காழுடைந்த குறிப்புடன்
முடமான கவிதை பயணத்தில்
விழிநீர்க்கோடுகளும் சுழிகளும்
அடுத்த பயணிக்கான
சமிக்கை யெனும் நினைவில்
தூரிப்போகிறது சாவின் விளிம்பு..
காழுடைந்த குறிப்புடன்
முடமான கவிதை பயணத்தில்
விழிநீர்க்கோடுகளும் சுழிகளும்
அடுத்த பயணிக்கான
சமிக்கை யெனும் நினைவில்
தூரிப்போகிறது சாவின் விளிம்பு..
Last edited by அமரன்; 25-01-2008 at 08:51 PM.
வினா: அவள் என்னை விரும்புகிறாளா வெறுக்கிறாளா?
விடை : விருப்பும் வெறுப்பும் ஒரு ஆட்டின் இரு கொம்புகள்..
-------------------------------------------------------
வினா : இது முடிவா?
விடை : இன்னொன்றின் தொடக்கம்!
------------------------------------------------------------
வினா : இது இழப்பா? வெறுமையா?
விடை : விடுப்பு, சுமைக்குறைப்பு..
------------------------------------------
வினா : இது வெப்பமா? தட்பமா?
விடை : இரண்டிலும் தோல் வேகும்.
--------------------------------------------
அமரனின் பார்வை கண்டு எனக்குள் எழுந்த வினாக்களும் விடைகளும்..
நிகழ்வுகள் ஒன்றானாலும் பார்வைகளால் மாறுபட்ட பக்கங்கள் ...
அப்போது காணும் பக்கம் பொருத்து அவரவர் எண்ணங்கள்..ஏக்கங்கள்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
உண்மைதான் அண்ணா!
கவிதை எழுதினேன். நீளமாக இருந்தது.. சுருக்கினேன்.. திருப்தி இல்லை.. சுருக்கல் தொடர்ந்தது. இறுதியில் பார்த்தால் படிப்பவர் மன நிலைக்கு ஏற்ப பொருந்தக்கூடியதாக இருந்தது.. அதை நீங்களும் வழி மொழிந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக உணர்கின்றேன்..
அய்யோ அண்ணா..! சத்தியமா ஒன்னுமே புரியல..!
ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது நீங்களும் கவிஞராயிட்டீங்கன்னு..! அதுக்கு எனது வாழ்த்துக்கள்..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks