நொறுங்குகையில்
ஒரு நெருக்கம்!!!

கொதித்தெழுகையில்
ஒரு பிணக்கம்!!!

நெருங்குகையில்
ஒரு வெட்கம்!!!

அணைக்கையில்
ஒரு மணம்!!!

அருகில் இருக்கையில்
ஒரு சுகம்!!!

காதல் மனதினில் ஓட
இல்லாளைக் கண்டு
கைபிடித்து
நீ என்னவள்
என்று சொல்வதில்
இருக்கும் பிரியம்
லோகத்தில்
வேறு உண்டோ!!!