கும்மிருட்டில்
நன்றாகத் தெரிகிறது
என் வெளிச்சம்
கும்மிருட்டில்
நன்றாகத் தெரிகிறது
என் வெளிச்சம்
அஞ்ஞானம் - இருள்.
அதனால்தான் பகலிலும் விளக்கேந்தி தேடினாராம் வள்ளலார் அன்று..
நல்வெளிச்ச ஞானமுள்ளவர் வழிகாட்டுதல் அமைவதும் - அதை
நாடி ஏனையோர் பின்பற்றுவதும் ......
யுகந்தோறும் நிகழ்ந்தாலும்........
மீண்டும் மீண்டும் நம்மைப் போர்த்த
இருளுக்கு மிகுந்த காலம் ஆவதில்லை!
பாராட்டுகள் நாகரா அவர்களே!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இருள் ஒரு அற்புதமான பாதுக்காப்பு கவசம்.
நாமெல்லாம் இருளைக் கண்டு பயந்து நடுங்குவற்கு காரணம் இப்போதுள்ள வெளிச்சம்தான்..
அன்றை காலத்தில் இருளுக்கு முன்பே மனிதன் எழுந்து தன் அன்றாட வேலையே தொடங்கினான்..
ஆனால் இன்று எந்த நேரமும் வெளிச்சம்..
ஞானம் பெற ஒரு வழி உள்நேக்கி ஆழ்ந்து இருளை நோக்கி சென்றால் கிட்டும்...
இருளுக்கு அவ்வளவு சக்தி...
ஒரு தாயின் கருவரையில் பத்து மாதம் சேய் பாதுக்காப்பாக இருப்பதை காப்பது இருள்..
அஞ்ஞானவழிக்கு வழி இருள் தியானம் செய்யுங்கள்.
ம்ம் நன்றி நண்பரே..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
இளசு அவர்களே! உள்ளொளியாம் அருளொளி இல்லையெனில் பகலும் இருள் தான் என்று போதிக்கவே வள்ளலார் பகலிலும் விளக்கேந்தி தேடினாரோ! பாராட்டுகளுக்கு நன்றி. உள்ளொளியாம் அருளொளி உம் உள்ளத்திலும் விளங்கட்டும்! இத்தமிழ் மன்றத்தின் வெளிச்சமாய் உம் உள்ளம் ஒளிரட்டும்!
இருளை உம் அருளொளியால் தெற்றென விளக்கிய அனு அவர்களே! நன்றி. தமிழ் மன்றத்தில் பரவட்டும் உம் நித்தானந்த அருள் விளக்கம்!
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
இருட்டே தெரிவதில்லை
எனக்கு மட்டும்...
-------------
மூன்று வரிகளில் நச்.... அதனாலே கவிதைக்கு ஒரு இச்...
வாழ்த்துகள்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
"நான் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறேன்"
கிறிஸ்துவின் வசனத்தைப் பிரசங்கிக்காது வாழ்ந்து காட்டும் ஆதவப் பாதிரியாரே!
எப்படித் தெரியும் உமக்கு இருள்!
வாழ்த்துகளுக்கு நன்றி ஆதவரே.
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks