என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
மனிதனுக்கு சுயநலம் மட்டும் முக்கியமில்லை அதோடு கொஞ்சம் பொது நலமும் தேவை ‘தன்னைபோல பிறரையும் நினை ‘ என்பார்கள். இந்த நிலை வந்தால் பகை குறையும் மனிதநேயம் வளரும்
ஊரான்வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன்பிள்ளை தானே வளரும்.
எவ்வளவு அருமையான பழமொழி இது.
மனிதன் ஒரு சமுதாய விலங்கு. கூடி வாழும் இயல்புடையவன் ஊருடன் ஒத்துவாழ் என்றும், ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்ற எச்சரிக்கையும் ஊரின் நிலைக்கு ஏற்பவே வாழவேண்டும் என்பதை வேறுவிதமாக கூறும் பழமொழி இது
ஆடையில்லாத ஊர்ல
கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
எல்லோறும் ஆடை இல்லாமல் திரியும் ஊரில் நாம் மட்டும் ஆடை அணிந்து இருந்தால் நம்மை அவர்கள் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
அருமை காந்தி அவர்களே!!
இன்னும் தாங்க..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
சாகாமல் கற்பதே கல்வி
பிறரிடம் ஏகாமல் உண்பதே ஊன்.
எந்த மனிதனும் சுயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பழமொழி இது.
சாகாமல் கர்பதே கல்வி என்றால் எந்த ஒரு கலையோ அல்லது கல்வியோ கற்கும் போது அலட்சியமாகவே அல்லது சிரமப்பட்டு கொண்டே கற்றுக் கொள்ள கூடாது அப்படி கற்ற கல்வி மனதில் நிலையாக நிற்காது மனமகிழ்சியுடன் கற்ற கல்வியே நிலைக்கும்.
அதுபோல் அடுத்தவர் உதவியை கேட்டு அதன் மூலம் உண்ணும் உணவு தொடர்த்து கிடைக்காது.பிறர்முலம் கிடைக்கும் உணவை தவிர்த்து நம் சொந்த முயர்ச்சியில் உழைத்து உண்ணுதலே சாலச் சிறந்தது அதுவே நிலைத்து நிற்க்கும்
மிக்க நன்றி அனு
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
சிந்தின வீட்டில் சேராது மங்கின வீட்டில் வராது.
சிந்தினது என்றால் தானியங்கள் சிதரி கிடக்கும் வீட்டில் அதாவது (*பொருப்பு இல்லாதவீடு )
மங்கின என்றால் இருள் சூழ்ந்த வீடு அதாவது (நன்கு சுத்தமாக பராமரிக்காத வீடு)இப்படி பட்ட வீடுகளுக்கு செல்வமும், கல்வியும்,முறையே சேராது வராது என்பதை விழக்கும் பழமொழி இது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks