Page 4 of 12 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 137

Thread: பழமொழிகள்

                  
   
   
  1. #37
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நல்ல விளக்கங்கள் காந்தி..!

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    அடியாத மாடு படியாது

    ஒரு மாடு அடங்காமல் துள்ளித் திரிந்து கொண்டும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டும் இருந்தால்
    அந்த மாட்டை கம்பால் அடித்து நம் கட்டளைக்குப் பணியும்படி
    செய்ய வேண்டும்.அடிக்காமல் தடவிக்கொடுத்து வளர்த்தோமேயானால் அது நம் கட்டளைக்கு பணியாது. என்று எண்ணத் தோன்றும். இது உண்மையல்ல!
    இப்பழமொழி மாட்டின் மூலம் நமக்குச் சொன்னதாகும். அதாவது நம் மனமென்னும் மாட்டை (அடங்காத)அடக்காமல் அதன்போக்கிற்கு விட்டுவிட்டோமேயானால் நம்எதிர்காலம் என்பது சூன்யமாகிவிடும். என்பதால், நம் மனதை அவ்வப்போது எது தவறு எது சரி என்பதையறிந்து மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஆசைஅறுபது நாள்
    மோகம் முப்பது நாள்


    இப்பழமொழி காமத்திற்கு மட்டும் சொன்னதன்று.பொதுவாக மணமுடித்து வாழத் துவங்கும் தம்பதிகள்அநேக ஆசைகளும்,மோகமும் ஏற்படும். அந்த ஆசையும்,மோகமும்
    சேர்ந்து தொண்ணூறு நாள் கழிந்த பின் மங்கத் தொடங்கும்.
    அந்த தொண்ணூறு நாளில் இருந்த உற்சாகமும்,மனக்கிளர்ச்சியும் பின்னாளில் குறையும்.இதையே பல்வேறு செல்வத்துடனும் ஒப்பிடலாம் .உதாரணத்திற்கு நாம் புதிதாக ஒரு கலர்டிவி வாங்கினோமேயானால் அந்த டிவியை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வோம், பிறகு நாள் செல்லச் செல்ல முன் இருந்த அக்கறை குறையும். இண்னும் பல உதாரணம் கூறலாம். நாம் புதியதாக இருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பும்,மரியாதையும் தருகிறோம்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    நாய் விற்ற காசு குறைக்காது
    பூ விற்ற காசு மணக்காது


    நாய்,பூ விற்ற பணம் முறையே குறைக்கவே, மணக்கவே செய்யாது.அது போல தப்பான வழியில் வந்த பணத்திற்க்கு எந்த
    வித்தியாசமும் தெரியாது.அதற்காக நாம் தப்பான வழியில் பணம் சம்பாதிக்கக் கூடாது.என்பதை உணர்த்தவே இந்த பழமொழி.

    தை பிறந்தால் வழி பிறக்கும்

    தை மாதம் தான் அறுவடை காலம் அப்போதுதான் நெல், கரும்பு,வாழை பேன்ற பயிர்கள் அறுவடை செய்யப்படும்.அந்த சமயத்தில் விவசாயிகளிடம் நல்ல பணப் புழக்கம் இருக்கும். பணம் இருந்தால் தான் எந்த காரியமும் செய்ய முடியும். பணம்
    பத்தும் செய்யும் ஆகவேதான்,தை மாத வாக்கில் நல்ல (வழி)காலம் பிறக்கும் என்று கூறுவர்

    காலத்தே பயிர் செய்

    எந்த காரியமும் அதை செய்வதிற்க்கு எற்ற நேரம் காலம்,சந்தர்ப்பம்,சுழ்நிலை, பார்த்து செய்ய வேண்டும்.அப்படி செய்யா விட்டால் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்காது.

    பாத்திரம் அறிந்து பிச்சை இடு
    நாம் ஒருவனுக்கு செய்யும் உதவியால் அவன் பயன் அடைய வேண்டும். அப்படி சரியான ஆட்களுக்கு சரியான உதவியைதான் செய்ய வெண்டும்,அதாவது எந்த ஆட்களுக்கு என்ன உதவி தேவைஎன்பதை உணர்ந்து, செய்ய வேண்டும்.மாறு பட்டு சரியான ஆட்களுக்கு சரியான உதவி செய்யா விட்டால். அது அவர்க்கும் நமக்கும் எந்த நன்மையும் ஏற்படுத்தாது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    உரலில் தலையை கொடுத்துட்டு
    உலக்கைக்கு பயந்தா ஆகுமா?


    ஒரு செயல் செய்யத் துவங்குகிறோம். அதில் பல தடைகள் வருகின்றன அதற்க்காக பாதியில் பின்வாங்கலாமா? கூடாது
    துன்பங்களையும், தடைகளையும் எதிர் கொண்டே ஆக வேண்டும். இந்த துணிவை மனத்தில் விதைக்கும் வாசகம் இது.
    துணிவும்,தடையை எதிர்க்கும் ஆற்றலும் இல்லாது ஏது வெற்றி.


    ஆசையிருக்கு தாசில் பண்ண
    அம்சம் இருக்கு கழுதை மேய்க்க


    ஆசையால் மட்டும் எதுவும் நிறைவேறிவிடாது. அதற்க்கு அயராத முயற்சி வேண்டும்.

    நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்ற உண்மையை உரைப்பதே இது. தாசில் என்பது தாசில்தார் உத்யோகம் என்பதை குறிக்கும். பலர் நினைப்பது நடவாத போது தனக்கு அதுஷ்டம் இல்லை என்று புலம்புவர் அதை கூறும் பழமொழி

    அதிஷ்டம் தபாலில் வந்தா
    தரித்திரம் தந்தியில் வருது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
    நல்ல மணிதனுக்கு ஒரு சொல்


    படியாத மாட்டை படிய வைக்க கம்பியை காய்ச்சி சூடு போடும் வழக்கம் முன்பு இருந்தது. அப்படி சூடு போட்டால் அந்த மாடு நம் வழிக்கு வந்து விடும்.அது போல நல்ல மனிதர்கள் ஏதாவது தவறு செய்தால்அவர்களை கடுமையான ஒரு சொல் சொன்னாலே அவர்கள் நல் வழிக்கு திரும்பி,திருந்தி விடுவார்கள்.இதனால் தான் நல்ல மணிதனுக்கு ஒரு சொல் என்று கூறுவார்கள்.

    ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை

    கரும்பு ஆலை இல்லாத ஊர்களில் சர்க்கரை கிடைக்காது அதற்க்கு பதில் இலுப்பம்பூ இந்த பூ தித்திப்பு தன்மை உடையது இந்த பூ தான் அவர்களுக்கு சர்க்கரை இதன் உட் கருத்து என்ன வென்றால், நாம் ஆசை படும் சில நமக்கு கிடைக்க வில்லை என்றால் அதற்க்காக வருத்தப் படாமல். நமக்கு கிடைக்கக் கூடியதை வைத்து திருப்தி பட்டு கொள்ள வேண்டும்.

    இருப்பதை கொன்டு சிறப்புடன் வாழ் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

    யானைக்கும் அடி சறுக்கும்.

    மிக பெரிய உருவம் யானை அது தன் கால்களை பூமியில் நடக்கும்போது வலுவாக தன் கால்களைப்பதிக்கும், அப்படி பதிக்கும்போது சற்று கவனக்குறைவாக இருந்தால் அது சறுக்கி விழுந்துவிடும்.அப்படி விழுந்தால் அதற்க்கு அடி பலமாக இருக்கும்.அதுபோல மனிதர்களாகிய நாம் எவ்வளவு புத்தாசாலியாக,அல்லது பலசாலியாக இருந்தாலும் நாம் செய்யும் காரியத்தில் சற்று கவனப்பிசகாக நடந்து கொண்டால்.நம்முன்னேற்த்திற்க்கு அது முட்டு கட்டையாக அமைந்துவிடும்.ஆகையால் நாம் ஒவ்வொறு அடியும் மிக கவனமாக முன்வைத்து முன்னேற வேண்டும் என்பதை விளக்கும் பழமொழிதான் இது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.

    ஒரு மனிதன் தான் செய்யும் செயல்கள் தவறு அல்லது பாவம் என்று தெரிந்தும் அந்த செயலை அவன் செய்வானேயானால் அந்த செயலுக்கு அவன் அழுது அழுது என்பதற்கு விளக்கம் என்னவென்றால், கைப்பொருளை இழந்தவன் எந்த அளவிற்கு அழுது மனவருத்தப்பட்டு துடிப்பானோ அது போல் இவன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு,அல்லது நிம்மதியைத் தொலைத்துவிட்டு. அவன் வாழ்க்கையில் நரகத்தைவிட கொடுமையான வேதனையை அனுபவிப்பான்.

    உயிர் காப்பான் தோழன்.

    ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானது மானம். அந்த மானத்திற்க்கு இழுக்கு வரும் தருவாயில் நம் தோளோடு தோள் சேர்த்து நின்று நம்மை காப்பாற்றுபவன் மட்டுமே நம் உயிர்த்தோழன்.அப்படி இல்லாமல் தூர நின்று வேடிக்கை, பார்ப்பதே,அல்லது தன்னை காத்துக் கொள்ள நம்மை மாட்டி விடுபவனோ நண்பன் இல்லை.

    யானையானய நண்பரைக் கழிக்கொளல் வேண்டும்
    நாயனைய நண்பரைத் தழிக்கொளல் வேண்டும்.


    யானையின் குணம் என்னவென்றால் நாம் அதற்கு எவ்வளவுதான் அன்பும்,பாசமும் காட்டி வளர்த்தாலும் அதற்க்கு மதம் பிடித்து விட்டால் அது நம்மையே தூக்கி போட்டு மிதித்து விடும்.ஆனால் நாய் அப்படி செய்யாது எஜமான் கோப, தாபங்களை உணந்து செயல் படும்.அதற்கு கோபம் வந்தால் குரைத்து கொண்டேயிருக்கும்.ஏஐமீனூ ஒன்றும் செய்யாது.
    யானை குணம் கொண்ட நண்பனை ஒதுக்கி விட்டு, நாய்குணம் உள்ள நண்பனை தேர்ந்து எடுக்க வேண்டும்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    தேன் எடுப்பவன்
    புறங்கை நக்காமல் இருப்பானா?
    மனிதர்களிடம் சில மாறாத பண்புகள் உண்டு.அதில் ஒன்று சுயநலம்,சுயநலம் இல்லாதவர்களே இல்லை என்று கூட கூறிவிடலாம்இதனால் சில இயல்புகள் எதார்தமாகி விட்டன.இன்று லஞ்சம் என்பது மாமூல் என ஆகி விட்டது லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் ஆகாது என்ற நிலை வந்து விட்டது.இந்த இயல்பு நிலையை விளக்கும் பழமொழி தான் இது.
    இருத்தாலும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் என்றும், எந்த நிலையுலிம் தன்னையும், தன் குணத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
    சுட்டாலும் வெண்சங்காய்,தீயில் இட்டாலும் ஒளிவிடும் பொன்னாய் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதுபற்றி விளக்கும் பழமொழி

    குப்பையிலே காடந்தாலும்
    குண்டு மணி நிறம் மாறாது.


    கருப்பு சிவப்பு நிறத்தில் ஒளி விடும் ஒரு விதை தான் குண்டுமனி. இது குப்பையில் எவ்வளவு நாள் இருந்தாலும் இதன் நிறம் மாறாது இதை உதாரணமாக்கி உயர்ந்தவர்கள் எவ்வளவு தாழ்த நிலைக்கு வந்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள் என்பதை விளக்கும் பழமொழி இது.

    தூக்கி விட்ட பூனையா எலி பிடிக்கும்?

    ஒரு செயலை செய்கிற ஊக்கம் தானாகவே வரவேண்டும்.பிறர் சொல்லி வரக்கூடாது.அப்படி சொன்னாலும் உண்மையான ஊக்கம் வராது இதை விளக்கிட தான் இந்த பழமொழி

    எலி பிடிக்க வேண்டும் என்றால் முதலில் பூனைக்கு பசியும், தேவையும் வேண்டும்.பின் அது தானாக எழுந்து பதுங்கி,சாதுர்யமாய் எலியை பிடிக்க வேண்டும்.சோம்பிக்கிடக்கும் பூனையை நாமே தூக்கிவிட்டு எலியை பிடி என்றாள் அது பிடிக்குமா, அது நடக்குமா?
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    சிலர் சில காரியத்தை தேவையில்லாமல்,முட்டாள் தனமாக, செய்வார்கள்,ஏன் இப்படி செய்தீர்கள் என்றால் புத்திசாலிதனமாக தான் செய்ததாக கூறுவார்கள்.அதற்கான பழமொழி இதோ

    அரைக்காசுக்கு மொட்டை போட்டாளாம்
    அடுத்த வீட்டம்மா.


    இதற்க்கு ஒரு கதை உண்டு.

    ஒரு ஊரில் ஒரு அம்மா, அவளுக்கு இரண்டு பிள்ளைகள்.இரண்டு பேருக்கும் மொட்டை அடிக்க நாவிதரிடம் அழைத்துச்சென்றார் அவரும் மொட்டை அடித்து விட்டார்.அதற்கு கூலியாக ஒருவருக்கு அரைக்காசு விதம் இருவருக்கு ஒரு காசு கூலி. அந்த அம்மாவிடம் இருந்தது காலணா. (அந்த காலத்தில் காலணா என்பது ஒன்றரை காசு.) மீதி அரை காசு கேட்டால் அந்த அம்மா நாவிதரிடம்சில்லரை இல்லை சரி எனக்கும் அடிச்சிடு என்று மொட்டை அடித்து கொண்டாளாம்.
    ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டாள் அவனிடம் இருந்து பாக்கி சில்லரை வராது அதனால் தான் இப்படி செய்தேன் என்றாலாம்.

    தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை

    என்பார்கள் ஆனால் சமயத்தில் அப்பா அம்மா நல்லவர்களாக இருத்தும் குழந்தைகள் தீயவர்களாய் பிறப்பதுண்டு. அப்பா திருடனாக இருந்து பிள்ளை திருடனாய் இருந்தால் அதை அப்படியே அப்பனை உறிச்சிட்டு வந்திருக்கான் என்றும் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்றும்.சொல்லி விம்ர்சிப்பார்கள்.
    மரபு நிலை மட்டுமே காரணம் இல்லாது சூழ்நிலையும் ஒருவனைப் பாதிக்கும் அப்பாவுக்கு சம்மந்தமே இல்லாத பிள்ளை பற்றி இப்படி கூறுவார்கள்.

    வாத்தியார் பிள்ளை மக்கு
    வைத்தியன் பிள்ளை சீக்கு
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    சிலர் தனக்கு சம்மந்தம் இல்லாத காரியத்தில் வந்து தானாகவே வந்து ஆலோசனை செல்வார்கள் இதற்கு மூக்கை நுத்தல்
    என்பார்கள். இவர்களை யாரும் அங்கு மதிக்கவும் மாட்டார்கள் ஆனாலும் இவர்கள் விடாமல் தங்களுடைய கருத்தை கூறிக்கொண்டே இருப்பார்கள்.இதை விளக்க

    பந்திலேயே இடமில்லை
    இவன் இலை கிழிசல் என்றானாம்
    .

    அவனை அழைக்கவும் இல்லை, ப்பிட செல்லவும் இல்லை ,
    ஆனால் அவன் எனக்கு கிழிசல் இலையை போட்டு இருக்கிȣகள் என்று கூறுவது போல் தனக்கு சம்மந்தம் இல்லாதவற்றில் புகுந்து கருத்து செல்வதை விளக்குகிறது இது.


    இலவு காத்த கிளி

    இலவு என்றால் இலவம் பஞ்சு ஆகும்.இந்த மரத்தில் காய்க்கும் காய்கள் பெரிதாகவும், பச்சையாகவும் இருக்கும்.இது பழுத்து பழமாக மாறாது, அந்த மரத்திற்க்கு வரும் ஒரு கிளி இந்தகாய் ஒரு நாள் பழுக்கும் நாம் அதை உண்ணலாம் என்று காத்துக் கொண்டே இருந்தது ஆனால் அது பழுக்காமல் வெடித்து சிறி பஞ்சுகள் காற்றைல் பறந்து விடும் தன்மையை கொன்டது. தினம் தினம் காத்து இருந்த அந்த கிளி கடைசியில் ஏமாற்றம் அடைந்தது.
    இந்த பழமொழி முலம் விலக்குவது என்ன வென்றால்,நம்ஒரு காறியத்தில் இறங்கும்பேது அதன் தன்மைகளை நன்கு உனர்ந்து,அவற்றை பற்றி நன்கு கற்று அல்லது அறிஞர்களிடம் கேட்டு உணர்ந்து பின் தான் அந்த காரியத்தில் இறங்க வேண்டும் அப்படி செய்யா விட்டால் அந்த கிளி போல நாமும் ஏமாற்றம் தான் அடைவோம் என்பதை விலக்கு கிறது.

    சிலர் இதையே நிலவு காத்த கிளி என்றும் கூறுவர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
    நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

    நம் முன்னோர்கள் முற்காலத்தில் பல் துலக்க ஆலமரத்து குச்சியையும்,வேப்ப மரத்து குச்சியையும் பயன் படுத்தினர்.இப்போதும்,சில கிராமங்களிலும் சிலர் இந்த முறையை பயன் படுத்துகிறார்கள்.இந்த குச்சிகளின் சார் நம் பல்லுக்கு நல்ல உறுதியும்,உடல் நலத்தையும் தரவல்லது.
    அது போல தமிழுக்கு நான்கு அடிகளை உடைய நூல், நால்அடியார் என்ற பாடலும், இரண்டு அடிகளை உடைய நூல் திருக்குறளும், தமிழுக்கு அழகும் வாழ்க்கைக்கு தேவையான கருத்தும் உடையன என்பதை விளக்கு கிறது.

    தீரா கோபம் போராய் முடியும்.
    நாம் ஒருவர்மோல் கோபம் ஏற்பட்டால் அதை நாம் மேலும்,மேலும்வளர்த்துக் கொண்டே போனால்,அதன் பயனாக அது சண்டையில் தான் போய் முடியும்.கோபம் நமக்கு அதிகரிக்க ,அதிகரிக்க,உண்மையை அறிந்து கொள்ளும் தன்மையை நாம் இழந்து விடுகிறோம்.
    இதை தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்றும் கூறுவர்.அகவே நாம் கோபம் கொள்ள கூடாது பொறுமை காத்தல் பொருமைகள் பல வந்து சேறும் இந்த கருத்தை மற்றொறு பழமொழி முலம் விலக்குகின்றனர் அது.

    பொருமை கடலைன் பொறியது.
    உலகில் கடல் தான் பொறியது அதை விட பொறியது பொருமை.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

    குப்புற விழுந்தாலும்
    மீசையில் மண் ஒட்டலே

    வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு.என்பார்கள்.வெற்றியில் மமதை கூடாது.அதுபோலவே தோல்வியில் துவண்டும் போக கூடாது.
    தான் சண்டையில் தோற்று கீழே விழுந்தாலும் என்னுடைய மீசையில் மண் ஒட்ட வில்லை பார்த்திர்களா என்பார்கள். சிலர் தோல்வியை ஓப்புக்கொள்ளவே மாட்டார்கள்.ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.அந்த கருத்தை கூறத்தான் இந்த பழமொழி.

    நல்ல பாம்மை நாம் மிதித்து விட்டால் ,அது நம் காலைச் சுற்றிக் கொள்ளும் .உதறவும் முடியாது, அடிக்கவும் முடியாது .நிச்சயம் அது நம்மை கடிக்காமல் விடாது.
    அதுபோல சிலசமயம் நாம் சில ஆபத்துக்களையும்,சில கெட்ட மனிதர்களையும் சந்தித்துதான் ஆகவேண்டியுள்ளது. அது உடன் இருப்பவர்களால் கூட நிகழும். இதை விளக்க உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்ற பழமொழி வந்தது .நம்மை நிழலாய் தொடரும் சில ஆபத்தால் நாம் துயர்படுவது தவிர்க்க முடியாமலும் போகலாம்.
    காலைச் சுத்தின பாம்பு
    கடிக்காமல் விடாது.

    என்ற பழமொழி வந்தது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #48
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by mgandhi View Post
    குப்புற விழுந்தாலும்
    மீசையில் மண் ஒட்டலே
    ---------.
    வடிவேலு படம் பார்த்த பின் பழமொழியின் விளக்கம் எல்லாருக்கும் தெளிவா தெரிய வந்தது...

    இப்பொழுது காந்தியின் தயவால் மீண்டும் ஒரு முறை தெளிவான விளக்கம்.

Page 4 of 12 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •