என் தலைகோதும் பொழுது
குழந்தையானாய்
என்னை கண்டிக்கும் பொழுது
தாயானாய்
என்னை உருவாக்கும் பொழுது
தோழியனாய்
முடிவில்
என்னை உருக்குலைத்த பொழுது
என் காதலியனாய்........
.
என் தலைகோதும் பொழுது
குழந்தையானாய்
என்னை கண்டிக்கும் பொழுது
தாயானாய்
என்னை உருவாக்கும் பொழுது
தோழியனாய்
முடிவில்
என்னை உருக்குலைத்த பொழுது
என் காதலியனாய்........
.
Last edited by அமரன்; 16-02-2008 at 06:31 PM.
கவிதையில் அசல் தன்மை இல்லாமல் இருக்கின்றது நண்பரே
அத்துடன் காதலி என்பதுடன் நீங்கள் இணைத்துள்ள வாக்கியக்குறிப்பு ஜீரணிக்கும்படிய்யாகவும் இல்லையே நண்பரே
அன்புடன் ஐஐ
மனிதம் வாழட்டும்
உருக்குலைத்து மீண்டும் உருவேற்றுவர்கள். கவலை வேண்டாம்.
Last edited by அமரன்; 16-02-2008 at 06:31 PM.
உருக்குலைப்பதும், புது உருவாக்குவதும் காதலியில் மட்டுமல்ல, உங்களது காதலின் ஆழத்திலும் தங்கியுள்ளது நண்பரே..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அவளின் ஒவ்வொரு அசைவிலும் வெவ்வேறு முகங்களை பார்த்த நீங்கள்
ஏதோ ஓர் உணர்வு ஊருகுலைத்து உங்களை அவள் வாசம் காதல் அரிதாரத்தை பார்க்க வைத்து விட்டதோ..!
நல்ல படைப்பு நண்பர் நம்பி... தொடருங்கள்
Last edited by அமரன்; 16-02-2008 at 06:31 PM.
துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!
நன்றி வசீகரன்
உருகுலைந்துதான் போனேன்
என்னை மீண்டும் உருவாக்கி (எழுதச்செய்ய)
என் தோழியான தாயே காரணம்.
பிழைகள் இருப்பின் மன்னிக்க
விரைவில் திருத்திகொள்கிறேன்....
குழந்தை கலைத்த கேசம்,
தாயின் மெ(மே)ன்மைக் கண்டிப்பு,
தோழமையின் அருகாமை
அனைத்தும் இதமானவை..
கவிதையில் அழகாக பொருத்தியமைக்கு பாராட்டுகள்.
படித்த, பார்த்த, அனுபவித்தவற்றின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது கடினமானது.
தொடர்ந்து எழுதி இன்னும் திறன்பட வாழ்த்தும் பாராட்டும்..
Last edited by அமரன்; 16-02-2008 at 06:32 PM.
பிசைந்து குழைத்து
உருக் கொடுத்த போதும்
தலை கலைத்து
அழகுற வாரும்போதும்
தூசி "தட்டி"
பளிச்சிடச் செய்தபோதும்
பிறக்காத படுத்தல்
சீவிச் சிங்காரிக்கையிலேன்?
பக்குவம் உன்னுள்
பட்டு விட்டதோ தோழா?
Last edited by வாசகி; 24-01-2008 at 10:42 AM.
ஆகா!!
கவிதையின் அழகு நன்கு புலப்படுகிறது...
அனைத்தும் காலநிலைக்கேற்ப தானாக நிகழ்பவை..
வாழ்க்கையில் அனைத்தும் படிபடியாக நடக்கிறது..
கவலை வேண்டாம் தோழனே..
ம்ம் என் வாழ்த்துக்கள்
Last edited by அமரன்; 16-02-2008 at 06:32 PM.
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
பிறர் குறை காணும் முன்பு தன் குறை கலைவது நன்று நண்பா..!!
உருவாக்கியவள் எப்படி உருக்குலைப்பாள்...?? ஏற்புடையதாக இல்லை நண்பரே..! ஆனாலும் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்..!!
உங்கள் சோகம் உணர்கிறேன்.. அதை சொன்னவிதம் மறுக்கிறேன்.. நண்பரே..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks