ஒவ்வொரு மழைகாலமும்
தூறிப் போகிறது
எதாவது ஒரு ஈரத்தை
மனதிலும்..
விழியிலும்..
மழையால் மூழ்கின வீடுகள்
மழையால் சாய்ந்தன மரங்கள்
மழையால் இறந்தனர் ஜனங்கள்
எனும்,
வழக்கமான சம்பவங்களை
செய்தி தாள்களில்
புரட்டுவதின் ஊடே..
எங்காவது ஒரு திசையில்
யாராவது ஒருவர்
எதிர்ப்பார்த்துதான் இருப்பர்
மற்றொரு மழை காலத்தை..
-ஆதி
Bookmarks