நான் - உறக்கம்
நீ - கனவு
உன் வரவுக்காகவே
விடிய விடியத்
தூங்குவேன்
*
என்னைத் தொலைக்காமல்
உன்னைத் தேடினேன்
என்பதில் பெருமை எனக்கு
என்னை நான் தேடவே நீ
கிடைத்தாய் என்பதில்
பெருமை உனக்கு
*
என் சொந்தங்களில் நான்தான்
முதல் கவிவாசகன் என்பதில்
சிறியகவலை எனக்கு
இதுவரை யாருமே உன்னை
பார்த்து யார் எழுதியது என்று
விசாரித்ததில்லையே
*
உன் தாயைப்போல்
என் நேரமும்
உன்னைக் கவனிக்க
என்னால்
முடியாமல் போனாலும்
உன்னைக்
காணத நேரங்களில்
தாயாக நான் ஏங்கித்
தவிப்பதுண்டு
*
உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை
என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்
-யாழ்_அகத்தியன்
Bookmarks