து நோக்கவும். இதில் ஒரு செய்தி இருக்கிறது.
Bookmarks