சொந்தங்களின்
சொல்லம்புகள்
சாட்டையாய் சுழல..
பிறந்த மண்ணைவிட்டு
வேற்று மண்ணில்
முகமறியா முகங்களோடு
முகம் தொலைக்க...
பண்பட்ட மனம்
புண்பட்டு நின்றது
சக மனிதர்களின்
விலகல் கண்டு
கோபத்தின் உச்சத்தில்
குழந்தைகள் கூட
கொடியவர்களாய் தெரிய....
திடம் மனதிலும்
வலிமை உடலிலும் இருக்க
தன்மானம் விற்று
கடைகளில்
கையேந்திய பொழுது
கூனிகுறுகிய மனதை
நிமிர்த்த வழியின்றி..
வஞ்சித்த வாழ்வை
வலிகளோடு சுமந்து...
விடையறியா கேள்விகளை
விதியென்று ஏற்பதா??
விடைகாண முயற்சிப்பதா??
அறிந்தும் அறியாமல்
உலகிற்கு இந்த கேள்வி
கடவுளின் கலவை
அர்த்தநாரீஸ்வரராய்
கௌரவிக்கபடுமானால்..
அவன் படைத்த
எங்களின்
நிலை மட்டும்
காட்சி பொருளோ??????????
Bookmarks