மனிதர்கள் அத்தனை பேரும் பூமியை மிதிக்க
நீ மட்டும் தானடி மிதித்த இடத்துக்கு ஒத்தடம் கொடுக்கிறாய்!
அட என்ன இது!
செடியும் காணவில்லை! கொடியும் காணவில்லை!
ஆனால் வழி நெடுக கொட்டிக்கிடக்கின்றன பூக்கள்!
ஓ! என்னவளின் காலடி தடங்களா?
பூக்களுக்கு தேனீக்கள் மேல் கோபமாம்!
தேன் குடிக்க தங்கள் மேல் உட்காராமல்
உன் காலடி தடங்கள் மீது உட்காருவதால்!
பூங்கொடிகள் அசைவதற்கு காரணம் காற்று என்றிருந்தேன்!
உன் முகம் பார்த்து வெட்கி தலை குனிந்து
உன் காலடி தடங்கள் பார்த்து மீண்டும் வெட்கி தலை நிமிர்ந்து
மேலும் கீழும் தலையை ஆட்டுகிறதோ?
உனது காலடி தடங்கள்
பூமியின் கிரீட முத்துக்களா?
தரையில் பூத்த தாமரைகளா?
புதைந்திருந்து மேல் வந்த புதையல்களா?
பருவ தரையின் கன்னப் பருக்களா?
வழி நெடுக வீசப்பட்ட அழகின் விதைகளா?
ஒருவேளை உனது காலடிகள்
நிலவில் நின்று பார்க்கும் போது
ஔவை பாட்டி போல தெரியாமல்
அழகிய சிற்பமாக தெரியுமோ?
அங்கே பார் எறும்புகளை!
நீ போட்ட கோல(மாவு)த்தை திண்காமல்
நீ விட்ட காலடி தடங்களை திண்கின்றன!
நீ நடந்தும் காலடி தடங்கள் பதியாததால்
பாறைகள் வடிக்கும் கண்ணீர் தான் அருவிகளோ?
உன் காலடி பட்டால்
புல்வெளி - பூங்காவனம்!
5 ரூபாய் - 500 ரூபாய்!
கடலோர உன் காலடி சுவடுகள்!
சின்ன சின்ன குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!
ஓ! சொற்குற்றம் உள்ளதே இந்த கவிதையில்!
நக்கீரன் படிப்பதற்குள் மாற்றி விடுகிறேன்!
மனிதர்கள் நடந்தால் அது "காலடி"!
நீ நடந்தால் அது "பூவடி"!
நீ நடந்த பின்பு தரையெல்லாம் பூவடி!
.
Bookmarks