எழுத்து உங்களுக்கு வாய்த்த வரம் என்பதை
செண்பகமரத்திலிருந்து தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள்..
இயல்பான நிகழ்வுகளைச் சங்கிலியாக்கி
இறுதியில் ஒரு ''டாலர்'' கோர்த்து
அழகாய் அணிவிக்க உங்களால் இலகுவாய் முடிகிறது..
அகலிகைக்காக எழுதப்பட்டதுண்டு...
அகால மரணமுற்ற முட்டைகளுக்காக இது முதல் முறை..
கவிமனம் மட்டுமே இவ்வகை விமோசனம் தேடிச் சிவக்கும்..
வாழ்த்துகள் யவனிகா!
Bookmarks