Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 40

Thread: அடங்கா மிருகம்!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    அடங்கா மிருகம்!!

    எப்போது வேண்டுமானாலும்
    பாய்ந்து குதறும் மிருகத்தை
    பல்லணை போட்டு
    உதடு கதவுகளுக்குள்
    ஒளித்து வைத்திருக்கிறேன்!

    இருந்தும் இற்றுப்போன
    சங்கிலியை அற்றுக்கொண்டு பாய
    சின்ன உசுப்பலை
    தேடி அலைகிறது!

    நட்பென்றும்,உறவென்றும்
    பார்ப்பதேயில்லை அந்த
    பாழும் மிருகம்!

    குதறிவிட்டு ரத்தம் சுவைத்து
    குரூரமாய் கூண்டுக்குள்
    அடங்கிவிடுகிறது..மீண்டும்
    வெட்கமின்றி வெளிவந்து
    வேதனையின் வீச்சத்தை
    முகர்ந்து ருசிக்கிறது!

    அற்றுப்போகாத சங்கிலியாய்
    அமைதி வேண்டி யோகித்தாலும்
    அடங்காமல் ஆடும்
    அந்த மிருகம்...அதன் ஆட்டத்தால்
    என்னையும் அழித்துத்தான்
    அடங்குமோ.......
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    மிருகம் உறங்கிப் போகும் நாளும் வரும்...ஆனால் முழித்து இருக்கும் வரை தான் நமக்குப் பாதுகாப்பு.
    சில நேரம் மிருகமாய் இருத்தல் நலமே...
    சிங்கம் புலிகளுக்களுக்கிடையே வாழ எத்தனிக்கும் போது நரியாகவேனும் இருத்தல் நலமே...
    நல்ல கவிதை அண்ணா...


    இரட்டை நாக்குப் பாம்பு
    எப்போது விழிக்கும் தெரியாது
    வழு வழு தோல்
    வனப்பான அழகு
    நேர்த்தியான உடல்
    மயங்கித் தொட
    கையை நீட்டும் நேரம்....
    தீத் தீண்டல்...

    ஒவ்வோரு வார்த்தையும்
    உயிர் கருக்கும் விசம்...
    விசம் என்று தெரிந்தும்
    தொட்டது என் தவறா...

    இல்லை,

    பாம்பின் குணம் விசம்.
    எனது குணம் இது தான்
    அவரவர்க்கு
    அவரவர் குணம்....

    படைப்பின் நியதி
    யாரைக் குறைப்பட...
    Last edited by யவனிகா; 03-02-2008 at 12:26 PM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    திரும்பத்திரும்ப படிக்கத்தூண்டும் பின்னூட்டம்.அருமை தங்கையே...உங்கள் கோணமும் சிந்திக்க வேண்டியதே.....சில நேரங்களில் சாட்டைகள் சுழல வேண்டும்.ஆனால் யார், என்ன, எப்போது, எங்கு என்று வரைமுறையின்றி சுழன்றால் வலி இருபக்கமும்தான்.

    மிக்க நன்றிம்மா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நாக்கையும் ஆணுறுப்பையும் அடக்காதவன் வாழ்க்கை நரகம் நோக்கி
    என இஸ்லாம் புனிதநூல் குரான் சொல்வதாக மேற்கோள் படித்திருக்கிறேன்.

    சுவையுணவுக்காக மீறும் நாக்கின் முதல் குணம் - அதனால் சுயநோய் மட்டுமே...

    சொல்விஷம் சிந்தி அள்ளமுடியா இழப்பும் ஆற்றமுடியா புண்ணும் தரும்
    இரண்டாவது அடக்கமின்மை - அடடா!!!! என்ன சொல்ல சிவா?

    ஆறாதே சுட்ட வடு
    யாகாவாராயினும் காக்க
    என வள்ளுவன் படித்துப் படித்துச் சொன்ன பாடங்கள்..

    நாவை இப்படி பயன்படுத்துவோர் - செவியை அடைத்துவிட்டவர்கள் அல்லவா? பின்னர் எப்படி அய்யன் சொல் அவர்களின் மூளைக்குள் ஏறும்?

    சொல்லின் செல்வன் என அனுமனைக் கம்பன் சொன்னது - அவன் அதிகம் பேசுவான் என்பதால் அன்று..
    பேசினால் முத்துச்சரம் போல் அம்சமாய், அளவாய், அந்தந்தச்சூழலுக்கு சாலப் பொருத்தமாய்ப் பேசுவான்..

    அப்படி அமைவது மட்டுமே நாக்கு!
    மற்றவை யவனிகா சொல்வதுபோல் இரட்டைத் தலை நாகப்பாம்பு...!


    விஷமின்றி அவற்றின் பல் பிடுங்க இயலாதுதான் -
    ஆனால் நம் செவி பொத்தலாம்..
    மனதைச் சுற்றி உதாசீன உறை சுற்றலாம்..
    விஷம் சீறித் தீண்டா உயரத்துக்கு பக்குவ ஏணி ஏறலாம்..

    வழிகள் இருக்கின்றன சிவா... வாருங்கள் என்னுடன்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    வார்த்தைகள் தடித்தால் வையகத்தில்
    சிற்றெறும்பினும் கடுகாவர்..!

    நஞ்சு வார்த்தை காது படின்
    நெட்டித் தள்ளி நிமிர்ந்து நட..!

    சொல்லே உருவம்..!
    சொல்லியவர்???!!

    புத்தர் சொன்னது நினைவில்
    இன்னும்..!!

    "நீ சொல்லியவை
    உமக்கே சொந்தம்..!!
    நான் எடுக்கவில்லை..!!"

    இதைவிட அழகாய்
    வேறு வார்த்தை தெரியவில்லை..!!

    ----------------

    யவனி அக்காவின் கவி அருமை..

    பெரியண்ணாவின் பதில் அபாரம்..!!

    நல்லதொரு உள்ளத்துக்கு சான்று உங்கள் கவி சிவா அண்ணா.

    பாராட்ட வார்த்தைகள் இல்லை இந்த பூ தங்கையிடம்..!!



    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    வார்த்தைகள் தடித்தால் வையகத்தில்
    சிற்றெறும்பினும் கடுகாவர்..!

    நஞ்சு வார்த்தை காது படின்
    நெட்டித் தள்ளி நிமிர்ந்து நட..!

    சொல்லே உருவம்..!
    சொல்லியவர்???!!

    புத்தர் சொன்னது நினைவில்
    இன்னும்..!!

    "நீ சொல்லியவை
    உமக்கே சொந்தம்..!!
    நான் எடுக்கவில்லை..!!"



    அருமைடா தங்கை!
    அருகில் இருந்திருந்தால் உச்சி மோந்திருப்பேன்...
    அசத்திவிட்டாய்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    அருமைடா தங்கை!
    அருகில் இருந்திருந்தால் உச்சி மோந்திருப்பேன்...
    அசத்திவிட்டாய்!
    அப்பப்பா.... பெரியண்ணாவின் அன்பு அமுதமாய் உண்ணக் கிடைத்த அற்புத நாள் இன்றா??!!


    இதைவிட எனக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை அண்ணலே..!


    அருகிலிருந்தால் தான் அன்பா??? மன்ற வீட்டில் ஒவ்வொரு பக்கமும் பூ பூத்தவண்ணம் தானே இருக்கிறேன் பெரியண்ணா??

    நாளை பூக்கள் பார்த்தால் இந்த பூவை நினையுங்கள்..! அது போதும் எனக்கு..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    விஷமின்றி அவற்றின் பல் பிடுங்க இயலாதுதான் -
    ஆனால் நம் செவி பொத்தலாம்..
    மனதைச் சுற்றி உதாசீன உறை சுற்றலாம்..
    விஷம் சீறித் தீண்டா உயரத்துக்கு பக்குவ ஏணி ஏறலாம்..

    வழிகள் இருக்கின்றன சிவா... வாருங்கள் என்னுடன்!
    உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டிய அற்புதமான உண்மைகள் இளசு.உதாசீன உறை....நிச்சயம் காயத்திலிருந்து காப்பாற்றும்.
    வழிகாட்டும் செம்மல்கள் இருக்கும் போது கைப்பிடித்து வர தயார்.தோளணைத்து தந்த தோழமை ஆறுதலுக்கு அநேக வந்தனங்கள்.
    மனம் நெகிழ்ந்த நன்றி இளசு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post

    நஞ்சு வார்த்தை காது படின்
    நெட்டித் தள்ளி நிமிர்ந்து நட..!

    சொல்லே உருவம்..!
    சொல்லியவர்???!!

    புத்தர் சொன்னது நினைவில்
    இன்னும்..!!
    \"நீ சொல்லியவை
    உமக்கே சொந்தம்..!!
    நான் எடுக்கவில்லை..!!
    கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரிது என்பதைப் போல....தங்கையானாலும் நீ சொல்லிய இந்த சொற்கள்.....அபாரம் தங்கையே.
    சொல்லே உருவம்......சொல்லியவர்...?அந்தக் கேள்விக்குறியில் அடங்கிவிடுகிறது அவன் ஆணவம்.புத்தர் சொன்ன வாக்கு.....எந்நாளும் கடைபிடிக்க வேண்டிய சத்திய வாக்கு.
    மிக அருமையானதொரு பின்னூட்டம் கண்டு பெருமையால் என் விழி உயர்கிறது.....என் தங்கை என்ற பெருமிதத்தில்.மிக்க நன்றி பூ.
    Last edited by சிவா.ஜி; 04-02-2008 at 04:21 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    எனக்குள்ளும் இந்த மிருகம் சில நேரங்களில் ஆட்டம் போட்டுவிடுவதால் என் கருத்தை இங்கே இட எனக்கு தகுதியில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், முடிந்தவரை அந்த மிருகத்தை விலங்குகளால் பிணைத்து செயலிழக்க வைக்கவே எனக்கு எப்போதும் ஆசை. பல நேரங்களில் அது முடிகிறது. சில நேரங்களில் அதனிடம் தோற்றுவிடுகிறேன். அந்த மிருகம் தொடர்பாக கருத்து சொன்ன அத்தனை பேரின் வார்த்தைகளையும் செவி சாய்த்து கேட்டுக்கொள்கிறேன். அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் முயற்சி செய்வேன். வயதில் குறைந்தவராய் இருந்தாலும் என் தங்கையிடமிருந்து நான் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. அதில் கோபம் அடக்குதலும் ஒன்று.!

    அன்பு அண்ணா இளசு அவர்கள் சொன்னது போல் நரகத்தின் பாதையில் நான் செல்ல எனக்கு சம்மதமில்லை. எனவே விலகி நடக்க விருப்பம் கொண்டு, அதற்காக முயற்சி செய்வேன் என்று கூறிக்கொள்கிறேன். சிவாவின் கருத்துக்கள் ஆழ்ந்த அர்த்தமுள்ளவை, வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. அவருக்கு என் பாராட்டுக்கள்..!!
    அன்புடன்,
    இதயம்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    விடக் கூடாதது இரண்டு
    தன்மாண்பும் வார்த்தையும்..

    நா அடக்கம் கொண்டுவிட்டால்
    நம்மில் மற்றவை அடங்கிவிடும்..

    நறுமணத்தையும் துர்மணத்தையும்
    நல்கும் ஆற்றல்
    நமிதழ்களுக்கு உண்டு..

    சொல்லிலும் உண்டு
    கசப்பு
    புளிப்பு
    இனிப்பு..

    அடித்துக் கொன்று
    சுவைத்து தின்று மீள*யிலும்
    இதழ் தோய்ந்த
    இரத்தத்தை நக்கிவரும் நாவுகள்
    வார்த்தைகள் உடையது

    இப்படி எவ்வளவோ அறிந்தும்
    இந்த பிறவியல் என்னால்
    அடைக்க முடியாத நா
    அடக்கி வைத்தது என்னை..
    அந்நிய மாக்கியது உறவுகளை..

    அர்த்தம் பொதிந்த வரிகள் தந்த சிவா அண்ணாவிற்கு பாராட்டுக்கள்..

    அன்புடன் ஆதி
    Last edited by அமரன்; 04-02-2008 at 01:19 PM.
    அன்புடன் ஆதி



  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நாவடக்கம்,அடங்காமை பற்றி அற்புதமான பின்னூட்டம்.படித்து ரசித்தேன் ஆதி.மனமார்ந்த நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •