Results 1 to 10 of 10

Thread: என்னுள் சில கேள்விகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    என்னுள் சில கேள்விகள்

    கண்ணீராய்..
    கானல்நீரில் விடமுயன்ற
    கப்பலாய்..
    மாறிப்போன் என்
    வாழ்க்கைக்கு
    மாற்றுயிர் உள்ளதோ ?

    வழி தவறி இருந்தாலும்
    வந்து சேர்ந்தது
    சரியாக உன்னிடம்தானென
    நம்பிப் போனவளும்
    நம்ப மறுத்துவிட்டாள்..

    காற்றுப் பையென்றும்
    யாக்கைப் பொய்யென்றும்
    கன்னி மங்கையர்
    கண்ணில் விழுந்தவனும்
    கணிகை மலர்களின்
    கட்டிலில் தவழ்ந்தவனும்
    சொல்லிப் போனதை
    எள்ளி நகைத்த
    என் எண்ணம் தவறென
    எண்ணும் தறுவாயில்
    எதுவும் செய்திட
    எனக்கொரு வழியில்லை..

    உதிர்ந்த மலர்
    உயிர்க்கொண்டது போல்
    மாண்டக் காதல்
    மற்றொன்று பூத்தாலும்
    ஆர்ந்த நினைவுகள்
    அழிந்து போகுமா ?
    அற நெஞ்சில் நிறைந்த
    அவள் முகம்தான்
    மற என்றால்
    மறந்து போகுமா ?

    இல்லை வாழ்க்கை
    இல்லை நமக்கென
    கல்லை மனமாய்
    கற்பனை செய்தாலும்
    வில்லை திருடிய
    விழிகளின் புருவமும்
    முள்ளை சுமந்த
    மூடிய இதழ்களும்


    வந்து போகும்
    வருத்தமும் ஞாபகமும்
    தந்துப் போகும்
    தாளாத துயரும்
    எந்த மொழியில்
    எடுத்து இயம்புவது
    அந்த மொழி
    அவளுக்கு என்று விளங்குவது ?


    விளங்கி அவள்
    விழிப் பார்வை
    என்மேல் என்று
    திரும்ப்புமோ எந்தன்
    திருநாள் அது
    என்று என்று
    எண்ணி சலித்து
    கண்ணீரில் கரைத்து

    துறவி என்றே
    துறந்து அனைத்தையும்
    தேடல் தேடலென
    தேடப் போனவரை
    தேடி நானும்
    தொடர்ந்து போவதா ?

    மாற்றம் வாழ்வென
    மாற்றி என்னை
    மற்றொருத்தியை
    ஏற்று கொள்ள
    இதயம் திறப்பதா ?


    இல்லை
    இல்லாமல் போன வாழ்க்கையில்
    இல்லாமல் போவதா ?

    -ஆதி
    அன்புடன் ஆதி



  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by ஆதி View Post
    மாற்றம் வாழ்வென
    மாற்றி என்னை
    மற்றொருத்தியை
    ஏற்று கொள்ள
    இதயம் திறப்பதா ?
    நிச்சயமாக!!!

    போதும் ஆதி காதலில் தோற்றவன் கல்நெஞ்சக்காரிக்காய் தாடி வளர்த்தது...
    Last edited by sarcharan; 23-01-2008 at 10:58 AM.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post

    மாற்றம் வாழ்வென
    மாற்றி என்னை
    மற்றொருத்தியை
    ஏற்று கொள்ள
    இதயம் திறப்பதா ?

    -ஆதி
    இதயம் திறப்பதுதான் சரி.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    நிச்சயமாக!!!

    போதும் ஆதி காதலில் தோற்றவன் கல்நெஞ்சக்காரிக்காய் தாடி வளர்த்தது...
    பின்னூட்டத்திற்கு நன்றி சரன்..
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பதில்கள் அற்ற கேள்விகளோ இவைகள்?

    (கவிதையின் நீளம் கொஞ்சம் குறைத்திருக்கலாம்)

    வாழ்த்துக்கள் ஆதி!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    இல்லாமல் போவதெல்லாம் கொஞ்சம் அதிகமோ ஆதி...வெறும் கவிதையெனில் ஒத்துக்கொள்ளலாம்.

    அழகான வரிகள் ஆதி. காதல் சுடுகிறது...கீழே போடவும் முடியவில்லை...கவிதை கொதிக்கிறது...மனம் வேகாமல் மிஞ்ச ஆறுதல்கள் ஆதி.

    மீண்டுமொரு அழகான காதல் கவிதைக்கு பாராட்டுக்கள்...ஆதி. கவிதை தந்து சென்ற காதலிக்கு கண்டனங்களும்..
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    காதலில் கரைந்தவருக்கு கேள்விகள் கவிதையானது அருமை
    நன்றி ஆதி கவிதைக்கு
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by ஆதி View Post
    வாழ்க்கைக்கு
    மாற்றுயிர் உள்ளதோ ?

    ஆர்ந்த நினைவுகள்
    அழிந்து போகுமா ?
    அற நெஞ்சில் நிறைந்த
    அவள் முகம்தான்
    மற என்றால்
    மறந்து போகுமா ?

    அந்த மொழி
    அவளுக்கு என்று விளங்குவது ?
    தேடி நானும்
    தொடர்ந்து போவதா ?

    மற்றொருத்தியை
    ஏற்று கொள்ள
    இதயம் திறப்பதா ?


    இல்லை
    இல்லாமல் போன வாழ்க்கையில்
    இல்லாமல் போவதா ?

    -ஆதி
    காதல் விட்டு சென்ற கேள்விகள் பல...
    இது தொடர்ந்தால்..
    வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்...

  9. #9
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    மேற்க்கோளிட்டு எதை காட்டுவது...!! கவிஞரின் வரிகளில் உயிர் தெறித்து
    எழுகிறது..!
    காதலுக்காக தண்ணி அடித்து தாடி வளர்த்து புலம்புவதிலெல்லாம்
    எனக்கு என்றுமே உடன்பாடு கிடையாது...! இரு மணங்கள் சேர்ந்து இணக்கமுறுவதுதான் காதல்..! ஒருதலை யாக காதலித்து உருகுவதில் என்ன பயன்....!

    வரிகள் உயிரில் நுழைத்து திரும்புகிறான....!

    பாராட்டுக்கள்கவிஞரே..!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதியின் கேள்விகள் சரமாய் வெடித்திருக்கின்றன....சந்தமாய் அடுக்கப்பட்ட சத்தமான கேள்விகளுக்கு மொத்தமாய் பதில் சொல்ல யாராலும் முடியாது.
    ஒருத்தியால் மூடிய இதயக்கதவுகள் வேறொருத்தியால் திறக்கப்படும்போது...அதுவரை உள்ளே அடைந்து கிடந்த அத்தனை கேள்விகளும் சொல்லாமல் வெளியேறும்.
    நெடிய கவிதையாக இருந்தாலும் ஆங்காங்கே பல ஆச்சர்ய சங்கதிகளை வைத்து தைத்த ஆடையாக இருப்பதால்...அழகாக இருக்கிறது.

    வாழ்த்துகள் ஆதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •