Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 39

Thread: அமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by ஜெயாஸ்தா View Post
    ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன் வாத்தியார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஓவியம் வரைந்தவர் மணியம் செல்வன் என்ற ம.செ. அவரின் மாணவர் பெயர் மணியம். நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர். அவர்தான் கல்கி இதழில் வெளிவந்த பொன்னியின் செல்வனுக்கு ஓவியம் வரைந்தவர். அவரிடம் சில காலம் நான் மாணவனாக இருந்திருக்கிறேன். அவரிடம் ஓவியம் அதிகம் பயின்றதை விட, பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் கதைகளைத்தான் அதிகமாக பயின்றிருக்கிறேன். ஓவிய வகுப்பு வந்தாலே மாணவர்களான எங்களுக்கு ஏற்படும் சந்தோசத்தை அளவிடமுடியாது. காரணம், மணியம் சார் மிக அருமையாக இந்தக் கதைகளை எங்களுக்கு சொல்லித்தருவார். கதை சொல்லும் போது கண்களை மூடிக்கொண்டு அப்படி கதையோடு ஒன்றியபடி சொல்வார். இடையிடையே கரும்பலகையிலும் ஓவியம் வரைந்து அதைக்கொண்டும் கதையை விளக்குவார். பழைய ஞபாகத்தை கிளிறிவிட்டுவிட்டீர்கள் வாத்தியார்.
    பொன்னியின் செல்வன், கல்கியின் காலகட்டங்களில் வெளிவந்தபொழுது ஓவியம் வரைந்தவர்தான் மணியம். இப்பொழுது மீள்பதிப்பாக வந்த பொன்னியின் செல்வனுக்கு ஓவியம் வரைபவர்தான் மணியம் செல்வன் (ம.செ). அஃதோடு அவர் மணியம் அவர்களின் மகன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மாணவர் மட்டுந்தானா? ம.செ இப்பொழுது ஆனந்தவிகடனில் பல ஓவியங்கள் வரைகிறார். கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் (வைரமுத்துவிற்கு சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றுக் கொடுத்த நூல்) மற்றும் பல சிறுகதைகட்கும் அவர் ஓவியம் வரைந்த்துள்ளார்.

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    உங்கள் பதிவை படித்ததில் அமரர் கல்கியின் படைப்புக்களை நீங்கள் சிலாகித்து எழுதியிருப்பதன் மூலம் அவற்றை எத்தனை தூரம் நீங்கள் இரசித்து மகிழ்ந்திருக்கிறீர்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. நானும் கல்கியின் படைப்புகளான பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, அலை ஓசை, சிவகாமியின் சபதம், மோகினித் தீவு, பொய்மான் கரடு, தியாக பூமி, மகுடபதி, கள்வனின் காதலி, சோலைமலை இளவரசி ஆகியவற்றை என் பல்வேறு பிராய கட்டங்களில் படித்திருக்கிறேன். அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு கள்வனின் காதலி..!! அவரின் படைப்புகளில் பொன்னியின் செல்வன் சாகா வரம் பெற்றது என்பதை அதைப்பற்றி பெரும் நெகிழ்ச்சியுடன் பேசும் மனிதர்களை கொண்டு கணித்தும் இருக்கிறேன்.

    ஆனால், இந்த விஷயத்தில் நான் உங்களின் எதிர் துருவம் என்று தான் சொல்ல வேண்டும். படைப்பாளியின் கதைகளில் இரு வகை உள்ளது. 1 வெறும் பொழுது போக்கை அடிப்படையாக கொண்ட கற்பனை (Fantasy) கதைகள். 2. இயல்பை விட்டு கொஞ்சமும் விலகாத கதாபாத்திரம், நிகழ்வுகளை உள்ளடக்கிய உணர்வுகளுடன் கலந்துறவாடும் கதைகள். நீங்கள் குறிப்பிடும் கல்கியின் கதைகள் பெரும்பாலும் முதல் வகையை சார்ந்தவை. அவை பெரும்பாலும் காதல், வீரம், நீதி என்று கற்பனையை சுற்றி வந்து, இயல்பு வாழ்க்கையில் நடக்காத ஒன்றிற்காக நிம்மதியை தொலைக்கும் நம் மனதை கற்பனை கொண்டு ஆறுதல் அளிக்கும் கதைகள். இந்த வகை கதைகளுக்கு வாசகர்களிடையே என்றும் பெரும் வரவேற்பு உண்டு (ஹாரிபாட்டரை விட, ஜேம்ஸ் பாண்டை விட ஒரு சரியான உதாரணம் வேண்டுமா என்ன..?). கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கனவுகளில் மிதக்கவிடும் கதைகள் என்பதாலோ என்னவோ, எதார்த்தத்தை விரும்புவபவர்களை இந்த கதைகள் அவ்வளவாக கவருவதே இல்லை. 20, 30 பாகங்கள் கொண்ட இது போன்ற வீர, பராக்கிரம கதைகளை விட 20 வரிகளை கொண்ட ஒரு சிறுகதை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையுடையதாக இருக்கிறது. காரணம், எதார்த்தத்தின் சக்தி அத்தனை வலியது..!

    கல்கியின் கதைகளில் வர்ணனைகள், சம்பவங்கள், உரையாடல்கள் மிகவும் அழகான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் (சாண்டில்யனின் படைப்புக்களும் அப்படியே..!). ஆனால், எதார்த்தம் அத்தனை அழகில்லையே..! அதனாலேயே என்னைப்போன்றவர்களுக்கு அந்த கதைக்குள் தன்னை நுழைத்து, கதையின் போக்கோடு நாம் செல்வதில் பெரும் தடை ஏற்படும். கற்பனை கதைகளின் மீதான என் ஈடுபாடு சிறுவயதில் ஏற்பட்டு அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆரவல்லி, சூரவல்லி கதைகள் வரை சுற்றித்திரிந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அத்தகைய கற்பனையை ஒட்டிய கதைகளின் ஆர்வம் குறைந்து, இறுதியாக வடிந்து இதயத்தை நெகிழ வைக்கும் உணர்வு பூர்வமான கதைகளில் உள்ளத்தை பறிகொடுக்க வைக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலைக்கு ஆளானாதாலோ என்னவோ வெறுமையாக எடுக்கப்பட்ட செல்லாத ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படம், கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் கொடுக்காத ஒரு பாதிப்பை, நிறைவை எனக்கு கொடுக்கிறது.

    உங்களுடைய கற்பனை உணர்வை எங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி எனக்கு. ! அதே போல் இது தொடர்பான என் மன ஓட்டத்தை இங்கே பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி..!! உங்களுக்கு ஆதரவாக இங்கே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அப்புறமென்ன... நடத்துங்கள் உங்கள் இராஜாங்கத்தை..!!
    Last edited by இதயம்; 15-01-2008 at 12:31 PM.
    அன்புடன்,
    இதயம்

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    பழைய நினைவுகளுக்குள் கொண்டு போய் தள்ளிவிட்டது, வாதியார் ஐயாவின் இந்தப் பதிப்பு..

    என்னிடம் கல்கியின் நீங்கள் மேல் குறிப்பிட்ட அத்தனை நாவல்களும் உள்ளது, ஆனாலும் நான் படித்தது இரண்டுதான் பார்த்தீபன் கனவு, சிவகாமியின் சபதம், இரண்டையும் இரண்டு நாளில் படித்து முடித்தேன்.

    படிக்கும் போது மனதில், நினைவுகளில், உணர்ச்சிகளில் சுழன்றக் கதாப்பாத்திரங்கள், முழுக்கதையையும் படித்த உடன் எந்த ஒரு பாதிப்பையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை, முந்தியில் இருந்தே கதை என்பது பொழுதுகளை இருட்டடிக்கும் ஒரு வேலை என்று எண்ணி இருந்ததான் இந்தக் கதைகளை படித்தவுடன் நான் எண்ணியது சரியே என உறுதி செய்து கொண்டேன்..

    இருந்தாலும் எனக்குள் ஒரு நெருடல் இருப்பது உண்டு, கல்கியும் புதுமைப்பித்தனும் வாழ்ந்தது ஒரே காலத்தில் தான் என்றாலும், கல்கிக்கு இருந்த பெயர், புகழ் புதுமைப்பித்தனுக்கு கிடைக்கவில்லை.

    ஆனால் புதுமைப்பித்தன் கதைகள் படிப்பவர் அனைவரையும் பாதிப்புக்குள்ளாகும் ஒரு அரூப சக்தியைக் கொண்டது, பெரும்பாலும் சமூகம் சார்ந்த மூடப்பழக்கம் சார்ந்த ஒரு படைப்பாகவே இருக்கும்..

    பாரதிப் போல் புதுமைப்பித்தனும் வாழும் காலங்களில் கண்டுக்கொள்ளப் படாத படைப்பாளியாகவே இருந்துள்ளார்..

    அன்புடன் ஆதி
    அன்புடன் ஆதி



  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    லொள்ளூவாத்தியாரைப்போல்ல் கல்கியா அல்லது சாண்டில்யனா சிறந்தவர் என்ற கேள்வி என் மனதிலும் எழுந்ததுண்டு...

    அவர்கள் இருவரது கைவண்ணத்திலும் மதிமயங்கியிருக்கின்றேன்..... நான் ஏழாம் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே நாவல்களில் ஆவல் கொண்டு கண்ட கண்ட நாவல்களையெல்லாம் படிக்க ஆரம்பித்தேன், பின்னர் சிறிது சுதாகரித்து நல்ல நாவல்களை தேடித்தேடி படிக்கலானேன்.... அந்தவகையில் எனக்கு முதலில் கிடைத்தது "கடல் புறா" சாண்டில்யனின் நாவல்.. அதிலிருந்து அவரின் நாவல்களில் பைத்தியம் பிடித்திருந்தேன்... அந்த வயதிலேயே அந்த பைபள் கட்டு போன்ற நாவலை கையில் வைத்து நாள் கணக்காக படிக்கும் என்னை சகதோழர்கள் ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தார்கள், நான் விடவில்லை பாடசாலை வசிகசாலையிலிருந்த சகல நாவல்களையும் முடித்துவிட்டேன்.....

    சமீபத்தில் ஒரு கண்காட்சியில் சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களையும் வாங்கி "ஆங்கில" மீடியத்தில் படிக்கும் எனது மகளுக்கு பரிசளித்தேன்....
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இதில் நான் வாசிக்காதது காந்தியடிகள்தான்..
    சிவா ஜி, அது காந்தியடிகள் புத்தகம் அல்ல. அலையோசையில் கல்கி காந்தியை பற்றி எழுதியதை தான் அப்படி குறிப்பிட்டேன். போல்ட் செய்ததால் வந்த குழப்பம் சரி செய்து விட்டேன்.

    [QUOTE=சிவா.ஜி;316399]எனக்கு காந்தியை பிடிக்காது.அதனாலேயே அதை படிக்க விருப்பம் காட்டவில்லை. /QUOTE]

    கொள்கை ரீதியாக அவரை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் எழுதிய விசயங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். காந்தி எழுதிய்வைகளை அதை படித்து பாருங்கள் பிறகு மாற்றி கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நீங்கள் அளித்துள்ள படங்களும் அருமை.மிக்க நன்றி வாத்தியார்.
    அங்கயே ஒரு வார்த்தை பாராட்டி போட்டிருக்கலாமே. சந்தோச பட்டிருப்பனே
    Last edited by lolluvathiyar; 17-01-2008 at 01:21 PM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வேறுபடுகிறேன் வாத்தியாரே, வேறுபடுகிறேன்...
    இது உங்களது பார்வையாக மட்டும் இருக்கின்ற போதிலும் பல இடங்களில் வேறுபடுகிறேன்...

    சாண்டில்யனையும் கல்கியையும் ஒப்பிடக் கூடாது என்று தொடங்கிவிட்டு தொடர்சியாக இருவரையும் ஒப்பிட்டு இருக்கிறீர்களே...??
    அது எந்த வகையில் நியாயம்...??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #19
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    கொள்கை ரீதியாக அவரை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் எழுதிய விசயங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். காந்தி எழுதிய்வைகளை அதை படித்து பாருங்கள் பிறகு மாற்றி கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    அவரையும்,அவரது கொள்கைகளையும் அறவே பிடிக்காது எனும்போது அவர் எழுத்து மட்டும் எப்படி பிடிக்கும் வாத்தியார்?இன்றிருக்கும் அரசியல்வாதிகளைவிட மோசமானவர் அவர்.இரட்டை வேஷதாரி... இதற்குமேல் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.
    Last edited by சிவா.ஜி; 20-01-2008 at 06:44 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    காந்தியை பற்றியும் அவர் கருத்துகள் பற்றியும் விவாதிக்க வேறு திரி தொடங்கி விடலாம். இந்த திரி அமரர் கல்கியை பற்றி மட்டுமே இருக்கட்டும்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #21
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    தவறுதான். ஏற்றுக் கொள்கிறேன் திரு வாத்தியார். அதையும் ஆரம்பித்து "வையுங்களேன்".
    Last edited by சாலைஜெயராமன்; 20-01-2008 at 06:38 AM.

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by salaijayaraman View Post
    வருத்தத்துடன் ஒரு கருத்து.

    வக்கிரபுத்தியுடைய ஒரு தனிமனிதன் தன்னைச் சோதித்துக்கொள்ள தேர்ந்தெடுத்த களம் இந்திய நாட்டின் சுதந்திரம்.

    அந்த மனிதரின் வறட்டுப் பிடிவாத குணத்தால், பிறரின் உணர்வுகளுக்கு மதிப்புத் தராத பண்பினால், தேசத் தலைவர்கள் திரு சுபாஷ் சந்திரபோஸ், வீர சவார்க்கர் போன்ற எத்தனையே தன்னலமற்ற தியாகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதுதான் இன்றளவும் உண்மை.
    தங்களின் இந்தக்கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன் ஜெயராம் அண்ணா. வழக்கம் போல் இந்த கருத்தை வைத்து ஒரு புதிய திரியை பற்ற வைக்க அன்பு நண்பர் புள்ளியை அழைக்கிறேன்.
    புள்ளி எங்கிருந்தாலும் உடனடியாக கொள்ளிக்கட்டையுடன் மேடைக்கு வரவும். (நான் கொள்ளிக்கட்டையுடன் என்று குறிப்பிட்டதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நாம் விவாதிக்கும் போது நம்முடைய அறியாமைக்கு கொள்ளிவைக்கபடுகிறது என்ற கண்ணோட்டத்துடன்தான் அப்படிச் சொன்னேன். ஹி...ஹி...ஹி....!)
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  11. #23
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தனித்திரியில தொடரலாமே...(தனித் திரி தொடங்கும் பட்சத்தில் பொறுப்பாளர்கள் தயவு செய்து இவற்றை அங்கே மாற்றிவிடவும்.நன்றி)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    காந்தியடிகள் தொடர்பான விவாதத்தை பொது விவாதப்பகுதியில் தொடங்கியிருக்கிறேன். இங்கே அவர் தொடர்பான பதிவுகளை அங்கே நகர்த்துமாறு பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்..!! இது தொடர்பில் விவாதிக்க நினைப்பவர்களை அங்கே அழைக்கிறேன்.! இங்கே திரி தொடர்பானவை மட்டும் இருக்கட்டும்..!!
    அன்புடன்,
    இதயம்

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •