Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 46

Thread: இதுவும் ஒரு காதல் கதை - நிறைவு

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    இதுவும் ஒரு காதல் கதை - நிறைவு

    (முன் குறிப்பு: ஒருமுறை அலுவலகத்தில் மதிய இடைவேளையின் போது நடந்த அரட்டையின் தாக்கத்தில் எழுத ஆரம்பித்தது இது. தொடரா எழுதி ஏறக்குறைய ஏழெட்டு மாதங்கள் இருக்கும். ஆயினும் மன்றத்தில் இட தைரியம் வரவில்லை. எப்படியோ இது வரை எத்தனையோ கடிகளையும் மொக்கைகளையும் தாங்கிய மன்றம் இதனையும் தாங்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் 3000ம் பதிப்பாய்)

    காலை ஒன்பது மணி. மணி அடிக்கிற சத்தம். கொஞ்ச நேரத்தில வகுப்புகள் தொடங்கப் போகிறது. ஆண்டு விடுமுறைக்குப் பின் இன்னிக்கு தான் பள்ளி திறக்கிறது. புது வகுப்புக்கு போற சந்தோஷத்துல பிள்ளைகள் புது சொக்காய் உடுத்தி வகுப்புத் தேடி ஓடினார்கள்.

    அட..யாரது. யாரோ ஒரு பையன் வேகமாய் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வர்றான்? பையன் வந்த வேகத்தில் மண் சறுக்கியது. காலில் சிராய்ப்பு. கொஞ்சமாய் ரத்தம் வர ஆரம்பித்தது. அந்த பையன் சைக்கிளை நிறுத்திவிட்டு வருவதற்கு முன் அவனைப் பத்தி பாப்போமா?

    அந்த பையன் பேர் ப்ரேம். சின்ன வயதிலிந்து அந்த பள்ளிக்கூடத்துல் தான் படிக்கிறான். அவனுக்கென்று ஒரு பெரிய தோழர் பட்டாளம் உண்டு. எட்டாவது முடித்துவிட்டு இதோ ஒன்பதாம் வகுப்புக்கு போகிறான். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். ஓரளவுக்கு நல்லாவே படிக்கிற பையன். கொஞ்சம் சமர்த்து. பசங்களோட சேர்ந்தா கொஞ்சம் வால். இன்னிக்கு கொஞ்சம் தாமதமா எழுந்திருச்சதால வேகவேகமா வர வேண்டியதா போச்சு.

    சிராய்த்திருந்த முட்டிக்கால்ல எச்சில் தொட்டு தேய்த்தவாறே பள்ளிக்கட்டிடத்தை பார்த்து ஓடினான். ரொம்ப நாள் கழிச்சு தோழர்களை பார்க்கிற சந்தோஷம். மனசு பட்டாம்பூச்சியா பறந்திட்டு இருந்தது. பள்ளி வராண்டாவில் வேகமா ஓடினவன் அறிவிப்பு பலகையில் தன் வகுப்பு எதுன்னு தேடினான். அங்கிருந்த ஏகப்பட்ட தாள்ல ஒரு தாளில் 9-A என்றிருந்தது. வரிசையா பார்த்துக்கொண்டே வந்தான். அதோ அவன் பேர்.

    கொஞ்சம் ஆர்வமிகுதியால தன் ஆள்காட்டிவிரலால ஒவ்வொரு பேரா பார்த்துக்கிட்டே வந்தான். எல்லாம் தெரிஞ்ச பேர் தான். ப்ரேமோட விரல் ஒரு பேர் மேல் நின்றது. ஷில்பா. கேள்வி படாத பெயர். புதுசா வந்த பொண்ணா இருக்கும். இது வரைக்கும் இங்க பார்த்ததில்லை. யாராயிருக்கும்? மனசுக்குள்ள ஆயிரம் சிந்தனைகளோடு தன் வகுப்பு நோக்கி நடந்தான் ப்ரேம்.

    டேய்என்னடா யோசிச்சுகிட்டே வர்றே? யார பத்திடா..?!

    ப்ரேமோட நண்பன் கிஷோர். இவனும் அவன் வகுப்பு தான். எல்லோரும் ஒன்னா சேர்ந்து கொட்டமடிக்கற பசங்க. இன்னிக்கு அவனும் லேட். ஆனா கொஞ்சம் கூட பயமே இல்லாம ஆடிப் பாடிகிட்டு வந்தான்.

    இல்லடா மச்சான்..கொஞ்சம் தூங்கிட்டேன். எந்திருச்சு பாத்தா எட்டு மணியாயிடுச்சு. அம்மாவும் அப்பாவும் வேற கல்யாணத்துக்கு போயிருக்காங்களா..அதான் யாரும் எழுப்பல. ஆமா நீ ஏன்டா லேட்டு?

    (இப்பலாம் பயலுவ ஒன்னாப்புலேயே மாமன், மச்சான் னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாய்ங்க)

    அத ஏண்டா கேக்குற. நானும் ஒன்ன மாதிரி தான். தூங்கிட்டேன். ஏன்டா இன்னும் எந்திருக்கலேன்னு அம்மா தண்ணி ஊத்திட்டாங்க. அரக்கபரக்க குளிச்சு முடிச்சு வந்து பாத்தா சைக்கிள் பஞ்சர். கடையில போய் பஞ்சர் ஒட்டிகிட்டு வர்றதுக்கு இம்புட்டு நேரமாச்சு. சரி வா..சீக்கிரம் போவோம். யாரு டீச்சர்ன்னே தெரியல. மொத நாளு அதுவுமா திட்டு வாங்க வேணாம்

    ரெண்டு பேரும் ஓடிப்போய் மாடியில இருந்த அவங்க வகுப்பறை வாசலில் நின்றார்கள். அட! நம்ம மல்லிகா டீச்சர். மல்லிகா டீச்சர் தமிழ் பாடம் சொல்லிக் கொடுப்பவர். மத்த பாடத்துல எப்படி இருந்தாலும் ப்ரேம் அண்ட் கோ தமிழ்ல அடிச்சு புடிச்சு நல்ல மதிப்பெண் வாங்கிடுவாங்க. தமிழ்ல மட்டும் மத்த பிள்ளைங்களுக்கெல்லாம் நேர் எதிர். அதனால ப்ரேம் கிஷோர் ரெண்டு பேரும் மல்லிகா டீச்சருக்கு செல்லம். இந்த வருஷம் அவங்க தான் இவங்க வகுப்பாசிரியர்ங்கறது இவங்களுக்கு இன்ப அதிர்ச்சியா இருந்தது.

    சத்தம் போட்டுகிட்டு இருந்த பசங்கள எல்லாம் அதட்டிட்டு டீச்சர் வாசல் பக்கம் திரும்புனாங்க.

    வாங்கப்பா..வாங்க. மொத நாளு அதுவும் இவ்ளோ நேரங்கழிச்சா வர்றது? சரி சரி. உங்கள சும்மா உள்ளாற வுடப்படாது. தாமதமா வந்த காரணத்த சொல்லிட்டு உள்ள போய் உக்காருங்க?

    கிஷோர் ஆரம்பித்தான்.
    டீச்சர்..அது வந்துஇன்னிக்கு நான் ஸ்கூலுக்கு கிளம்பும் போது சைக்கிள் டயர் பஞ்சராயிடுச்சு. அத ஒட்டிகிட்டு வந்தேனா.

    ப்ரேம் மனம் இதிலெல்லாம் போகவில்லை. அந்த வகுப்பறையில் நீண்ட பெஞ்சுகள் இருந்தன. ஒன்னொன்னுலேயும் ஐந்து பேர் உட்காரலாம். முதல் ரெண்டு பெஞ்சுலேயும் பொண்ணுங்க உட்காருவாங்க. பசங்க கடைசி பெஞ்சுலேர்ந்து உட்காருவாங்க. என்னிக்கு உருப்பட்டிருக்கானுங்க அவங்க..?

    ஒவ்வொருத்தரா பார்த்துக்கிட்டே வந்தவன் ரெண்டாவது பெஞ்சில ஓரமா உட்கார்ந்திட்டிருந்த பொண்ணை பார்த்தான். ஓ..இது தான் புதுசா வந்தவளோ..? பார்த்திட்டு இருக்கும் போதே அவன் கண் இருட்ட ஆரம்பித்தது. தலை சுத்தற மாதிரி இருந்தது.

    டீச்சரையே கவனிச்சிட்டு இருந்த ஷில்பா சட்டென துணுக்குற்றாள்.
    யாரோ என்னை பார்க்கறாங்க

    சுற்றும் முற்றும் பார்த்தவ கதவோரத்தில நின்ற ரெண்டு பேரையும் பார்த்தாள். அட! என்ன இது ஒருத்தன் தள்ளாடற மாதிரி இருக்கே?. அப்போ தான் அவன் காலில் ரத்தம் வழிவதை பார்த்தாள்.

    டீச்சர்..டீச்சர்..அங்க பாருங்க. கிஷோரின் மேலிருந்த கவனம் சிதறி எல்லாரும் இவளைப் பார்த்தார்கள்.

    ப்ரேமை நோக்கி கைகாட்டியவாறே,

    டீச்சர்..அங்க பாருங்க. அவன் காலில ரத்தம் வழியுது. மயக்கமாகி கொண்டிருந்த ப்ரேமுக்கும் அப்போது தான் உறைத்தது. சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டதும் ரத்தம் வழிவதும் கூட மறந்து புது பெண்ணை பற்றி யோசித்துக்கொண்டிருந்திருக்கிறான்.

    மல்லிகா டீச்சர் சட்டென போய் அவனைப் பிடித்தார். கைத்தாங்கலாய் அவனைப் பிடித்தவாறே பெஞ்சில் படுக்க வைத்தார்.

    டேய் கிஷோர். உடனே ஓடிப்போய் ஆயாகிட்ட நான் கேட்டேன்னு ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வாங்கிட்டு வா..

    கிஷோர் சிட்டாய் பறந்தான்.

    மாணவர் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீர் எடுத்து அவன் மேல் தெளித்தார். இத்தனை களேபாரத்தையும் டீச்சர் கூடவே இருந்து கண்ணில் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஷில்பா. ப்ரேம் தண்ணீர் குடித்ததும் ஓரளவு தெளிவானான். கண்ணை விழித்து விழித்துப் பார்க்கையில் முதலில் தெரிந்தது அவள் உருவம் தான்.
    அட..இவள் ஏன் கண் கலங்குறா? மனதுக்குள் நினைத்தவாறே எழுந்து உட்கார முயன்றான்.

    இதற்கிடையில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸோடு கிஷோர் வர அவன் காலுக்கு மருந்திட்டார் டீச்சர். பேண்ட் எய்ட் போட்டவுடன் ரத்தம் நின்றது. மற்ற மாணவர்கள் தத்தம் நண்பர்களோடு அரட்டை அடிக்க போய் விட்டனர்.

    டீச்சர்! அவன் ஏதாச்சும் சாப்பிட்டானான்னு கேளுங்க. பார்க்க ரொம்ப டயர்டா தெரியறான் ஷில்பா தான்.

    ப்ரேம், என்னாச்சு. காலையில ஒழுங்கா சாப்டியா?

    அப்போ தான் அப்பா அம்மா ஊரிலில்லாததால சீக்கிரம் எந்திருக்க மறந்து அவசர அவசரமாய் கிளம்பி வந்ததை நினைத்துப் பார்த்தான். இதற்கிடையில் காலையில் சாப்பிட மறந்துவிட்டான். அதுவும் அடிபட்டதும் சேர்ந்து மயக்கம் வந்துவிட்டது.

    இல்லையென்று தலையாட்டினான். உடனே தன் கூடையிலிருந்த டிபன் பாக்ஸை எடுத்து நீட்டினாள் ஷில்பா. அதை வாங்கி டிபன் பாக்ஸைத் திறந்தான் ப்ரேம். பார்த்தவுடன் அவன் கண்கள் விரிந்தது.

    -மிச்சசொச்சம் தொடரும்
    Last edited by மதி; 13-01-2008 at 11:43 AM.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா மதி....அட்டகாசமான ஆரம்ப நாட்களின் காதலை அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டீர்களா...சூப்பரா கொண்டுபோறீங்க.
    தொடக்கமே அசத்தல்.எடுத்தவுடனே சிம்பதி கிரியேட் பண்ணிட்டீங்க....இனிமே என்ன தூள்தான்.நடத்துங்க நடத்துங்க....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஷில்பா பேரைப் பார்த்தவுடன் மனசு பாடியது ஒரு ""ஜில்" பா.

    டச்சிங் டச்சிங்காய் ஒரு கதை எழுதறீங்க..


    கேள்வி படாத பெயர்.
    புதுசா வந்த பொண்ணா இருக்கும்.
    இது வரைக்கும் இங்க பார்த்ததில்லை.
    யாராயிருக்கும்?

    ஓ..இது தான் புதுசா வந்தவளோ..?

    யாரோ என்னை பார்க்கறாங்க

    டீச்சர்..அங்க பாருங்க. அவன் காலில ரத்தம் வழியுது.

    அட..இவள் ஏன் கண் கலங்குறா?


    டீச்சர்! அவன் ஏதாச்சும் சாப்பிட்டானான்னு கேளுங்க. பார்க்க ரொம்ப டயர்டா தெரியறான்


    கடைசி வசனம் கொஞ்சம் ஒட்டலியே மதி.. நேச்சுரல் ஃப்ளோ மிஸ்ஸிங். வசனம் பெரிசா இருக்கு. இரண்டு வாக்கியங்கள்.. அப்புறம் அந்த டச்சிங் டச்சிங் பாணி மிஸ்ஸிங்.. ம்ம்..

    அதுக்கப்புறம் டீச்சர் சொன்னது ஓகே


    ப்ரேம், என்னாச்சு. காலையில ஒழுங்கா சாப்டியா?


    எழுதுங்க எழுதுங்க...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    சீரியஸா....
    எனக்கும் அதே தோணுச்சு... அதான் இதுவரை பதிக்கல..வெட்டியா என் கணினியில இருக்கேன்னு தான் என்ன இருக்குன்னு பார்க்காம கூட பதிச்சேன்....

    இதுல ஷில்பா கொஞ்சம் மெச்சூர்டான பெண்..அப்படி வச்சுக்க வேண்டியது தான்... ஹிஹி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எழுதும்போது அனுபவித்து எழுதுவர் சிலர். அனுபவித்ததை எழுதுவர் சிலர். இரண்டுமே வாசகனை கொள்ளைகொள்ளும். அதிலும் பள்ளிப்பருவம் என்றால்... தொடருங்கள் மதி. நல்லா இருக்கு.. வாழ்த்துகள்.
    Last edited by அமரன்; 08-01-2008 at 09:43 AM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    மதி...மீண்டும் பள்ளிக்குப் போகலாம்..நம்மை நாம் அங்கே காணலாம்...அப்படின்னு பாட்டுப் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல...அடுத்தது பெஞ்சில ஆட்டின் வரைஞ்சு ஷில்பான்னு எழுதப் போறீங்க அதான...அப்புறம் நீங்க ஹோம் வொர்க் பண்ணாம எழுந்து நிக்கும் போது ஷில்பா நோட்டுத் தரப் போறா...தினப்படி உங்களுக்கும் சேர்த்து தயிர் சாதம்,மாவடு கொண்டு வரப் போறா...அப்புறம்....என்ன...அடடா மதி உங்க கதைய நான் எழுதிருவேன் போல.....வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    எழுதும்போது அனுபவித்து எழுதுவர் சிலர். அனுபவித்ததை எழுதுவர் சிலர். இரண்டுமே வாசகனை கொள்ளைகொள்ளும். அதிலும் பள்ளிப்பருவம் என்றால்... தொடருங்கள் மதி. நல்லா இருக்கு.. வாழ்த்துகள்.
    என்ன பத்த வைக்கிறீங்க அமர்..
    சொன்னாக் கேளுங்க..

    இதில் கொஞ்சம் கூட அனுபவம் இருக்கிற மாதிரி தெரியலை(?).

    இல்லையா மதி.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    என்ன பத்த வைக்கிறீங்க அமர்..
    சொன்னாக் கேளுங்க..

    இதில் கொஞ்சம் கூட அனுபவம் இருக்கிற மாதிரி தெரியலை(?).

    இல்லையா மதி.
    அப்படியெல்லாம் இல்லீங்க..நிறைய அனுபவம் இருக்கு...
    என் நண்பனின் அனுபவம்..எங்கியாவது என் அனுபவம்..
    அதான் ஏற்கனவே சொல்லியாச்சே.. இது பள்ளியிலிருந்தே காதலித்து மணம் புரிந்த என் நண்பனின் கதையாக சொல்ல வந்து..எக்குத்தப்பா எகிறிய கதையாக்கும்... எல்லாம் லஞ்ச் டைம் டிஸ்கஷனால வந்தது... உசுப்பேத்தி ரணகளமாக்கிட்டாங்க...

