பரிபாஷை என்னும் சங்கேத மொழி்யில் தமிழின் பங்கு
தமிழில் முன்வந்த இறை பெரியோர்கள் தங்கள் இறையியல் அனுபவ இன்பங்களை பின் வரும் சந்ததியினர் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தாங்கள் இயற்றிய நூல்களில் பலவிதமான முறையில் நல்வழிகாட்டி இட்டுச் சென்றுள்ளனர். தங்கள் அனுபவங்கள் மக்களை நல்வழிக்காக்கும் பொருட்டு்விட்டுச் சென்றதில் துன்மார்க்க நெறியோரும், வயிற்றுப்பாட்டுக்கான மக்களைப் பாதை மாற்றும் செயலைச் செய்வோரிமிருந்தும் காக்கும் பொருட்டு கையாண்ட சில உன்னத வழிகளில் பரிபாஷையெனும் சங்கேத மொழியில் பல பொக்கஷங்களை பரிசாக இட்டுச்சென்றுள்ளனர். தமிழ் மொழியின் பல்வேறு சிறப்புக்களில் இந்த வழிமுறையும் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது,
பரி பாஷை என்பது ஒரு கருத்தை மறைமுகமாகத் தெரிவிப்பது. அதுவும் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைக கொண்டே சங்கேத முறையில் பேசிக் கொள்வது அல்லது அறிவிப்பது. இது தமிழ் மொழியில் மட்டும்தான் அதிகம் பயன் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்திய சாஸ்திரத்தில் அதிகமாக கையாளப்பட்டுள்ளது. 'அகத்தியர் குழம்பு' போன்ற நூல் இதற்கு சான்றாகும். மற்றைய மொழிகளில் இவ்வாறு பரிபாஷைகள் வழக்கில் இருக்கிறதா என்பதை தமிழறிஞர்கள் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுவோம். ஒரு மொழியை சிறப்பித்துக் கூற வரும்போது பிற மொழிகளை குறைத்துக கூறுவது நாகரீகமாகாது. என் நோக்கம் அதுவுமல்ல. ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பிற்கு ஏற்றவாறு தன் தன் வளமையைக் கொண்டுள்ளது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,தொடரும்..............(1)
Bookmarks