அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நாவின் வலிமை பற்றி நமது முன்னிறைத் தெய்வமான திருக் கொரல் வள்ளுவ நாயனார் அறிவிப்பது யாதெனில்
யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு
என்பதில்
வள்ளுவம், நாவின் வலிமைக்கு முன் நாம் தூசு என்று சொல்லு முகத்தான் ஒரு பெரும் பொருளை உணர்த்துகிறது.
"காவாக்கால்" என்றால் "காத்துக்கொள்ளாவிட்டால்" என்னவாகும் என்று எதிர்மறையாக பொருள் கொள்ளுமாறுதான் அனைவரின் நினைவும் ஓடும்.
ஆனால் அதையே "கா வாக்கால்" என்பதாகப் பிரித்துப் பொருள் கொண்டால், அதாவது "வாக்கால் காத்துக் கொள்" எனப்தாகத்தான் தெய்வப் புலவர் வலியுறுத்துகிறார்.
பகாபதச் சுவையை பகுபதமாக்கும் விதமாக நாவிற்கு பொருள் உணர்த்த வந்த எம்மான் வள்ளுவர் எதிர்மறையாகக் கூறுமிடத்தும் நேர் மறையாகப் பொருள் கொள்ளுமாறு நாவின் வலிமையை நமக்கு உணர்த்துகிறார்.
இங்கே சொல் இழுக்கு மட்டும் படுவதல்ல. சொல்லால் இழுக்கப்படுவதாலே நாவை காத்துக் கொள்ள நம்மால் இயலவில்லை. சொல்லும் சொல்லில் வெல்லும் சொல் எது என அறியும் போது வாக்கு நம்மைக் காக்கிறது. இல்லையேல் இழுக்குப்படுவது இயல்பு.
அதனால் சோகத்தைக் காத்துக் கொள்ளும் செயல்தான் அமையும்.
அப்படிப் பட்ட வலிமையுடைய 3 அங்குல நாக்கின் நீளம் மாபலிச் சக்ரவர்த்திக்கு மூன்று உலகை மறையோனுக்கு அளந்தும் கால் வைக்க இடம் இல்லா நிலைக்கு அவனையாக்கியது அவன் நாவால்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நாவு நரம்பில்லாதது. ஆனால் சகலத்தையும் கட்டக் கூடிய வலிமையான கயிற்றின் திரிகள் அதற்கு உண்டு.
நாவினை நன்மையாக்கிக் கொண்டால் மோட்ச சாம்ராஜ்யமும் நமக்கு வசமாகும். இல்லையேல் நம் வாழ்வு நரகம்தான்.
திரு.ஜெயராமன் அவர்களின் பின்னூட்டத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள மிக அரிய செய்திகள் இருக்கிறது.ஜெயராமன் அவர்களின் அனுபவ அறிவு ஆசானாயிருந்து நமக்கு பாடங்கள் சொல்லித்தருகின்றன. மிக்க நன்றி அய்யா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாழ்த்துக்கள் சிவா.ஜி..
சிறப்பான கவிதை!
பைபிள்: யாக்கோபு 3 : 7 - 8
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது.
மிக மிக கடினமான செயல். நாம் அனைவருடனும் நட்புறவு கொள்ளவேண்டுமென்றால் பல நேரங்களில் நாவை அடக்கித்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் மிக உயர்ந்த நட்பை, உறவை, அன்பை இழக்கநேரிடும்.
மிக அழகான பின்னூட்டங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும். எனக்கு இதயம் அவர்களின் பின்னூட்டம்தான் அதிகம் கவர்ந்திருக்கிறது.
தொடரட்டும் நம் பயணம்.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
நாவால் நாம் பலரை அடக்கினாலும், நமது நாவை நாம் கட்டுப்படுத்தமுடியாமல் போவது வியப்பானதே.....
அருமையான கவிதை அன்பரே..
வாழ்த்துக்கள்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
மனித சுய கட்டுப்பாட்டின் அவயம்...
மறை உரைப்பின் திறை
கறை உரைப்பின் சிறை
நா நிலையில்...
நாணாதிருக்க வேண்டும்...
நாணாயிருக்க வேண்டும்..
உறையாதிருக்க வேண்டும்...
உறைக்காதிருக்க வேண்டும்...
வளையாதிருக்க வேண்டும்...
வளைக்காதிருக்க வேண்டும்...
பலமாயிருக்க வேண்டும்...
பலதில்லாதிருக்க வேண்டும்...
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
உணர்ந்தே நடப்போம்...
என்பில்லாத நாக்கில் அன்பே உறுதி சேர்க்கும்...
வாழ்விற் கொள்ள வேண்டிய படிப்பினைகள்,
சிவா.ஜி யின் கவிதையாகவும் அனைவர் பின்னூட்டங்களாகவும்...
மிகுந்த பாராட்டுக்கள்...
Last edited by அக்னி; 12-02-2008 at 06:49 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
Last edited by அக்னி; 14-02-2008 at 01:19 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அட அட அட.....அக்னித் தமிழை என்ன சொல்லி பாராட்ட.....
பிரமாதமென்ற ஒற்றைச் சொல் போதாது....
சொல்லாடலில் சிறந்த கவிதையொன்று என் கவிதைக்கு பின்னூட்டமாய் கிடைத்ததில்...ஆனந்தம்...பேரானந்தம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அடங்கா மிருகத்தின் வெளிவேட்டையின் முடிவில்.
மனிதத்தின் தியான உட்கோட்டைப் புகுதல்?
தேவனாய் உயிர்த்தெழ, பூமி சொர்க்கமாகும் அதிசயம்!
அடங்கா மிருகத்தைக் கவிதையில் பிடித்ததற்கு நன்றி, சிவா.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks