எங்கே நல்ல உள்ளம் இருக்கிறதோ
அங்கே சோதனையும் மலிந்திருக்கும்
எல்லாமே இழந்துவிட்டோம் என்று தோன்றும் போது
ஒன்றை மறவாதீர்கள்--அது எதிர்காலம் ஒன்று இருப்பதுதான்
உன்னைத் தாய் பத்து மாதங்கள் சுமந்தவள்
தன் பாலூட்டி வளர்த்தவள்
உனக்கு எல்லாம் அவள்தான்
அந்தத் தாய் உன்னைப்பற்றி ஆண்டவனிடம்
முறையிடும்படி விட்டுவிடாதே
உன்னுடைய மகிழ்ச்சியை உலகம் பகிர்ந்துகொள்ளத்
தயாராக உள்ளது, ஆனால் உன்னுடைய துயரத்தை
நீ மட்டும் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்..ஏனெனில்
மகிழ்ச்சியைக்காட்டிலும் துயரத்தைத்தான் உலகம் தன்னுள்
பெருமளவில் கொண்டுள்ளது
நீ யாருடன் சிரித்து மகிழ்ந்தாய் என்பதை மறக்கலாம்
ஆனால் யாருடன் அழுதாய் என்பதை மறக்கமுடியாது
உலகத்தில் எல்லாம் தெரிந்தவனும் இல்லை
ஒன்றுமே தெரியாதவனும் இல்லை
மற்றவர்களின் துயரத்தைக் கண்டு இரக்கப்படுங்கள்
ஆனால் உங்களுடைய சொந்தக் கஷ்டங்களை
உங்களிடமே வைத்திருங்கள்
Bookmarks