தொலைப்பேசி அழைத்தது;
ஓடினேன் எடுக்க மறுநொடியிலே
தொலைப்பேசி அணைந்தது தானாக;
செல்பேசியே எடுத்து அழைத்தேன் நான்
அங்கோ என் சுற்றத்தர்கள் கூடியிருக்க
என் மனதில் பலநாட்கள் கழித்து அழைப்பது
அதில் எல்லையில்லா ஆனந்தம் தான்;
தொ(ல்)லைகளில் பேசுவதால் தொ(ல்)லைபேசியா..
ஹலோ!! என்று சொன்னார்கள் அதில் எனக்கு சந்தோசம்
பணம் எப்போ!! என்று கேட்டார்கள் வந்தது ஒரு தோசம்
வெளிநாடு வந்தோம் பிழைப்பிற்காக
உள்நாட்டில் பலர் ஏங்குவது பணத்திற்காக..
சொந்தங்கள் அங்கு கூடியிருக்க
சோகங்கள் மட்டும் என்னுடன் இருக்க
பணத்திற்காக தேடும் சுற்றங்கள் இருக்கும் வரை
பிழைப்பிற்காக வாடும் நம்மவர்கள் நிலைமாறாது.
ஒரேவொரு அழைப்பால் என்மனம் கலங்கிடும்
ஒரேசிந்தனையால் நம்வாழ்க்கை ஓடும்...!!

-அனு