நிறைய பேச வைக்கும் கவிதை. வாசிப்பவன் மனநிலையே கவிதையை ஆதரிக்கிறது. எதிர்க்கிறது. எனது மனநிலையில் இக்கவிதையை எதிர்க்கிறேன். சக நண்பர்கள் மனநிலையில் இதை ஆதரிக்கிறேன்..
அடிக்கடி உன்னைப் பார்த்து, குலாவி, அளவலாவிட்டு இப்போ முடியலடா.. எங்கே பார்த்தாலும் நீ இருப்பது போல இருக்கு.. ஏன் கூப்பிடல்ல. பரிதவிச்சுப் போயிட்டேன் தெரியுமா. தளுதளுத்த வார்த்தைகள் காது நிரப்பி ததும்பும்போது கூடவே நானும் தளுதளுத்து.. வந்து வருடங்கள் பல கடந்ததை விட்டு விலகி... நேற்று முன்தினம்தானே பேசினோம் என்பதை மறந்து..
சுக நயங்கள் முடித்து, கொஞ்சிகுலாவிய பின்பு காசு அனுப்பவா என்றால், தேவைல்லடா.. போன வாரம் நீ அனுப்பியது இருக்குடா.. ஒரு மாதத்துக்கு போதும். நீ நல்லா சாப்பிட்டு, உடுத்தி இருடா.. அடிக்கடி பேசுடா..வெச்சுடறேன்..
ஒலித்து ஒதும் சத்தம் காது மோதுகையில் தோன்றும் உணர்வு இருக்கே. சொல்லில் அடங்காது. சொல்லி மாளாது..
சிவா சொன்னது போல் படபடக்கும் நெஞ்சுடன் நானும் சொல்வேன். உன் இலக்கத்தை போனில் பார்த்தால் நெஞ்சு பதை பதைக்குது.. நானே அழைக்கிறேனே.. நீ எடுக்க வேண்டாம்..
"போடா..நீ போன் எடுக்காட்டா என் ஆவி துடிதுடிக்குது..அதானே மிஸ்டு கால் கொடுக்காது நானே கூப்டுறேன்.." ஊமையாக்கும் பதங்கள் பாசத்தின் பதம் சொல்லும்..
அசைபோட வைத்த கவிதைக்கு நன்றியும் பாராட்டும்..
Bookmarks