கண்ணீராய்..
கானல்நீரில் விடமுயன்ற
கப்பலாய்..
மாறிப்போன் என்
வாழ்க்கைக்கு
மாற்றுயிர் உள்ளதோ ?
வழி தவறி இருந்தாலும்
வந்து சேர்ந்தது
சரியாக உன்னிடம்தானென
நம்பிப் போனவளும்
நம்ப மறுத்துவிட்டாள்..
காற்றுப் பையென்றும்
யாக்கைப் பொய்யென்றும்
கன்னி மங்கையர்
கண்ணில் விழுந்தவனும்
கணிகை மலர்களின்
கட்டிலில் தவழ்ந்தவனும்
சொல்லிப் போனதை
எள்ளி நகைத்த
என் எண்ணம் தவறென
எண்ணும் தறுவாயில்
எதுவும் செய்திட
எனக்கொரு வழியில்லை..
உதிர்ந்த மலர்
உயிர்க்கொண்டது போல்
மாண்டக் காதல்
மற்றொன்று பூத்தாலும்
ஆர்ந்த நினைவுகள்
அழிந்து போகுமா ?
அற நெஞ்சில் நிறைந்த
அவள் முகம்தான்
மற என்றால்
மறந்து போகுமா ?
இல்லை வாழ்க்கை
இல்லை நமக்கென
கல்லை மனமாய்
கற்பனை செய்தாலும்
வில்லை திருடிய
விழிகளின் புருவமும்
முள்ளை சுமந்த
மூடிய இதழ்களும்
வந்து போகும்
வருத்தமும் ஞாபகமும்
தந்துப் போகும்
தாளாத துயரும்
எந்த மொழியில்
எடுத்து இயம்புவது
அந்த மொழி
அவளுக்கு என்று விளங்குவது ?
விளங்கி அவள்
விழிப் பார்வை
என்மேல் என்று
திரும்ப்புமோ எந்தன்
திருநாள் அது
என்று என்று
எண்ணி சலித்து
கண்ணீரில் கரைத்து
துறவி என்றே
துறந்து அனைத்தையும்
தேடல் தேடலென
தேடப் போனவரை
தேடி நானும்
தொடர்ந்து போவதா ?
மாற்றம் வாழ்வென
மாற்றி என்னை
மற்றொருத்தியை
ஏற்று கொள்ள
இதயம் திறப்பதா ?
இல்லை
இல்லாமல் போன வாழ்க்கையில்
இல்லாமல் போவதா ?
-ஆதி
Bookmarks