Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 40

Thread: அடங்கா மிருகம்!!

                  
   
   
  1. #25
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    நாவின் நயவஞ்சகத்தை நயம்பட கவிதையில் சொன்ன சிவா அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள்...!!!

    நாவின் நாவில் சிக்காதவர் எவருண்டார் அண்ணா..? அதனால்தான் வள்ளுவரும் சொன்னாரோ..யாகாவராயினும் நா காக்க வென்று...?!
    நன்றி சுகந்த்....பல சமயங்களில் இந்த பாழும் நாக்கு நம் கட்டளைகளையும் மீறிவிடுமென்றாலும்....முடிந்தவரை அடக்கப் பார்ப்பது நல்லதில்லையா...
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #26
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    நாவின் வலிமை பற்றி நமது முன்னிறைத் தெய்வமான திருக் கொரல் வள்ளுவ நாயனார் அறிவிப்பது யாதெனில்

    யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு

    என்பதில்

    வள்ளுவம், நாவின் வலிமைக்கு முன் நாம் தூசு என்று சொல்லு முகத்தான் ஒரு பெரும் பொருளை உணர்த்துகிறது.

    "காவாக்கால்" என்றால் "காத்துக்கொள்ளாவிட்டால்" என்னவாகும் என்று எதிர்மறையாக பொருள் கொள்ளுமாறுதான் அனைவரின் நினைவும் ஓடும்.

    ஆனால் அதையே "கா வாக்கால்" என்பதாகப் பிரித்துப் பொருள் கொண்டால், அதாவது "வாக்கால் காத்துக் கொள்" எனப்தாகத்தான் தெய்வப் புலவர் வலியுறுத்துகிறார்.

    பகாபதச் சுவையை பகுபதமாக்கும் விதமாக நாவிற்கு பொருள் உணர்த்த வந்த எம்மான் வள்ளுவர் எதிர்மறையாகக் கூறுமிடத்தும் நேர் மறையாகப் பொருள் கொள்ளுமாறு நாவின் வலிமையை நமக்கு உணர்த்துகிறார்.

    இங்கே சொல் இழுக்கு மட்டும் படுவதல்ல. சொல்லால் இழுக்கப்படுவதாலே நாவை காத்துக் கொள்ள நம்மால் இயலவில்லை. சொல்லும் சொல்லில் வெல்லும் சொல் எது என அறியும் போது வாக்கு நம்மைக் காக்கிறது. இல்லையேல் இழுக்குப்படுவது இயல்பு.
    அதனால் சோகத்தைக் காத்துக் கொள்ளும் செயல்தான் அமையும்.

    அப்படிப் பட்ட வலிமையுடைய 3 அங்குல நாக்கின் நீளம் மாபலிச் சக்ரவர்த்திக்கு மூன்று உலகை மறையோனுக்கு அளந்தும் கால் வைக்க இடம் இல்லா நிலைக்கு அவனையாக்கியது அவன் நாவால்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

    நாவு நரம்பில்லாதது. ஆனால் சகலத்தையும் கட்டக் கூடிய வலிமையான கயிற்றின் திரிகள் அதற்கு உண்டு.

    நாவினை நன்மையாக்கிக் கொண்டால் மோட்ச சாம்ராஜ்யமும் நமக்கு வசமாகும். இல்லையேல் நம் வாழ்வு நரகம்தான்.

  3. #27
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    திரு.ஜெயராமன் அவர்களின் பின்னூட்டத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள மிக அரிய செய்திகள் இருக்கிறது.ஜெயராமன் அவர்களின் அனுபவ அறிவு ஆசானாயிருந்து நமக்கு பாடங்கள் சொல்லித்தருகின்றன. மிக்க நன்றி அய்யா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    வாழ்த்துக்கள் சிவா.ஜி..

    சிறப்பான கவிதை!

    பைபிள்: யாக்கோபு 3 : 7 - 8

    நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது.


    மிக மிக கடினமான செயல். நாம் அனைவருடனும் நட்புறவு கொள்ளவேண்டுமென்றால் பல நேரங்களில் நாவை அடக்கித்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் மிக உயர்ந்த நட்பை, உறவை, அன்பை இழக்கநேரிடும்.

    மிக அழகான பின்னூட்டங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும். எனக்கு இதயம் அவர்களின் பின்னூட்டம்தான் அதிகம் கவர்ந்திருக்கிறது.

    தொடரட்டும் நம் பயணம்.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #29
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    நாவால் நாம் பலரை அடக்கினாலும், நமது நாவை நாம் கட்டுப்படுத்தமுடியாமல் போவது வியப்பானதே.....

    அருமையான கவிதை அன்பரே..

    வாழ்த்துக்கள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மனித சுய கட்டுப்பாட்டின் அவயம்...
    மறை உரைப்பின் திறை
    கறை உரைப்பின் சிறை

    நா நிலையில்...
    நாணாதிருக்க வேண்டும்...
    நாணாயிருக்க வேண்டும்..
    உறையாதிருக்க வேண்டும்...
    உறைக்காதிருக்க வேண்டும்...
    வளையாதிருக்க வேண்டும்...
    வளைக்காதிருக்க வேண்டும்...
    பலமாயிருக்க வேண்டும்...
    பலதில்லாதிருக்க வேண்டும்...

    தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு
    உணர்ந்தே நடப்போம்...

    என்பில்லாத நாக்கில் அன்பே உறுதி சேர்க்கும்...

    வாழ்விற் கொள்ள வேண்டிய படிப்பினைகள்,
    சிவா.ஜி யின் கவிதையாகவும் அனைவர் பின்னூட்டங்களாகவும்...
    மிகுந்த பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 12-02-2008 at 06:49 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    ...
    மறை உரைப்பின் திறை
    கறை உரைப்பின் சிறை

    நா நிலையில்...
    நாணாதிருக்க வேண்டும்...
    நாணாயிருக்க வேண்டும்..
    உறையாதிருக்க வேண்டும்...
    உறைக்காதிருக்க வேண்டும்...
    வளையாதிருக்க வேண்டும்...
    வளைக்காதிருக்க வேண்டும்...
    பலமாயிருக்க வேண்டும்...
    பலதில்லாதிருக்க வேண்டும்...

    என்பில்லாத நாக்கில் அன்பே உறுதி சேர்க்கும்...

    ...
    அக்னித்தமிழ் அபாரம்... பாராட்டுகள் அக்னி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #32
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    அக்னித்தமிழ் அபாரம்... பாராட்டுகள் அக்னி!
    நன்றி அண்ணா... இப்போதுதான் என் மனதில் ஆறுதல்.
    ஏனென்றால் இதனை நான் எழுதி சேமித்து வைத்துக், கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்களுக்குப் பின்னரே பதிவிட்டேன்.
    நான் சொல்ல நினைப்பது சரியா என்ற சஞ்சலம். இப்போது சரியாகிவிட்டது.
    Last edited by அக்னி; 14-02-2008 at 01:19 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #33
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அட அட அட.....அக்னித் தமிழை என்ன சொல்லி பாராட்ட.....
    பிரமாதமென்ற ஒற்றைச் சொல் போதாது....
    சொல்லாடலில் சிறந்த கவிதையொன்று என் கவிதைக்கு பின்னூட்டமாய் கிடைத்ததில்...ஆனந்தம்...பேரானந்தம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    அடங்கா மிருகத்தின் வெளிவேட்டையின் முடிவில்.
    மனிதத்தின் தியான உட்கோட்டைப் புகுதல்?
    தேவனாய் உயிர்த்தெழ, பூமி சொர்க்கமாகும் அதிசயம்!

    அடங்கா மிருகத்தைக் கவிதையில் பிடித்ததற்கு நன்றி, சிவா.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  11. #35
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by நாகரா View Post
    அடங்கா மிருகத்தின் வெளிவேட்டையின் முடிவில்.
    மனிதத்தின் தியான உட்கோட்டைப் புகுதல்?
    தேவனாய் உயிர்த்தெழ, பூமி சொர்க்கமாகும் அதிசயம்!

    அடங்கா மிருகத்தைக் கவிதையில் பிடித்ததற்கு நன்றி, சிவா.
    மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நாகரா...அந்த மிருகத்தின் வெளிவேட்டை முடிவில் உள்நோக்கி பார்த்து ஓய வேண்டும்.
    செய்த செயலை எண்ணி தலை கவிழ வேண்டும்.
    நல்லதொரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நாகரா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Thumbs up

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    எப்போது வேண்டுமானாலும்
    பாய்ந்து குதறும் மிருகத்தை
    பல்லணை போட்டு
    உதடு கதவுகளுக்குள்
    ஒளித்து வைத்திருக்கிறேன்!

    இருந்தும் இற்றுப்போன
    சங்கிலியை அற்றுக்கொண்டு பாய
    சின்ன உசுப்பலை
    தேடி அலைகிறது!

    நட்பென்றும்,உறவென்றும்
    பார்ப்பதேயில்லை அந்த
    பாழும் மிருகம்!

    குதறிவிட்டு ரத்தம் சுவைத்து
    குரூரமாய் கூண்டுக்குள்
    அடங்கிவிடுகிறது..மீண்டும்
    வெட்கமின்றி வெளிவந்து
    வேதனையின் வீச்சத்தை
    முகர்ந்து ருசிக்கிறது!

    அற்றுப்போகாத சங்கிலியாய்
    அமைதி வேண்டி யோகித்தாலும்
    அடங்காமல் ஆடும்
    அந்த மிருகம்...அதன் ஆட்டத்தால்
    என்னையும் அழித்துத்தான்
    அடங்குமோ.......


    ஆஹா அருமையான கவிதை .... எழுதி தந்த சிவா அண்ணாவிற்கும் , எடுத்து தந்த அமரனுக்கும் நன்றி.

    இந்த மிருகத்தை அடக்கி ஒடுக்கத்தானே அண்ணி, குழந்தைகள் என்ற பாசக் கயிறுகள் இருக்கிறது சிவா அண்ணா .....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •