Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: இசங்கள்..

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    இசங்கள்..

    எண்ணப்புலனின் பெருஞ்சுவற்றில்
    முட்டி மோதி உடையும்
    கருத்துச் செறிவே!

    பிரவேசிக்கிற கணத்தில்
    கைக்கெட்டா காதலாய்
    கனிந்து நிற்கிறாய்

    எடுத்துண்ண இயலா ஊணை
    கண்களில் காட்டி
    உதட்டை ஈரமாக்குகிறாய்
    நாவால்.

    மதிலேறி உட்புகுந்து
    மனதடைய வேண்டுமெனில்
    மனிதம் ஒதுக்கும் நின்னை
    மாண்புமிகு கருத்தே!

    தேடிப் புணரவைத்தல்
    கலைஞனுக்கழகல்ல.
    கடைவிரித்துக் காத்திரு
    அன்றி
    பத்தினி வேடமிட்டு
    பகலில் உறங்காதே!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    அன்புள்ள தோழன் ஆதவனுக்கு,

    நேற்றே உன்னிடம் சொன்னேன், இந்தக் கவிதையை மன்றத்தில் பதித்தால் முதல் அடி என்னுடையதாகத் தான் இருக்குமென்று, இருந்தும் நீ கேட்காமல் பதித்துவிட்டாய், வாங்கிக்கொள். இந்தக் கவிதையை மட்டும் பார்த்தால் ஒரு நல்ல கவிதைதான் ஒத்துக் கொள்கிறேன், கருவும் நான் ஏற்றுக்கொள்கிறேன், என் கருத்தும் அதுவேதான், ஆனால் இந்தக் கருத்தைக் கூற உனக்கு உரிமையில்லை(மன்றமென்றதால் உரிமை என்று மறியாதையாகக் கூறியிருக்கிறேன்). அர்த்தம் புரியாமல் கவிதை எழுதுவோரைப் பற்றி நீ எப்படி விமர்சிக்கலாம் நீயே அந்த கட்சிதானே, 7000 பதிப்பைப் போட்டுவிட்டால் உன்னை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணமா? இதோ நான் ஆரம்பித்து விட்டேன், மற்றவர்களும் இனி தொடர்வார்கள், (இந்தக் கொடுமைய கேக்க ஆளிள்லையா? யாராவது கேளுங்கப்பா, முடிஞ்சா எல்லாரும் கேளுங்க).

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by rocky View Post
    அன்புள்ள தோழன் ஆதவனுக்கு,

    நேற்றே உன்னிடம் சொன்னேன், இந்தக் கவிதையை மன்றத்தில் பதித்தால் முதல் அடி என்னுடையதாகத் தான் இருக்குமென்று, இருந்தும் நீ கேட்காமல் பதித்துவிட்டாய், வாங்கிக்கொள். இந்தக் கவிதையை மட்டும் பார்த்தால் ஒரு நல்ல கவிதைதான் ஒத்துக் கொள்கிறேன், கருவும் நான் ஏற்றுக்கொள்கிறேன், என் கருத்தும் அதுவேதான், ஆனால் இந்தக் கருத்தைக் கூற உனக்கு உரிமையில்லை(மன்றமென்றதால் உரிமை என்று மறியாதையாகக் கூறியிருக்கிறேன்). அர்த்தம் புரியாமல் கவிதை எழுதுவோரைப் பற்றி நீ எப்படி விமர்சிக்கலாம் நீயே அந்த கட்சிதானே, 7000 பதிப்பைப் போட்டுவிட்டால் உன்னை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணமா? இதோ நான் ஆரம்பித்து விட்டேன், மற்றவர்களும் இனி தொடர்வார்கள், (இந்தக் கொடுமைய கேக்க ஆளிள்லையா? யாராவது கேளுங்கப்பா, முடிஞ்சா எல்லாரும் கேளுங்க).
    மிக்க நன்றி ராக்கி... முதன் முதலாக எனது கவிதைக்கு உனது பின்னூட்டம்..........

    இங்கே யாரும் யாருக்கும் இணையில்லை... ஏழாயிரம் என்பது வெறும் பதிவுகளின் எண்ணிக்கைதான்.. பின்னோக்கிப் பார்த்தால் தெரியும் அங்கே என்ன சாதித்துவிட்டேன் என்று...

    இப்படித்தான் பல புரியாத கவிதைகள்.... புரியாத பல.....

    எனக்குப் புரிந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது புரியாத கவிதைதான் கொடுக்கவேண்டும் என்பதற்காகவோ நான் இடவில்லை... பிறகு?

    நான் இந்தக் கவிதையில் எதையும் மறைத்து எழுதவில்லை. நேரடியாக... ஆனால் ஆழமாக... எனக்குத் தெரிந்த ஆழம் இதுதான். அதற்கு மேலும் எழுதுபவர்கள் உண்டு....

    சிலரை இங்கே காணுகிறேன். எளிமை + ஆழம்... எனக்கு பிடிபடுவதில்லை........................ அதற்காக கவிதை எழுதாமலும் இருக்க முடிவதில்லை...

    உனக்கே தெரியும்.. எனது கணிணியில் நான் எழுதி வைத்திருக்கும் கவிதைகள் எத்தனை என்று... ஒரு நாளைக்கு ஒன்று கொடுத்தால் கூட மூன்று மாதங்கள் ஓட்டலாம்.. ஏன் கொடுக்க முடிவதில்லை..?? நீ சொன்ன அதே காரணம்.. இசங்களை நோக்கி நானும் போகிறேனோ?

    அதன் விளைவுதான் கதைகள் எழுதுவதன் காரணம்... எனக்கு சும்மா உட்கார்ந்திருந்தால் பிடிக்காது என்பது உனக்குத் தெரியும்.. குறைந்தபட்சம் புத்தகம் இல்லாமல் கூட.... சரிதான் புத்தகங்களைப் படித்தால் அவர்கள் நம்மை விட அதிகமாக இசங்களை இழைக்கிறார்கள்...

    கவிதை புரியவில்லை என்பது ஏன்? தயவு செய்து ஆழமாக படியுங்கள்... பின்னும் புரியவில்லை எனில் அது கவிதையே அல்ல என்று சொல்லிவிட்டுப் போங்கள்.... ஏனெனில் அதுதான் உண்மை...

    நன்றி...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    ம்ம் நன்றி ஆதவா!!
    ராக்கி இது தேவையா!!
    ம்ம் நல்ல கவி நண்பரே!!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஹாஹ்ஹா!

    இதுபற்றி நானும் ராம்பாலும் நண்பனும் பூவும் பல சமயம் உரசி உறவாடி இருக்கிறோம்..

    தனக்கு விளங்கிவிட்ட கருவை உள்வைத்துப் புனைந்து
    பிறர் தன்னாலே விளங்கிச் சொன்னால் கவிக்குப் பரவசம் பன்மடங்கு..

    வாசித்தவர் எவருக்கும் புரியாமல் மௌனமாய் எல்லாரும் ஒதுங்கினால்
    கவிக்கு இரு பாதை : மேதையின் இசம்; வணிகத் தோல்வி..

    இரண்டில் இதுதான் மேல் என என்னால் சொல்ல இயலவில்லை ஆதவா..

    எளிமைக்கு இடுகுறியாய் இருப்பவரும் எப்போதோ இசத்தில் நுழைவதும்
    இசத்தின் தலைவனாய் இருப்பவர் எளிய கதைபோல் கவிதை தருவதும்..

    இரண்டுமே இலக்கிய உலகுக்குத் தேவை..

    ஒன்று - பரவலாய் பலரையும் கவிதை உலகுக்கு அழைத்துவர
    இன்னொன்று - உள்ளே வந்தவரில் சிலரின் உட்பசிக்கு விசேஷ விருந்து தர..


    ஹிண்டுவின் குறுக்கெழுத்தில் எளிது, கடினம் என இருவகை இருப்பது போல...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    படித்தவர்கள்
    புரிந்தவர்கள்
    விரித்துச் சொன்னால்....
    அறிந்திடுவேன் அடியேனும்
    ஆதவன் சொல்ல வருவது என்னவென்று....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அண்ணலே..!!
    சுடுக்கோ-ஐத் தானே சொல்றீங்க..??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Crossword ( Easy and Cryptic clues) -இல் என இரண்டு வகை உண்டு... சுடுக்கோ-விலும் இருக்கலாம் பூ!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    கிராஸ்வேர்ட் - எனக்கு விழி புரியா மொழி..!
    சுடுக்கோ - எண்கள் வட்டமிடும் கண்களில்..!

    சுடுக்கோவில் மூவகை இளசு அண்ணா.

    கடினம், மிதம், எளிது..!

    முத்துக்குளிப்போர் பொறுத்து விளையாட்டு மாறும்.. நாட்கள் தோறும்..!

    விளக்கியமைக்கு மகிழ்ச்சி மற்றும் அன்பான நன்றிகள் அண்ணலே..!

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    தப்பில்லை ஆதவா, கவிதைகளில் இரண்டு வகைகளுமே தப்பில்லை ஆதவா...

    இசையில் மெல்லிசையை இரசிக்கும் நாம், இன்னோர் இடத்தில் ஆர்ப்பாட்டமான இசையையும் இரசிக்கின்றோம் தானே...

    ஒரு கலைஞனின் புரிதலை இரசிகன் நூற்றுக்கு நூறு வீதம் உள்வாங்குவதென்பது கடினமானது. ஏனென்றால் ஒரு கலைஞனின் படைப்புக்களைத் தீர்மானிப்பதில் அவன் சார்ந்து நிற்கும் பின்புலமே முக்கிய பங்காற்றுகிறது. அந்த பின்புலத்தின் தன்மையை எல்லா இரசிகனாலும் இலகுவில் அடைய முடிவதில்லை....

    அதன் காரணமாகவே சரியான புரிதல் சாத்தியமாவதில்லை, புரிதல் கிட்டவில்லையெ என படைப்பாளிகள் மனம் நொந்து படைப்புக்களை நிறுத்துவதும் தப்பே....

    ஒரு காலத்தில் பிக்காஷோ வரைந்து தள்ளிய நவீன ஓவியங்களை அன்று ஓவியமாகவே கருத மறுத்த உலகம் இன்று அவரை நவீன ஓவியங்களின் பிதாமகனாக தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது....

    அதாவது அன்று புரிய சிக்கலானது, இன்று புரிகிறது...
    அது படைப்பாளியின் தப்புமில்லை...
    படைப்புக்களைப் பார்ப்போரின் தப்புமில்லை....!!
    மாறாக படைப்புக்களை நோக்குவோரின் பின்புலமே தீர்மானிக்கிறது...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    அன்புள்ள மன்றத்தோழர் செல்வா அவர்களுக்கு,

    இந்தக் கவிதையின் அர்த்தத்தைக் கேட்டிருந்தீர்கள், அதை கூறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,


    எண்ணப்புலனின் பெருஞ்சுவற்றில்
    முட்டி மோதி உடையும்
    கருத்துச் செறிவே!

    கவிதையின் கருத்து எண்ணத்தில் முலுமையாக கிடைக்காமல் இதுவோ அதுவோ என்றிருக்கும் நிலை,

    பிரவேசிக்கிற கணத்தில்
    கைக்கெட்டா காதலாய்
    கனிந்து நிற்கிறாய்


    கண்னால் கவிதையைப் பார்த்தாலும் அதன் அர்த்தம் கைக்கெட்டாத காதல் போல் இருக்கிறது,

    எடுத்துண்ண இயலா ஊணை
    கண்களில் காட்டி
    உதட்டை ஈரமாக்குகிறாய்
    நாவால்.

    ஏதோ ஒரு கருத்துள்ள கவிதை கண்களில் பட்டாலும் அதன் பொருள் தெரியாமல் அந்தக் கவிதையை சுவைக்க முடியாமலிருப்பது,

    மதிலேறி உட்புகுந்து
    மனதடைய வேண்டுமெனில்
    மனிதம் ஒதுக்கும் நின்னை
    மாண்புமிகு கருத்தே!


    மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் கருத்தை அடைய வேண்டுமென்றால் மனிதர்கள் அந்தக் கவிதையை ஒதுக்கி விடுவார்கள் என்பதே,

    தேடிப் புணரவைத்தல்
    கலைஞனுக்கழகல்ல.
    கடைவிரித்துக் காத்திரு
    அன்றி
    பத்தினி வேடமிட்டு
    பகலில் உறங்காதே


    ஒரு கவிதையின் கருத்தை தேடிக் கண்டுபிடித்துத்தான் தெரிந்து கொள்வதானால் அப்படிக் கவிதையெழுதுவது கவிஞனுக்கு அழகல்ல, அனைவருக்கும் தெரியும் படி கடைவிரித்துக் காட்டவேண்டும், அதைவிடுத்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற பத்தினிக்கொள்கை போல் எழுதியவனுக்கு மட்டுமே புரியுமானால் அது கவிதையல்ல என்பதே இதன் பொருள்.
    (என்னபா சரியா).

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    ம்ம் நன்றி ஆதவா!!
    ராக்கி இது தேவையா!!
    ம்ம் நல்ல கவி நண்பரே!!!
    மிக்க நன்றி அனு அக்கா...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •