Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: பரமபதம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0

    பரமபதம்

    வாழ்க்கை ஒரு
    பரமபதமாகவே தோன்றுகிறது
    எனக்கு.

    இங்கே ஏணிகளைவிட
    பாம்புகளுக்கே நீளம்
    அதிகம்.

    பகடையை உருட்டியதுடன்
    முடிகிறது ஆடுபவனின்
    கடமை.

    வெற்றியும் தோல்வியும்
    முடிவாகும் விழுந்த
    எண்ணில்.

    அதிர்ஸ்டமே ஆதாரமான
    விளையாட்டில் அறிவாளியார்
    மூடர்யார்.

    பரமபதமான வாழ்க்கைப்போட்டியின்
    தோல்விகளுக்கு பொறுப்பு
    நானல்ல.

    வாழ்க்கை சதுரங்கமாகும்போது
    என்காய்களை நான் நகர்த்தும்போது
    நிச்சயம் நான் வெல்வேன்.
    Last edited by அமரன்; 02-02-2008 at 08:28 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நண்பரே என் நன்றி முதலில்..
    என் கேள்வி பரமபதம் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமா..
    ம்ம் முயற்சிக்கு எப் பாராட்டுக்கள்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ராக்கி இதற்கு முன் நீங்கள் எழுதிய கவிதைக்கும் இந்த உங்களின் கவிதைக்கும் நிறைய வேறு பாடு இருக்கிறது..

    கருவை வார்த்தைகளுக்குள் புகுத்தி சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல இயன்றிருக்கிறது உங்களால்.. அதற்காக ஒரு தனி பாராட்டுக்கள் ராக்கி..

    வாழும் மனிதரில் பலர் பல்து குணம் கொண்டவர்.. பல்து நம்பிக்கை கொண்டவர்.. இப்படி வேற்றுமையுடைய நம்மிடம் சில ஒற்றுமைகளும் உண்டு.. என்னவெனில்.. பல சமயங்களில் மற்றவரை நம்ப தயாராக இருக்கும் நான் நம்மை நம்புவதில்லை..

    அப்படிதான் அதிஸ்டத்தையும் நம்புகிறோம்.. நம் தன்முயற்சியை நம்பாமல்.. அப்படி அதிஸ்டத்தை நம்பி தன்முயற்சி இல்லாமல் சாதிக்கும் சாதனை எல்லாம் சாதனையா ? என்று நீங்கள் எழுப்பு கேள்வி ஆழமானது சிந்திக்க வேண்டியது..

    அப்படி ஒரு வெற்றி வேண்டாம் என்முயற்சியில் எனக்கு கிடைப்பதை தான் வெற்றி என்று ஏற்பேன் எனச் சொல்லி சென்றக் கருத்து ஆணித்தரமானது அற்புதமானது..

    நல்லதோர் சிந்தனைக் கவி தந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

    அன்புடன் ஆதி
    அன்புடன் ஆதி



  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by அனு View Post
    நண்பரே என் நன்றி முதலில்..
    என் கேள்வி பரமபதம் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமா..
    ம்ம் முயற்சிக்கு எப் பாராட்டுக்கள்
    snakes and ladders game தான் தமிழில் பரமபதம். சிறுவயதில் 10 பைசாவுக்கு வாங்கி தாயக்கட்டை உருட்டி விளையாண்டோம்...
    Last edited by sarcharan; 02-02-2008 at 06:56 AM.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வழக்கமாக ராக்கியின் கவிக்குழந்தைகள் அலங்காரம் இல்லாமலே அழகாக இருக்கும். இந்தக்குழந்தையோ அலங்காரத்துடன் அதிகளவு அழகாக உள்ளது. கவிதைக் கட்டமைப்பின் வளர்ச்சி வரைபு உச்சி நோக்கி.. எளிய, அழகு நடை.. வலிய பொருள். பாராட்டுகள் ராக்கி.

    மனம்போல வாழ்வமையும் என்பது உண்மை. இது எனது நிலை. எதைபற்றி சிந்திக்கிறோமோ, எதைப்பற்றிப்பேசுகிறோமோ அது எம்மை சேரும் அல்லது நாம் அதுவாகி விடுவோம்.. வாழ்க்கையில் வெற்றி அடைய வாழ்க்கைய்யை எப்படி நோக்குகிறோம், வாழ்க்கையில் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது முக்கியமானது. உங்கள் கவிதையில், அறிந்தோ அறியாமலோ அதை புதைத்துள்ளீர்கள்..


    Quote Originally Posted by rocky View Post
    வாழ்க்கை ஒரு
    பரமபதமாகவே தோன்றுகிறது
    எனக்கு.
    .........................................
    ........................................
    வாழ்க்கை சதுரங்கமாகும்போது
    என்காய்களை நான் நகர்த்தும்போது
    நிச்சயம் நான் வெல்வேன்.
    வாழ்வை பரமபதமாகத் நோக்குபவன் அதிஸ்டம், துரதிஸ்டம் இரண்டுக்கும் நடுவில் பாதை அமைக்கிறான்.. சதுரங்கமாக நினைப்பவன் சிந்தனை, உழைப்பு இரண்டையும் ஓரமாகக் கொண்டு சாலை அமைக்கிறான்..

    சதுரங்கமாகும்போது என்பது சதுரங்கமாகத் தோன்றும்போது என்று இருந்திருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ..

    பாராட்டுகள் ராக்கி.. தொடர்ந்து சிந்தனைகளை சிதறவிடுங்கள்.
    Last edited by அமரன்; 02-02-2008 at 09:19 AM.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வழக்கமாக ராக்கியின் கவிக்குழந்தைகள் அலங்காரம் இல்லாமலே அழகாக இருக்கும். இந்தக்குழந்தையோ அலங்காரத்துடன் அதிகளவு அழகாக உள்ளது. கவிதைக் கட்டமைப்பின் வளர்ச்சி வரைபு உச்சி நோக்கி.. எளிய, அழகு நடை.. வலிய பொருள். பாராட்டுகள் ராக்கி.

    மனம்போல வாழ்வமையும் என்பது உண்மை. இது எனது நிலை. எதைபற்றி சிந்திக்கிறோமோ, எதைப்பற்றிப்பேசுகிறோமோ அது எம்மை சேரும் அல்லது நாம் அதுவாகி விடுவோம்.. வாழ்க்கையில் வெற்றி அடைய வாழ்க்கைய்யை எப்படி நோக்குகிறோம், வாழ்க்கையில் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது முக்கியமானது. உங்கள் கவிதையில், அறிந்தோ அறியாமலோ அதை புதைத்துள்ளீர்கள்..




    வாழ்வை பரமபதமாகத் நோக்குபவன் அதிஸ்டம், துரதிஸ்டம் இரண்டுக்கும் நடுவில் பாதை அமைக்கிறான்.. சதுரங்கமாக நினைப்பவன் சிந்தனை, உழைப்பு இரண்டையும் ஓரமாகக் கொண்டு சாலை அமைக்கிறான்..

    சதுரங்கமாகும்போது என்பது சதுரங்கமாகத் தோன்றும்போது என்று இருந்திருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ..

    பாராட்டுகள் ராக்கி.. தொடர்ந்து சிந்தனைகளை சிதறவிடுங்கள்.
    அன்புள்ள மன்றத்தோழர் அமரன் அவர்களுக்கு, உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. (வழக்கமாக ராக்கியின் கவிக்குழந்தைகள் அலங்காரம் இல்லாமலே அழகாக இருக்கும். இந்தக்குழந்தையோ அலங்காரத்துடன் அதிகளவு அழகாக உள்ளது.) உங்களின் பெருந்தன்மையான பாராட்டிற்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியபடி வார்த்தைகளை மாற்றினாலும் கவிதை அழகாகவே இருக்கும், ஆனால் சதுரங்கமாகத் தோன்றும்போது என்று இட்டால் வாழ்க்கை பரமபதமோ சதுரங்கமோ இருப்பது என்னுடைய பார்வையாகவே ஆகிவிடும், ஆக என் தோல்விகளுக்கு நானே பொருப்பாக ஆகிவிடுவேன்.

    இப்போது வாழ்க்கை சதுரங்கமாக ஆகும்போது இந்த சந்தர்ப்பங்களும் சூல்நிலைகளும் மனிதர்களும் என் வாழ்க்கையை தீர்மானிக்காமல் என் காய்களை நான் நகர்த்தும் போது மட்டுமே என் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நான் பொருப்பாவேன் என்று கூறியிருக்கிறேன். தோன்றும்போது என்று போட்டால் நம்முடைய என்னத்தில்தான் வாழ்க்கை இருப்பதாக ஆகிவிடும், இது என் கருத்து. உங்களின் கருத்தையும் இதில் எதிபார்க்கிறேன். மிக்க நன்றி.
    Quote Originally Posted by அனு View Post
    நண்பரே என் நன்றி முதலில்..
    என் கேள்வி பரமபதம் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமா..
    ம்ம் முயற்சிக்கு எப் பாராட்டுக்கள்
    அன்புள்ள மன்றத்தோழி அனு அவர்களுக்கு உங்களின் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி, பரமபதம் எதுவென்று தோழர் சார்சரன் கூறிவிட்டார் அவருக்கும் என் நன்றிகள்.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    ராக்கி இதற்கு முன் நீங்கள் எழுதிய கவிதைக்கும் இந்த உங்களின் கவிதைக்கும் நிறைய வேறு பாடு இருக்கிறது..

    கருவை வார்த்தைகளுக்குள் புகுத்தி சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல இயன்றிருக்கிறது உங்களால்.. அதற்காக ஒரு தனி பாராட்டுக்கள் ராக்கி..

    வாழும் மனிதரில் பலர் பல்து குணம் கொண்டவர்.. பல்து நம்பிக்கை கொண்டவர்.. இப்படி வேற்றுமையுடைய நம்மிடம் சில ஒற்றுமைகளும் உண்டு.. என்னவெனில்.. பல சமயங்களில் மற்றவரை நம்ப தயாராக இருக்கும் நான் நம்மை நம்புவதில்லை..

    அப்படிதான் அதிஸ்டத்தையும் நம்புகிறோம்.. நம் தன்முயற்சியை நம்பாமல்.. அப்படி அதிஸ்டத்தை நம்பி தன்முயற்சி இல்லாமல் சாதிக்கும் சாதனை எல்லாம் சாதனையா ? என்று நீங்கள் எழுப்பு கேள்வி ஆழமானது சிந்திக்க வேண்டியது..

    அப்படி ஒரு வெற்றி வேண்டாம் என்முயற்சியில் எனக்கு கிடைப்பதை தான் வெற்றி என்று ஏற்பேன் எனச் சொல்லி சென்றக் கருத்து ஆணித்தரமானது அற்புதமானது..

    நல்லதோர் சிந்தனைக் கவி தந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

    அன்புடன் ஆதி
    அன்புள்ள மன்றத்தோழர் ஆதி அவர்களுக்கு, உங்களின் பின்னூட்டமும் பாராட்டும் எனக்குத் தொடர்ந்து கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் இந்த ஆதரவை நிச்சயம் தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பேன், மிக்க நன்றி.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    தேறிட்ட ராக்கி....

    என்னைக் கேட்டீன்னா, நீ இப்பதான் ஒரு கருத்தை கவிதை வடிவத்தில எழுதியிருக்கேன்னு சொல்லுவேன்.... அதற்கு முதற்கன் பாராட்டுகள்...

    இந்த கவிதை நன்றாக இருப்பதால் உனக்கு இன்னிக்கு ட்ரீட்... நைட்டு ஆபீஸுக்கு வந்து சேரு
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    தேறிட்ட ராக்கி....

    என்னைக் கேட்டீன்னா, நீ இப்பதான் ஒரு கருத்தை கவிதை வடிவத்தில எழுதியிருக்கேன்னு சொல்லுவேன்.... அதற்கு முதற்கன் பாராட்டுகள்...

    இந்த கவிதை நன்றாக இருப்பதால் உனக்கு இன்னிக்கு ட்ரீட்... நைட்டு ஆபீஸுக்கு வந்து சேரு
    நிச்சயமா வ்ர்ரேன், ஆனால் ஒரு சாக்லெட்ட வாங்கிக் குடுத்துட்டு ட்ரீட் முடுஞ்சதுன்னு சொல்லிடாதே, அப்புரம் உன்னோட இசங்களுக்கு பின்னூட்டம் குடுத்திருக்கிறேன், அதைப் பார்த்துட்டு ட்ரீடைக் கேன்ஸல் பன்னக்கூடாது.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by rocky View Post
    ஆனால் சதுரங்கமாகத் தோன்றும்போது என்று இட்டால் வாழ்க்கை பரமபதமோ சதுரங்கமோ இருப்பது என்னுடைய பார்வையாகவே ஆகிவிடும், ஆக என் தோல்விகளுக்கு நானே பொருப்பாக ஆகிவிடுவேன்.

