பூக்காதோ புது யுகம்
வாழ்வோமோ நலமுடன்
வருமோ அதிர்ஷ்டம்
கிடைக்குமோ வேலை
இருப்போமோ உயிருடன்
முடியுமா நம்மால்
என்றெடுத்ததெற்கெல்லாம்
சந்தேகத்தை
நாமே யெழுப்பி
நம்பிக்கையை
நாமே மறந்துவிட்டால்
பூக்காதோ புது யுகம்
என்றே தான்
ஏக்கத்தோடு
என்றென்றும் இருக்க வேண்டும்
பூக்காதோ புது யுகம் அல்ல
பூக்கும் புது யுகம்
என்கிற தன்னம்பிக்கையில்
எண்ண விதைகளை
எண்ணிக்கையின்றி
இதமெனும் தோட்டத்தில்
ஆழ ஊன்றினால்
பூக்குமே புது யுகம்
Bookmarks