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by யவனிகா View Post
    மதி...மீண்டும் பள்ளிக்குப் போகலாம்..நம்மை நாம் அங்கே காணலாம்...அப்படின்னு பாட்டுப் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல...அடுத்தது பெஞ்சில ஆட்டின் வரைஞ்சு ஷில்பான்னு எழுதப் போறீங்க அதான...அப்புறம் நீங்க ஹோம் வொர்க் பண்ணாம எழுந்து நிக்கும் போது ஷில்பா நோட்டுத் தரப் போறா...தினப்படி உங்களுக்கும் சேர்த்து தயிர் சாதம்,மாவடு கொண்டு வரப் போறா...அப்புறம்....என்ன...அடடா மதி உங்க கதைய நான் எழுதிருவேன் போல.....வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
    சபாஷ்..இதெல்லாம் எனக்கு தோணாம போயிடுச்சே...
    என்னன்னாலும் அக்கான்னா அக்கா தான்.. உங்க அளவுக்கு அனுபவமெல்லாம் இல்லீங்க..

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    எழுதும்போது அனுபவித்து எழுதுவர் சிலர். அனுபவித்ததை எழுதுவர் சிலர். இரண்டுமே வாசகனை கொள்ளைகொள்ளும். அதிலும் பள்ளிப்பருவம் என்றால்... தொடருங்கள் மதி. நல்லா இருக்கு.. வாழ்த்துகள்.
    இது எந்தவிதத்துல சேரும்னே தெரியல...
    ஆனா நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவனுங்க..

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    இதுவும் ஒரு காதல் கதை - II

    பசி மயக்கத்தில் இருந்தமையாலும் ரத்தம் வெளியேறிய களைப்பினாலும் இருந்த ப்ரேமிற்கு பூரியைக் கண்டதும் சாப்பிடும் ஆவல் அதிகமாயிற்று. ஷில்பாவை நன்றிப்பெருக்கோடு பார்த்துக் கொண்டே சாப்பிடலானான். ப்ரேம் பலகாரம் விரும்பி. அவனுக்குப் பிடித்தது பூரி, சமோசா, பஜ்ஜி, போண்டா. இதுல காலை சிற்றுண்டியா பூரி கொடுத்தா கேட்கவா வேணும்?

    நிற்க.
    இதுவரைக்கும் ப்ரேம் பத்தி மட்டுமே பார்த்திட்டு இருந்தோம். இனி ஷில்பாவைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். ஷில்பா பேருக்கு ஏற்ற மாதிரியே ஜில்லுன்னு இருப்பா. யாரும் தப்பா நினைக்க வேண்டாம் அவ்வளவு கூலான பொண்ணு. நீங்க நினைக்கற எல்லா நற்குணங்களும் பொருந்திய இலட்சுமி கடாச்சம் கொண்ட பெண். இதுக்கு மேல எப்படிங்க வர்ணிக்கறது? ஆக மொத்தம் எல்லோருக்கும் பிடிக்கிற பெண். எல்லாத்துக்கும் மேல இரக்ககுணம் வேறு. அதைத் தான் முன்னாடியே படிச்சிருப்பீங்க.

    அன்னிக்கு தான் முதன்முதலாய் பள்ளியில் சேர்ந்திருந்தாள். இதுக்கு முன்னாடி வேறொரு ஊரில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் அப்பாவிற்கு அரசாங்க உத்தியோகம். உங்களுக்குத் தான் தெரியுமே? ஒவ்வொரு மூணு வருஷத்து ஒரு தடவை ஊரு மாத்திகிட்டே இருப்பாங்க. அப்படி ஒவ்வொரு ஊரா போய்ட்டு இதோ இந்த பள்ளியில் வந்து சேர்ந்திருக்கிறாள். எப்பவுமே முதல் ரேங்க் தான் எடுப்பாள். இந்த பள்ளியில் எப்படியோ என கொஞ்சம் பயந்திருந்தாள்.

    அப்போ தான் ப்ரேமை பார்த்து பதறினாள். ப்ரேமிடம் தன் டிபன் பாக்ஸை கொடுத்துவிட்டு டீச்சர் பக்கம் திரும்பும் போது டீச்சர் கேட்டார்,
    நீ தான் இந்த கிளாஸில புதுசா சேர்ந்திருக்கற பொண்ணா? உன் பேரு என்னம்மா?

    ஷில்பா, டீச்சர்!

    நல்லது. இன்னிக்கு காலைல உன்ன பத்தி தான் டீச்சர்ஸ் மத்தியில பேச்சு. பழைய ஸ்கூல்ல நீ தான் பர்ஸ்ட் ரேங்க் வாங்குவியாமே? உன் மார்க் ஷீட்டை பார்த்துட்டு பிரின்ஸிபல் கூட பாராட்டினாங்களாமே? குட்.

    தேங்க்ஸ் டீச்சர்.
    பூரியை சாப்பிடும் மும்முரத்தில் இருந்தமையால் ப்ரேம் இதையெல்லாம் கவனிக்கவில்லை.

    ஒருவழியா பாடம் துவங்கியது. ப்ரேமின் மனம் இதிலெல்லாம் செல்லவில்லை. தனக்கு முன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஷில்பாவைப் பற்றியே யோசிக்கலானான்.

    ச்சே..! எவ்ளோ நல்ல பொண்ணு? நமக்கு ஒன்னுனோட எப்படி கண் கலங்கி போயிட்டா

    இளவயதில் பையன்களிடம் வரும் அதே தடுமாற்றம் ப்ரேமுக்கும் வந்தது. தன்னைப் பார்த்து ஒரு பெண் சிநேகமாய் சிரித்தாலோ ஏதாவதென்றால் பதறினாலோ தன் வலியையும் மீறி அவன் மனதினுள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும். அந்த சமயத்தில் அவனை என்ன தான் நீங்க திட்டினாலும் கோபப்படவே மாட்டான். ப்ரேமும் அதற்கு விதிவிலக்கல்ல.

    இந்தச் சம்பவம் நடந்து ஆறு வாரங்களாயிருக்கும். பள்ளியில் வழக்கம் போல் கூத்துக்களும் ஆசிரியரிடம் அடிவாங்குதலும் நடந்தேறின. ப்ரேம் மட்டும் ஏதோ மந்திரிச்சு விட்டவன் மாதிரியே திரியலானான்.

    ஒருநாள் ஆர்வம் தாங்காமல் கிஷோரிடம்,
    டேய்..நம்ம கிளாஸ் ஷில்பா எங்கிருந்துடா வர்றா? இப்பல்லாம் கிளாஸ்ல டீச்சர் கேக்குற எல்லா கேள்விக்கும் அவ தான் பதில் சொல்றா? ரொம்ப அறிவாளியா இருப்பாளோ? இதுக்கு முன்னாடி எங்க படிச்சா?..

    டேய் நிறுத்து..நிறுத்து..! என்னடா இப்படி மூச்சு கூட வாங்காம வேகமா பேசற..? ஆமா..திடீர்னு என்ன உனக்கு ஷில்பா மேல அக்கறை. நானும் ஸ்கூல் ஆரம்பிச்சதிலேர்ந்து பாக்குறேன்.. நீ சரியில்ல. ஏதோ வீட்டில தெனமும் படிக்க ஆரம்பிச்சுட்டேனு கேள்விப்பட்டேன். இதெல்லாம் நல்லதுக்கில்லை ராசா..
    யேய்..நீ வேற எதையாவது கதையை கிளப்பி விட்டுட்டு. சும்மா தான் கேட்டேன். சரி..சரி.. நான் இத கேட்டேன்னு யார்கிட்டேயும் சொல்லிடாதே. ஓட்டப் போறானுங்க

    சரியா அடுத்த நாளே இந்த விஷயம் அவன் கூட்டாளிங்களுக்கு தெரிந்துவிட்டது. எல்லோரும் ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ப்ரேமுக்கு ஒரே கூச்சமா போய்விட்டது. அதிலிருந்து ஷில்பாவோட கொஞ்ச நஞ்சம் பேசிகிட்டு இருந்ததையும் நிறுத்தி விட்டான்.
    இதைப் பற்றியெல்லாம் ஷில்பா கவலைப்படவில்லை. தான் உண்டு தன் படிப்புண்டு என்றிருந்தாள்.

    இதற்கிடையே அப்பப்போ நடந்த டெஸ்டில் எல்லாம் முதல் மார்க் வாங்கி ஷில்பா பிரபலமாயிட்டாள். ப்ரேமும் ஏதோ ஒரு உந்துதலில் தீவிரமாய் படிக்க ஆரம்பித்தான்.

    என்னடா கதை ஷில்பா, ப்ரேம் பத்தி மட்டும் நகருதேன்னு நினைக்காதீங்க. இவங்க ரெண்டு பேரும் தானே காதலிக்கப் போறாங்க. எவ்ளோ தாங்க கஷ்டப்படறது கதையை நகர்த்த..ம்..ஹூம்..நகருவேனாங்குது. கொஞ்சம் பொறுத்துக்குங்க.

    ஷில்பா இப்பல்லாம் சீக்கிரமே பள்ளிக்கு வர ஆரம்பித்துவிட்டாள். முதல் நாள் நடந்த சம்பவம் அவளை எதுவும் பாதிக்கவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக நடந்த விஷயங்கள் அவளாலும் நம்ப முடியாதவை.

    ஒரு நாள் இப்படி தான் ஸ்கூலில் படம் வரைதல் போட்டி வைத்திருந்தாங்க. பழைய பள்ளிகளிலெல்லாம் ஷில்பா ஒரு போட்டியையும் விட்டதில்லை. எல்லாதிலேயும் பரிசு வாங்கிவிடுவாள். இந்த பள்ளியில் இது தான் முதல் போட்டி. அதனால் முத ஆளாய் பேர் கொடுத்திருந்தாள். போட்டி நாளும் வந்தது.

    கிட்டத்தட்ட இருவது இருவத்தியைந்து பேர் கலந்து கொண்டனர். ப்ரேமும் ஒருவன். போட்டிக்கு கொடுக்கப் பட்ட தலைப்பு கருணை அல்லது அன்பு. பென்சிலும் ஸ்கெட்ச் பேனாவும் எடுத்து மாணவர்கள் வரைய முற்பட்டனர். ஷில்பா கருணை என்ற தலைப்பில் மழையின் நனையும் நாய்குட்டியை ஒரு சிறுமி தூக்குவது போல வரைந்தாள். சற்றே சிரமமான படம். ஆயினும் தன் கற்பனையெல்லாம் செலுத்தி அழகாய் சிறுமியை வரைந்திருந்தாள். தனக்கே முதல் பரிசு கிடைக்கும் என நம்பினாள்.

    போட்டி முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டது. ஷில்பா எதிர்பார்த்த விதமாக அவளுக்கே முதல் பரிசு கிடைத்தது. ஆனால் அவள் எதிர்பாராத ஒன்றும் நடந்தது. சிறப்புப் பரிசு ஒன்று உண்டென்றும், போட்டி நடுவர்களாக வந்திருந்த ரோட்டரி சங்கத்தினர் ஒரு படத்தைப் பார்த்து அசந்துவிட்டனர் என்றும் அந்த படத்தை வரைந்தவரை சிங்கப்பூரில் பள்ளி மாணவரிடையே நடக்கும் போட்டிக்கு அனுப்பப்போவதாகவும் தெரிவித்தனர். பின் சிறப்பு பரிசுக்காக ப்ரேம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.

    அவன் வரந்திருந்த தலைப்பு கருணை அல்லது அன்பு. ஒரு சிறிய மாணவன் முதுகில் புத்தக மூட்டையும் ஒரு வயதான தாத்தாவுக்கு சாலையை கடக்க உதவுவதாக வரைந்திருந்தான். படம் நல்லாயிருந்ததாலும் அதில் அவன் கொடுத்திருந்த நுணுக்கங்கள் எல்லோரையும் அசந்திருந்தது. அவள் மனதினில் ஒருவித பிரமிப்பு வந்திருந்தது.

    ஒருநாள் பக்கத்து சீட்டு கவிதாவிடம் ப்ரேமைப் பத்தி விசாரிக்க போய் அவள் இருவரையும் இணைத்து ஓட்ட ஆரம்பித்துவிட்டாள். இதனால் ஷில்பாவும் ப்ரேமிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள்.

    இருவரது நட்பு வட்டாரமும் ப்ரேமை பத்தியும் ஷில்பாவை பத்தியும் அரசல் புரசலா ஓட்டிட்டு இருந்தாங்க. முன்னெல்லாம் எதையும் கண்டுக் கொள்ளாத ஷில்பா இப்ப நமுட்டு சிரிப்பு சிரிக்க ஆரம்பித்து விட்டாள். ப்ரேம் உற்சாக வெள்ளத்தில் மிதந்தான். இதற்குள் ஷில்பா அந்த வகுப்பின் கனவுக்கன்னியானாள். பல மாணவரும் அவள் கவனத்தத ஈர்க்க போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

    இப்படித் தான் ஒருநாள் மல்லிகா டீச்சர் டெஸ்ட் வைத்திருந்தார்கள். கொஞ்சம் சுலபமான டெஸ்ட் தான். ஷில்பா முன்னதாகவே முடித்து விட்டாள். டீச்சர் ஷில்பாவையே டெஸ்ட் பேப்பரை எல்லோரிடமும் வாங்க சொன்னார். டெஸ்ட் முடித்த ஒவ்வொருவரும் ஷில்பாவிடம் தத்தம் பேப்பர்களை கொடுக்க ஆரம்பித்தனர். ப்ரேமும் எழுதி முடித்து தன் பேப்பரை கொடுத்தான்.

    எல்லா பையன்களிடமும் ஒருவித பரபரப்பு. ஷில்பா யாருடைய பேப்பரை முதலில் வைத்திருக்கிறாள் என்று. தன் பேப்பராய் இருக்கக்கூடாதா என தனக்குப் பிடித்த கடவுளை வேண்ட ஆரம்பிச்சுட்டாங்க.

    ஷில்பா பேப்பரை டீச்சரிடம் கொடுத்தவுடன் டீச்சர் அதை வாங்கி மேசை மேல் வைத்தார். பசங்க கண்ணு எல்லாம் அது மேலேயே இருந்தது. இதற்கிடையே ரொம்பவும் சுட்டியான கணேஷ் டீச்சரிடம் போய்,
    டீச்சர். பாத்ரூம் வருது?

    போய்த் தொலை..நேரங்கெட்ட நேரத்துல
    சந்தடிசாக்கில் மேலிருந்த பேப்பரை பார்த்துவிட்டான். கேலிச்சிரிப்புடன் வெளியே ஓடிவிட்டான். மதிய இடைவெளியில் விஷயம் பரவி விட்டது. முதலிலிருந்தது ப்ரேம் பேப்பராம். இத்தனைக்கும் ப்ரேம் ஆறாவது ஆளாய் குடுத்திருந்தான்.

    கேட்க வேண்டுமா? ஒரு குறுகிய வட்டத்திற்கு மட்டும் தெரிந்திருந்தது இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இருவரும் பார்ப்பதையே சுத்தமாய் தவிர்த்து விட்டனர். இதற்கிடையில் ஷில்பாவும் ப்ரேமும் மாறி மாறி முதல் ரேங்க எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதுவும் கேலிகிண்டலை அதிகமாக்கியது.

    ஆண்டுத் தேர்வு நெருங்கியது. எல்லோரும் படிக்க ஆரம்பித்து விட்டனர். ப்ரேம் தன் படிப்போடு சேர்ந்து சிங்கப்பூர் போட்டிக்காக தயார் படுத்த ஆரம்பித்து விட்டான். பரிட்சைகள் நிமிஷமாய் நடந்தன. ஆயிற்று. இன்று தான் கடைசி பரிட்சை.

    என்றும் இல்லாத் திருநாளாய் எல்லோர் முகத்தில் சந்தோஷம். அடுத்து லீவ் தானே. ஆனாலும் அதுவும் பத்து நாளைக்கு தான். பத்தாவது வகுப்பிற்கு உடனே பாடம் ஆரம்பிக்கப் போறாங்க.

    கடைசித் தேர்வு முடிந்து தன் கூட்டணியோடு வந்தான் ப்ரேம். எதிரில் தோழியரோடு ஷில்பா. ரொம்ப நாள் கழித்து ஷில்பாவை கண்ணுக்கு கண் நோக்கினான். பரஸ்பரம் பரிமாற்றங்கள். அப்போது இருவரும் அறிந்திருக்கவில்லை. இதுவே அப்பள்ளியில் அவர்களின் கடைசி சந்திப்பென்று.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    3000வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    இத்தனை அருமையான கதாசிரியர் இவ்வளவு நாட்கள் எங்கு ஒளிந்துக்கொண்டு இருந்தார்.

    கதை அருமையாக செல்கிறது...

    பள்ளிக்கூட நாட்களில் வரும் முதல் காதல் அனுபவம் பற்றிய கதை அருமை..
    Last edited by அறிஞர்; 08-01-2008 at 06:45 PM.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •