இந்திய அணி சாதனை:
நேற்று ஆஸ்திரேலியாவில் துவங்கிய முதல் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனைகளை படைத்துள்ளது.
முதலில் இந்திய அணி பேட் செய்தது. 1991-1992 ல் சஞ்சே மஞ்ரேகர்-கிரன் மோரே ஜோடி 7 விக்கெட்டுக்கு அதிகப்டசமாக 17 ரன்கள் மட்டுமே பிரிஸ்பேனில் எடுத்திருந்தது.இன்றை போட்டியில் தோனி -பதான் இருவரும் 7 வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து பிரிஸ்பேனில் இந்தியாவின் முந்தைய சாதனையை முறியடித்து , புதிய சாதனை படைத்துள்ளனர்.
இந்திய அணி , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இரு முறை 8 வது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 40 ரன்களே எடுத்துள்ளது.முதலாவதாக 1989-1990 ல் பெங்களுருவில் நடந்த போட்டியில் சேட்டன் சர்மா -மனோஜ் பிரபாகர் ஜோடி(40) , 2002-2003 ல் சென்சூரியன் பார்க்கில் நடந்த போட்டியில் கும்ளே-ஹர்பஜன் சிங் ஜோடி(40 ) எடுத்துள்ளது.நேற்றைய போட்டியில் தோனி-ஹர்பஜன் ஜோடி 8 வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்து இந்தியாவின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்.
.
Bookmarks