    இப்போது வாழ்க்கை சதுரங்கமாக ஆகும்போது இந்த சந்தர்ப்பங்களும் சூல்நிலைகளும் மனிதர்களும் என் வாழ்க்கையை தீர்மானிக்காமல் என் காய்களை நான் நகர்த்தும் போது மட்டுமே என் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நான் பொருப்பாவேன் என்று கூறியிருக்கிறேன். தோன்றும்போது என்று போட்டால் நம்முடைய என்னத்தில்தான் வாழ்க்கை இருப்பதாக ஆகிவிடும், இது என் கருத்து. உங்களின் கருத்தையும் இதில் எதிபார்க்கிறேன். மிக்க நன்றி..
    பரமபதத்தில் உடலுழைப்பு குறைவானது. மூளை மூலதனம் அறவே இல்லை. சதுரங்கத்தில் மூளையுழைப்பு அதிகம். சரீர தேய்மானம் சொற்பம். உழைப்பு இல்லாத இஅடத்தில் வெற்றிக்கும் தோல்விக்கும் நானெப்படி காரணாமாக முடியும்.. ஞாயமான கேள்வி. அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

    வாழ்க்கை சதுரங்கமாகும்போது என்ற பதத்தில், கவிதை நாயகன் அதிட்டத்தை நம்பும் பதத்தில் இருப்பதாக தோன்றியது. அதுவே சதுரங்கமாகத் தோன்றும்போது என்ற பிரயோகத்தில் உழைப்பை நம்பும் ஒருவனாக தோன்றினான். அதனால் மாற்றம் சிறப்போ என வினாவினேன்.

    உழைப்பு உச்சத்தில் வைத்தவர்களும் அதிட்டம் உயர்த்தியவர்களும் உலகில் உள்ளனர். அதேபோல அதிட்டமும், உழைப்பும் அதளபாதாளத்தில் தள்ளியர்களும்.. பெரும்பான்மை எதுவோ அதுவே ஆட்சியை தீர்மானிக்கிறது. பெரும்பான்மையை திரட்ட தோன்றல் முக்கியமாகிறது.

    கவிதை வாசித்து முடித்த கணத்தில் தோன்றியவை இரண்டு. உள்ளிருந்து பார்த்தபோது ஆதியுடன் ஒத்துப்போனேன். வெளியேறிப் பார்த்தபோது முரண்பட்டேன். அதிட்டத்தால் உயர்தவர்கள் கொட்டத்தைப் பார்த்து கடுஞ்சினமும், இன்னபிறவால் விரக்தியும் அடைத்த ஒருவனாக கவிதை நாயகன் தெரிந்தான். அவனே சதுரங்கமாகும்போது என்று (அதிட்டத்தை) நம்பி இருப்பது ஒவ்வாதோ என நினைத்தேன்..
    Last edited by அமரன்; 04-02-2008 at 08:34 PM.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாழ்க்கை எப்போது நம்மை நகர்த்துகிறது?
    வாழ்க்கையை எப்போது நாம் நகர்த்துகிறோம்?

    இவை இரண்டு தனித்தனிக் கட்டங்களா?
    இல்லை மாற்றி மாறி சுற்றும் வட்டங்களா?

    இந்தத்தெளிவு வந்துவிட்டால் குழப்பமில்லை!
    இது வராது இறுதிவரை தவிப்பதால்தான் தொல்லை!!


    வாழ்த்துகள் ராக்கி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    வாழ்க்கை எப்போது நம்மை நகர்த்துகிறது?
    வாழ்க்கையை எப்போது நாம் நகர்த்துகிறோம்?

    இவை இரண்டு தனித்தனிக் கட்டங்களா?
    இல்லை மாற்றி மாறி சுற்றும் வட்டங்களா?

    இந்தத்தெளிவு வந்துவிட்டால் குழப்பமில்லை!
    இது வராது இறுதிவரை தவிப்பதால்தான் தொல்லை!!


    வாழ்த்துகள் ராக்கி!
    மிக்க நன்றி இளசு அண்ணா,

    உங்களைப்போன்ற பெரியவர்களின் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் நிச்சயம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. மிக்க நன்றி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •