சகோதரி யவனிக்காவின் தொகுப்பில் வந்த சூடு எனும் பதத்தில் எழுதப்பட்ட பின்னூட்டக் கவிதையை சில மாற்றங்களுடன் புதிய பதிவாய் தந்துள்ளேன்.
சூடு
மண்ணைக் கல்லாக்கும்
கல்லைக் கரைய வைக்கும்.
ஆக்கும் அழிக்கும் சிவனின் சூடு
மனிதச் சூட்டின் வினை ஜனனம்.
ஜனனத்தின் தன்மை மயக்கம்
சூடு மறைந்த உடம்பு சுடுகாட்டுச் சொத்து
வினைக்கு வினையாய் விளைவது சூடு
காலத்தைக் கணித்ததும் சூடு
இருளைத் தகர்த்ததும் சூடு
சூட்டினால் பெற்ற சுகங்கள்
இருட்டினை நீக்கிய வரங்கள்
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு
மனிதனாகாவிட்டா மரணமெனும் சூடு
சட்டி சுட்டதும் கை விட்டதும்
காலமிட்ட சூது அநத்க் கயவனின் சூடு
காலனின் சூட்டை கவனப்பார் யாருமிலர்
காலனை வென்ற கணவனின் சூட்டினை
கருத்தாய்ப் பெற்றால் சூடும் சுகமே
குளிர்காய்வதும் சூட்டினிலே
பற்றியெறிவதும் சூட்டினிலே
பற்றியது எல்லாம் பாழே
சூடிட்டது சுயம்புவின் சூட்சுமம்
சுயம்புவின் சூடு ஞானத்தின் வீடு.
சூடில்லா உடம்பு சூன்யித்தில் துரும்பு
உள்ளத்தில் சூடு ஞானமாக்கும்
வார்த்தையில் சூடு உறவைக் கெடுக்கும்
உதட்டின் சூடு உயிரை இணைக்கும்.
இயக்கத்திற்கு மூலம் சூடு.
இயங்கானிலையிலும் சூடு.
இல்லாமை ஆக்குவது சூடு.
உயிரை உறவை உடம்மை தீய்ப்பது சூடு
ஆக்க வந்த சூடு அழித்தது அம்பலத்தே
சுத்தத்தின் ரூபம் சுகிர்தத்தின் சூடு
வெறுமையின் சூடு வெட்டவெளியாக்கும்
நன்மையான சூடு ஞானத்தின் திறவுகோல்
இதனமான சூடு இதயத்திற்குத் தேவைதான்.
பதமான சூட்டால் பரமபதம் கிட்டும்
அது வள்ளலில் வாய்மையால்
வாய்த்தோருக்கு வாய்க்கும்
வாயிலிட்ட சூட்டினால்
வார்த்தை விளக்கானது வார்த்தையெனும்
விளக்கால் வசமானது வீடு
சூடு நன்மையா தீமையா?!!!
Bookmarks