அமரன் சுட்டிய வழி வந்து கட்டிக்கிடக்கும் இந்த அடங்கா மிருகம் கண்டேன். விழி விரியவைத்த கவிச்சிந்தனையையும், வியக்கச் செய்த பின்னூட்டங்களில் பெருகிய எண்ணங்களையும் கண்டு மலைத்து, ரசித்து, மகிழ்ந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் இங்கு வாராமற்போனேனே என்று என்னையும் நொந்துகொண்டேன்.
கவிதை செதுக்கியவிதம் வெகு அருமை அண்ணா. அதன் குரூரத்தை இந்த வரிகளை விடவும் பொருத்தமாய் வெளிப்படுத்திவிட முடியாது.
குதறிவிட்டு ரத்தம் சுவைத்து
குரூரமாய் கூண்டுக்குள்
அடங்கிவிடுகிறது..மீண்டும்
வெட்கமின்றி வெளிவந்து
வேதனையின் வீச்சத்தை
முகர்ந்து ருசிக்கிறது!
சிவாஜி அண்ணாவின் கவியோட்டத்துக்குப் பாராட்டும், பின் தொடர்ந்துவந்த பின்னூட்டங்களுக்குப் பலத்த கைதட்டும் வழங்கி, சுட்டிய அமரனுக்கு நன்றியைச் சொல்கிறேன்.
Bookmarks