Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 40 of 40

Thread: அடங்கா மிருகம்!!

                  
   
   
  1. #37
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அமரன் சுட்டிய வழி வந்து கட்டிக்கிடக்கும் இந்த அடங்கா மிருகம் கண்டேன். விழி விரியவைத்த கவிச்சிந்தனையையும், வியக்கச் செய்த பின்னூட்டங்களில் பெருகிய எண்ணங்களையும் கண்டு மலைத்து, ரசித்து, மகிழ்ந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் இங்கு வாராமற்போனேனே என்று என்னையும் நொந்துகொண்டேன்.

    கவிதை செதுக்கியவிதம் வெகு அருமை அண்ணா. அதன் குரூரத்தை இந்த வரிகளை விடவும் பொருத்தமாய் வெளிப்படுத்திவிட முடியாது.

    குதறிவிட்டு ரத்தம் சுவைத்து
    குரூரமாய் கூண்டுக்குள்
    அடங்கிவிடுகிறது..மீண்டும்
    வெட்கமின்றி வெளிவந்து
    வேதனையின் வீச்சத்தை
    முகர்ந்து ருசிக்கிறது!


    சிவாஜி அண்ணாவின் கவியோட்டத்துக்குப் பாராட்டும், பின் தொடர்ந்துவந்த பின்னூட்டங்களுக்குப் பலத்த கைதட்டும் வழங்கி, சுட்டிய அமரனுக்கு நன்றியைச் சொல்கிறேன்.

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    அற்ப்புதமான கவிதை அண்ணா,

    இந்த மிருகத்தை கட்டுப்படுத்தமுடியாமல், பலமுறை தோற்றுப் போயிருக்கிறேன். நானும் பலசமயம் குதறப் பட்டிருக்கிறேன். அதன் வலியும் வேதனையும் எனக்கு நன்கு தெரியும்.

    அமரனின் அசத்தலான பின்னூட்டம் இன்னும் அழகு
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #39
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எங்கோ ஒளிந்திருந்த கவிதையை வெளிக்கொணர்ந்து பாராட்டிய ரவீ, தங்கை கீதம் மற்றும் நிவாஸுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

    ஜெகதீசன் அவர்களின் கவிதை சொல்லும் இன்னொரு கோணமும் சிந்திக்க வைக்கிறது. வெறுமே நாவைச் சொல்லி என்ன பயன்....நாவின் முதலாளி மனதை அல்லவா கூண்டில் ஏற்ற வேண்டும்.

    சுட்டிக் காட்டிய அன்பு அமரனுக்கும் மிக்க நன்றிகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #40
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல அருமையான கவிதை வரிகள் சிவாஜி. பாராட்டுக்கள்.

    இந்த நாக்கையே மிருகம் என்று சொன்னால் அதை அடக்கி ஆளும் மூளையை எப்படிச் சொல்வீர்கள்!!!

    இந்த மாதிரி நிறைய முத்துக்கள் நம் மன்றத்தில் இருக்கிறது. யாரும் பழைய ஏட்டை புரட்டிப்பார்க்க மறுக்கிறார்கள். நேரம் கிடைத்தால் உள்ளே சென்று பாருங்கள்.

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •