ஒரு பொருள்
இரு தோற்றம்
குறைபாடு....
பார்ப்பவனிடமா...?
படைத்தவனிடமா..?!
ஒரு பொருள்
இரு தோற்றம்
குறைபாடு....
பார்ப்பவனிடமா...?
படைத்தவனிடமா..?!
Last edited by சுகந்தப்ரீதன்; 22-01-2008 at 12:06 PM.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
அட... அதுக்குள்ளே ஒரு கவிதையா..? இந்த கவிதைக்கான கரு எங்கிருந்து கிடைச்சதுன்னு எனக்குத்தானே தெரியும்..??
ஒண்ணும் சொல்ல முடியலைப்பா.. உடனே அது வேற இடத்துல கவிதையாகிடுது..! என்ன கொடுமை சுகந்தா..?!
ஆனா, இந்த கேள்வி என் மனதிலும் உண்டு..!! தொடரட்டும் தொண்டு..!!
அன்புடன்,
இதயம்
அழகான பெண் நடந்துவருகிறாள்
பார்க்கும் சிலர் கையெடுத்து கும்பிடுகிறார்கள்
பார்க்கும் சிலர் கையால் தொட நினைக்கிறார்கள்
இது பார்ப்பவர்களின் தவறா அல்லது படைத்தவரின் தவறா!!!
கவிதை சிறிதாக இருந்தாலும் நெச் என்றிருந்தது. பாராட்டுக்கள்.
விடாகொண்டன் ஐயா இதயம் அண்ணா அவர்களே..! இது இன்ஸ்டண்ட் கவிதையல்ல.. இதுபோல் நான் நிறைய கிறுக்கி இங்கே பதியாமல் விட்டிருக்கிறேன் இதுவரை..!
இப்போது அவசியம் ஏற்பட்டதால் இதை இங்கே பதிந்தேன்..! ஆனாலும் சூழ்நிலையை தனக்கு சதகமாக பயன்படுத்துவதில் நீங்கள் சரியான ஆளுப்பா..! இனி எச்சரிக்கையா இருக்கனும் போலிருக்கே..அண்ணனுங்களிடம்..?!
Last edited by சுகந்தப்ரீதன்; 22-01-2008 at 12:52 PM.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
பொருளுக்கு என்றுமே ஒரே தோற்றம்தான்.பொருளின் பொருள் சொல்லலில்தான் பார்த்தவனின்,படைத்தவனின் பார்வை வேறுபாடு இருக்கிறது.
நல்ல கவிதை சுபி.வாழ்த்துகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பார்வை இருவகையிலும் வேறுபடும் சிவா...!
உதாரணத்திற்கு.. ஆஞ்சநேயர் சிலையை காட்டி என்னிடம் கேட்டால் ஆஞ்சநேயர் என்பேன். என் குழந்தையிடம் காட்டி கேட்டால் குரங்கு எனச்சொல்லும். இது பார்ப்பவனின் பிழை..!
அதே ஆஞ்சநேயர் சிலை அதற்கான இலக்கணங்களை இழந்து இருந்தால் (படைப்பாளி அப்படி வடித்திருந்தால்) நானும் அதை குரங்கு என்று தான் சொல்வேன். இது படைப்பாளியின் பிழை..!!
அன்புடன்,
இதயம்
ஒரு பொருள்
இரு தோற்றம்
குறைபாடு....
பார்ப்பவனிடமா...?
படைத்தவனிடமா..?!
இது ஏன் குறைபாடு என்று எண்ணியது
உங்கள் மனம்....?
கவிதை சிந்தனையை தூண்டுகிறது ப்ரீதன்...
Last edited by ஷீ-நிசி; 22-01-2008 at 12:49 PM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஏற்கனவே நாங்க முடியை புடிச்சி முட்டிக்கிட்டுதான் இருக்கோம்.. அப்படியே நீங்க முடிஞ்சுட்டு போனா புண்ணியமா போகும் உங்களுக்கு..?!
மிக்க நன்றி சிவா அண்ணா...!
மிக்க நன்றி நண்பரே...!
அன்றாடம் கண்ணில படும் காட்சிகளும் வாழ்க்கை அனுபவங்களும்தான் கவிஞரே இதுபோன்ற எண்ணங்கள் மனதில் தோன்ற காரணமாகிறது...!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
சின்ன திருத்தம்ஒரு படைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் இருவர் மட்டுமே..! 1. படைப்பாளி. 2. பார்ப்பவன்.
1. படைப்பாளி. 2. பார்ப்பவர்கள்.
ஒரு படைப்பு எல்லோருக்குமே சரியாய் இருப்பதாய் தெரிந்தால்,
அந்த படைப்பில் குறையில்லை
ஒரு படைப்பு எல்லோருக்குமே தவறாய் இருப்பதாய் தெரிந்தால்,
அந்த படைப்பில் நிறையில்லை...
ஒரு படைப்பு ஒருவனுக்கு சரியாயும், மற்றவனுக்கு தவறாயும் தெரிந்தால் அந்த படைப்பு எந்த வகை?
அதனால்தான் கேட்டேன், இது ஏன் குறைபாடு என்று எண்ணியது உங்கள் மனமென்று?
Last edited by ஷீ-நிசி; 22-01-2008 at 01:33 PM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks