இப்படி எல்லாம் கத எழுதி எங்க தூக்கத்தயும் கெடுக்குறீங்களேயா.........
மோட்டுவளையப் பாத்துகிட்டே.... தூங்காம யோசிப்பீங்களோ.........
இப்படி எல்லாம் கத எழுதி எங்க தூக்கத்தயும் கெடுக்குறீங்களேயா.........
மோட்டுவளையப் பாத்துகிட்டே.... தூங்காம யோசிப்பீங்களோ.........
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
கதை ரொம்ப இயல்பா நகருது மதி.ரொம்ப சரியாஅந்த வயதுக்கே உரிய எண்ணங்களை அழகா வெளிப்படுத்துறீங்க.எல்லோருக்குள்ளும் ஒரு பிரேமும்,ஒரு ஷில்பாவும் இருக்கறதுனால கதையை ரொம்ப ரசிக்க முடியுது.ம்...அடுத்தபாகத்துக்கு ஆர்வத்தை தூண்டிட்டீங்க....தொடருங்க.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஷில்பா... ப்ரேம் இரண்டுமே பிடித்தமான பெயர்கள். பெயர் தேர்வுக்கு ஒரு முதல் பாராட்டு.
பள்ளிக்கூட கால சைட்டடிப்புகளை நினைவுபடுத்துகிறது.(எனக்கு மட்டும் இல்லீங்களோ..!! ஏன்னா... ஏன்னா.. நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்ல பொண்ணுங்கோ....................!!) பல சம்பவங்கள் தத்துரூபமாக சொல்லியிருப்பது சிறப்பு. அதிலும் டெஸ்ட் பேப்பர் கலக்ட் செய்வது...!! (ஆஹா... நான் உண்மையை உளறிடுவேன் போல் இருக்கே...!!)
நீங்க சொன்ன பள்ளி அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா??உன் மார்க் ஷீட்டை பார்த்துட்டு பிரின்ஸிபல் கூட பாராட்டினாங்களாமே?
அரசுப் பள்ளியில் பிரின்சிபல் இருப்பதாய் எனக்குத் தெரியாதே..!
ஹெட் மாஸ்டர் தான் இருப்பார்...!!
**************************************************************************************************
ஒரே மூச்சில் இரு பாகத்தையும் படிச்சிட்டேன்...!
ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான எழுத்து நடை..!
பள்ளிக்கூடத்துக்குளேயே மனம் லயிக்கிறது...!
சொந்த அனுபவம் ஏதும் இல்லாட்டியும், நினைவுச் சங்கிலியில் இருக்கிறதா என்று நமக்குளேயே ஒரு டிடெக்டிவ் வேலை நடத்தும் படி இருக்கு...!!
இத்தனை திறமை வைச்சிட்டு, ஏன் 3000 ஆவது பதிவு வரும் வரை காத்திருந்தீர்கள் என்று தான் பெரிய கோபம் மற்றும் சின்ன வருத்தம்...!
அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சாலும், நீங்க சொல்லும்போது சுவாரஸ்யமா இருக்கு...!!
மனமார்ந்த பாராட்டுகள்..!!
அசத்துங்க.....!!
சிங்கப்பூருக்கு சென்று முதல் பரிசினை வாங்கி வந்த ப்ரேமுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முகமெல்லாம் பூரிப்புடன் கோப்பையுடன் வகுப்பிற்கு வந்தவன் கண்ணில் முதலில் பட்டது ஷில்பா உட்கார்ந்திருந்த இடம். அது வெறுமையாய் இருந்தது. ஷில்பாவை காணவில்லை. பதறியது அவன் மனம். எதையும் காட்டிக் கொள்ளாமல் நண்பர்கள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டான்.
என்னவாயிற்று ஷில்பாவிற்கு? பலவாறு மனம் பரிதவித்தது. வெளியில் காட்டிக்கொள்ளாமல் தவித்தான். நடந்ததை தெரிந்து கொள்ள சரியான சந்தர்ப்பம் மதிய உணவு இடைவேளையில் வந்தது.
கிஷோருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மல்லிகா டீச்சர் அழைப்பதாய் கணேஷ் வந்து சொன்னான். மல்லிகா டீச்சர் அவனை தனியே அழைத்து,
ப்ரேம்! உன் பயணமெல்லாம் எப்படி இருந்துச்சு? யார் யாரை பார்த்தே? என்ன நடந்துச்சு?
பயணம் ரொம்ப சூப்பரா இருந்துச்சு டீச்சர். அங்க ஏறக்குறைய 12 நாட்டிலேர்ந்து ஸ்டூடண்ட்ஸ் வந்திருந்தாங்க. மொத்தம் 120 பேர். நம்ம நாட்டிலேர்ந்து 10 பேர் போய் இருந்தோம். தமிழ்நாட்டுலேர்ந்து நான் மட்டும் தான். அங்க இருந்த ஒரு வாரமும் செம ஜாலியா போச்சு. ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க.
ஓ..சூப்பர். அப்ப ஒரு வாரமும் கலக்கலா அனுபவிச்சிருக்கே..? குட்..
ஆமாம். டீச்சர். நல்லபடியா போச்சு. ரெண்டு நாள் ஊர் சுத்தி காமிச்சாங்க. எல்லா இடமும் அவ்வலவு சூப்பரா போச்சு.
ம். சரி உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.
கேளுங்க டீச்சர். என்ன விஷயம்.
உனக்கும் ஷில்பாக்கும் ஏதாச்சும் பிரச்சனையா?
திக்கென்று அதிர்ந்தான் ப்ரேம். டீச்சர் எதுக்கு இத பத்தியெல்லாம் கேக்கறாங்க?
இல்லியே டீச்சர். ஏன் என்ன ஆச்சு?
ஒன்னுமில்லை. சும்மா தான் கேட்டேன். நீ ஊருக்கு போயிருந்த அடுத்த நாள் ஷில்பாவோட அப்பாவும் அம்மாவும் வந்திருந்தாங்க. உன்னைப் பத்தி விசாரிச்சாங்க.
என்னைப் பத்தியா? எதுக்கு டீச்சர்? பதறினான் ப்ரேம்.
உன்னைப் பத்தி ஷில்பாவோட வீட்டுக்கு ஒரு மொட்டை கடுதாசி போயிருக்கு. கையெழுத்தெல்லாம் கிறுக்கலா இருந்திருக்கு. அதுல உன்னையும் ஷில்பாவையும் சேர்த்து எவனோ தப்புதப்பா எழுதியிருக்கான். பதறிப் போய் ஷில்பாவை கேட்டிருக்காங்க. அவ உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு சொல்லிட்டா. அதான் என்கிட்ட வந்து உன்னை பத்தி விசாரிச்சாங்க?
முகம் வெளிறிப் போனவனாக,
என்ன ஆச்சு டீச்சர்?
உன்னைப் பத்தியெல்லாம் சொன்னேன். உனக்கு சிங்கப்பூர் போக சான்ஸ் கிடைச்சத பிடிக்காத எவனோ எழுதியிருக்கான். ஆனாலும் அவ பெற்றோர் இது மாதிரி சம்பவங்களால தன் பொண்ணோட எதிர்காலம் பாதிக்கப்படும்னு டி.சி. வாங்கிட்டு போய்ட்டாங்க. பிரின்ஸிபாலுக்கு கூட மனவருத்தம் தான். நீயும் அவளும் தான் மாவட்ட அளவில மார்க் வாங்குவீங்கன்னு எதிர்பார்த்தாங்க. இப்போ நீ மட்டும் தான்.
அன்னிக்கு அவள பாக்கணுமே, கண்ணெல்லாம் கலங்கி போய் நின்னா. பார்க்கவே பாவமா இருந்துச்சு. நல்ல பொண்ணு அவ. அதான் உனக்கு ஏதாச்சும் தெரியுமான்னு கேட்டேன்.
சுரத்தற்றவனாக,
இல்லை டீச்சர். எனக்கு ஒன்னும் தெரியாது. யார் இப்படியெல்லாம் பண்ணினாங்கன்னு தெரியல. ஏன் பண்ணினாங்கன்னும் புரியல.
சரி. சரி. இத பத்தியெல்லாம் மனச போட்டு குழப்பிக்காம படிப்பில கவனம் செலுத்து. நீ தான் இந்த மாவட்டத்துல முதல் மதிப்பெண் வாங்கணும். என்ன புரியுதா?
சரி.டீச்சர்
மனத்தில் ஆயிரம் சிந்தனைகளோடு அங்கிருந்து நகர்ந்தான். ஓரளவுக்கு நல்லா படிச்சிட்டிருந்த அவனை ரொம்பவே நல்லா படிக்க வைச்ச பெருமை ஷில்பாவுக்கே சேரும். அவளோடு போட்டி போட்டே நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்தான். சிந்தனை வயப்பட்டவாறே இடத்திற்கு போய் அமர்ந்தான்.
அங்கிருந்த கிஷோர்,
என்னடா எதுக்கு கூப்பிட்டாங்க?
ஒன்னுமில்லை. பத்தாவதுல நல்லா படிச்சு நல்ல மார்க் எடுக்கணும்னு சொன்னாங்க
அதுக்கு ஏண்டா உன் மூஞ்சி பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு.
அதெல்லாம் ஒன்னுமில்லையே. நல்லா தான் இருக்கேன்.
சொன்னவனை சந்தேகப் பார்வையோடு பார்த்தான் கிஷோர்.
பத்தாம் வகுப்பு பரபரவென போனது. படிப்பில் கவனம் செலுத்தியதால் ப்ரேம் ஷில்பாவை பற்றி மறந்தே விட்டிருந்தான். மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதே அவன் கொள்கையாயிருந்தது.
தீவிரமாய் படிப்பில் கவனம் செலுத்தி பொதுத் தேர்வினை நன்கு எழுதினான். தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கலானான். எதிர்பார்த்த மாதிரியே தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தான். இனிய அதிர்ச்சியாக மாநில அளவிலும் முதலாவதாய் வந்திருந்தான்.
இப்படியாக வாழ்க்கைச் சக்கரம் வேகமாக சுழல பன்னிரண்டாம் வகுப்பிலும் நன்மதிப்பெண் பெற்று ஐ.ஐ.டியில் சேர விண்ணப்பித்தான். ஒருவழியாக தன் கனவான சென்னை ஐ.ஐ.டியில் இடமும் பிடித்து விட்டான். ஷில்பாவை இவன் சந்திப்பதற்கான தருணமும் வந்தது. இனி
- கொஞ்சம் பொறுத்துக்குங்க
ஸ்பீட் ஆரம்பிச்சிருச்சே...!!
பள்ளியிலிருந்து டைரக்டா... கல்லூரி...!! அதுவும் சென்னை ஐஐடி...........!!
கொடுத்து வைச்ச மகராசா ப்ரேம்..!!
அடுத்து என்ன நாயகி சந்திப்பு..................!!
எப்படி இருக்குன்னு பார்க்க ஆவல்..!!
தொடருங்க மதி..!!
கலக்கலா போகுது....!!
பாராட்டுகள்..!!
Last edited by பூமகள்; 09-01-2008 at 07:33 AM.
சட்டுன்னு டாப் கியர் போட்டு தூக்கிட்டீங்க...
அதுசரி..
அவளில்லாத காலங்கள்
நீண்டவைதான் என்றாலும்
சொல்லும்படி
ஒன்றும் இருப்பதில்லையே
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஷில்பா மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். சத்தியமாய் இது அவள் எதிர்பார்க்காதது. பின் நல்ல பெண்ணாய் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தவளை அந்த கடிதம் உருக்குலைய வைக்காதா என்ன?
மனத்தினுள் ஆயிரம் சிந்தனைகள்.
யார் அவன்? ஏன் இப்படி எழுதியிருக்கான்? எனக்கும் ப்ரேமுக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லியே. பின் ஏன் இப்படி எழுதியிருக்கான்? யப்பா.. அந்தக் கடிதம் வந்ததும் அப்பா பார்த்த பார்வை. என்னிக்குமே அவர் பார்வையில் ஒரு கனிவு, சிரிப்பு இருக்கும். ஆனால் இன்று அவர் பார்த்தது சலனமற்ற பார்வை.
ஷில்பாக்கு அப்பாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுலேர்ந்தே அப்பா அவளை திட்டினதில்லை. அடிச்சதில்லை. வீட்டிற்கு ஒரே பொண்ணு வேற. கேட்க வேண்டுமா? எப்பவுமே படிப்பில் மிக சுட்டி. அதனால வீட்டில் ஒரே கொஞ்சல் தான். அப்பா தான் அவளள கராத்தேக்கும், ஹிந்தி ட்யூசனுக்கும் போக சொன்னது. இதோ ஒன்பதாவதிலேயே ஹிந்தியில் விஷாரத் உத்ராத் வரை முடித்து விட்டாள். கராத்தேலேயும் பிளாக் பெல்ட். சுருக்கமா சகலகலாவல்லி.
இப்போ பள்ளி ஆண்டு விடுமுறை. காலையிலேயே எழுந்து வாசல் பெருக்கி சமையலறையில் அம்மாவிற்கு உதவி கொண்டிருந்தாள். அப்போ தான் அந்த கடிதம் வந்தது. அப்பா தான் முதலில் படித்தார். படித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அவளிடம் தந்தார். வேறேதும் கேட்காமல் சென்று விட்டார். கடிதத்தைவிட அப்பாவின் மௌனம் மேலும் அவளை பாடாய் படுத்தியது.
இரவு அப்பா வந்தார். ஷில்பாவை கூப்பிட்டு,
ஷில்பா, என்னம்மா. அந்த லெட்டர பத்தி என்ன நிணைக்கிற?
அம்மா இடையே குறுக்கிட்டு,
என்னங்க நீங்க, இதையெல்லாம் சின்ன பொண்ணுகிட்ட கேட்டுகிட்டு?
நீ சும்மா இரு. சின்ன பொண்ணில்ல. எது நல்லது கெட்டதுன்னு அவளுக்கும் தெரியும். நீ சொல்லும்மா
அப்பா, ப்ரேம் பத்தி தான் சொல்லிருக்கேனே. அவன் என்கூட படிக்கிறான். என் ஃப்ரெண்ட். அதத் தவிர வேறேதும் இல்ல. வேற யாரோ வேணும்னே வம்பிழுக்கிறாங்க.
சரிம்மா, இப்படியே விட்டா பிரச்சனைகள் அதிகமாயிடும். இப்போ நீ பத்தாவது போற. இங்க தான் படிக்கணும்னு விரும்பறியா?
இது அவள் எதிர்பாராதது. இதுவரை படித்த பள்ளியிலேயே இந்த பள்ளியைத் தான் அவள் மிகவும் நேசித்திருந்தாள். அப்பா ஒரு குண்டைத் தூக்கி போடறாரே!
ஏன்ப்பா, எதுக்கு கேட்கறீங்க?
இல்லம்மா, இது உனக்கு பத்தாவது. பொதுத்தேர்வு. இந்த சமயத்துல இத மாதிரி விஷயங்கள் எல்லாம் உன் கவனத்தை சிதறடிச்சுடுமோன்னு பயமா இருக்கு.
இல்லப்பா, அப்படி ஏதும் ஆகாது
கொஞ்சம் யோசிச்சு பாரும்மா. உன்ன நான் கட்டாயப்படுத்தல. எவன் இத அனுப்பிச்சானே தெரியல. எப்படியும் உன்கூட படிக்கிறவனா தான் இருப்பான். இன்னிக்கு இப்படி பண்ணினவன் நாளை இன்னும் அசிங்கமா ஏதாச்சும் பண்ணுவான். அதுக்கு தான் சொன்னேன். இதெல்லாம் உன் கவனத்த சிதற அடிச்சுடக் கூடாது
அப்பா சொல்வதும் உண்மை தான். துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு சொல்வாங்க. இங்க துஷ்டன் யாருன்னே தெரியல. அதனால அப்பா விருப்படியே நடக்கலாம்
சரிப்பா உங்க இஷ்டம்.
இப்ப தாம்மா சந்தோஷம். எங்க இங்கேயே படிப்பேன்னு அடம் பிடிப்பியோனு நினைச்சேன். நீ பத்தாவது உங்க சித்தி வீட்டிலேர்ந்து படிம்மா. நான் சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு அந்த ஊருக்கு வந்துடறேன்
அப்புறம் சம்பவங்கள் எல்லாம் திரித கதியில் நடைந்தேறின. மறுநாள் அப்பா பள்ளிக்கு போனது, டி.சி. வாங்கினது, பின் சித்தி வீட்டிற்கு வந்து படித்தது, எல்லாமே அதிவேகமாய் காலச் சக்கரத்தில் போயின. ப்ரேம் போலவே இவளும் ப்ரேமை மறக்கலானாள்.
எப்படியோ நல்ல மதிப்பெண் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிட்டாள். இனிமே என்னங்க
ஹீரோவும் ஹீரோயினும் சந்திச்சுக்க வேண்டியது தானே..???!
ஐஐடி, அண்ணா பல்கலை கழகம் என பக்கத்து பக்கத்து கேம்பஸ் கொண்டு வந்து விட்டிடிங்க...
இனி காதல் கலாட்டா...
தொடருங்க.. மதி..
பரவாயில்லை.. நல்லா கதைவுடறதையும் படிக்க நிறைய பேர் இருக்காங்க.. எல்லோருக்கும் மிக்க நன்றி..இது எப்படி ஆரம்பித்தது பற்றிய கதையை, இது முடிந்ததும் எழுதறேன். எல்லாம் உங்க விதி..யாரால மாத்த முடியும்..
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. ப்ரேம் கல்லூரியில் சேர்ந்து ஆண்டுகள் மூன்று முடியப்போகிறது. விடுதியில் இருந்த ப்ரேம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். எப்படியாச்சும் இந்த ப்ராஜக்டை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும். இதில் தான் எதிர்காலமே இருக்கிறது.
விஷயம் இது தான். வட இந்தியாவில் உள்ள பிரபல தொழில்நுட்ப நிறுவனமொன்று பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இன்றைய இளைஞர்களின் கனவான ரோபோ தயாரித்தல் போட்டி. இந்திய அளவில் நடைபெறும் போட்டி என்பதாலும் முதல் பரிசாக ரூபாய் ஒரு இலட்சம் என்பதாலும் மாணவரிடையே பெரும் போட்டி நிலவியது. அதற்காகத் தான் ப்ரேம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
மதியம் அவன் அறைக்கு வகுப்புத் தோழன் ரூபேஷ் வந்தான். ரூபேஷ் வடக்கத்திய பையன். நல்ல திறமைசாலி. சென்னை வந்து சேர்ந்திருந்த மூன்று வருடங்களில் தமிழ் நன்றாக பேசக் கற்றிருந்தான். எல்லாம் ப்ரேம் புண்ணியத்தில். இன்னும் ஒரு வருஷம் போனால் தமிழ் இலக்கண பாடம் எடுக்குமளவுக்கு முன்னேறிவிடுவான்.
"என்னடா ப்ரேம், சும்மா உட்கார்ந்துட்டுருக்கே.?"
"இல்லடா..அந்த ரோபோ ப்ராஜக்ட் பத்தி தான். எப்படியாவது நாம அதில ஜெயிச்சாகணும். அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்.."
"ஃப்பூ..இவ்வளவு தானா. அதுக்கு தான் இவ்ளோ கவலையோ. இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. வாடா..எங்கியாவது வெளியே போய் ஊர் சுத்திட்டு வரலாம். இங்கியே இருந்து போர் அடிக்குது."
"எங்க போகலாம்..நீயே சொல்லு."
"புதுசா சிட்டி செண்டர் திறந்திருக்கானாம். வா போய் ஐநாக்ஸ்-ல ஏதாவது படம் பாத்துட்டு வரலாம்."
"சரி..வா." ப்ராஜக்ட் பத்தி மறந்தவனாய் ரூபேஷ் கூட சென்றான்.
சிட்டி செண்டர். எங்க பார்த்தாலும் இளைஞர்களின் கூட்டம். அதிலேயும் ஜோடி ஜோடியாக வருபவர்கள் தான் அதிகம். பராக்கு பார்த்துகிட்டே ப்ரேம் இருக்க ரூபேஷ் டிக்கட் வாங்கிட்டு வந்தான். இந்த இடத்துல ஒன்னு சொல்லியாகணும். ரூபேஷுக்கும் சரி..ப்ரேமுக்கும் சரிகேர்ள் பிரண்ட்ஸ் கிடையாது. இருந்திருந்தா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து படத்துக்கு வந்திருப்பாங்களா..
அது ஒரு பாடாவதி ஆங்கிலப் படம். ஹீரோ எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்துகிட்டு ஸ்பை கேம் மூலமா எல்லோரையும் மிரட்டி பணம் பறிச்சுட்டு இருந்தான். ஏன்டா வந்தோம்னு ஆயிடுச்சு. இண்டெர்வெல்ல ரெண்டு பேரும் பாப்கார்ன் வாங்க நின்னுகிட்டு இருந்தாங்க. அப்போ ஒரு குரல்,
"ஷில்பாஉனக்கு என்ன வேணும், பெப்ஸியா..கோக்கா..?"
சடாரென திரும்பினான் ப்ரேம். ரொம்பவும் பரிச்சயமான பெயர். சிரமப்பட்டு பெயருக்கும் தனக்கும் உண்டான தொடர்பை கண்டான். ஒன்பதாவதில் கூட படித்த பெண். சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையை திருப்பினான். எங்கு பார்த்தாலும் பெண்கள். கூட வழிந்து கொண்டே ஆண்கள். யாரந்த ஷில்பா ஒரு வேளை நமக்குத் தெரிந்த பெண் தானா அது..? மீதி படத்தை பார்க்க தியேட்டருக்குள் சென்றான்.
அடிக்கடி திரையில் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பளிச்சென ஒரு திட்டம் உதித்தது. ரூபேஷை கூப்பிட்டு,
"டேய்..ஒரு விஷயம். சீக்கிரம் வா. நாம ஹாஸ்டலுக்கு போலாம்."
"அதுக்குள்ள என்னடா. இன்னும் படம் முடிய நேரம் இருக்கே.."
"ஆமாமா..இது ஒரு படம்..நீ வாடா. ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன்."
எரிச்சலுடன் ரூபேஷ் ப்ரேமுடன் ஹாஸ்டலுக்கு புறப்பட்டான். இவர்கள் கிளம்பி சென்றதை ஒரு ஜோடி கண்கள் கவனித்துக் கொண்டிருந்தது.
ஹாஸ்டலுக்கு போனவன் நேராக தன் கணிணி இருக்கும் இடத்திற்கு சென்றான். அவனைத் தொடர்ந்து ரூபேஷும் சென்றான்.
"என்னடா ஆச்சு உனக்கு? உன்னால ஒரு படம் கூட நிம்மதியா பார்க்க முடியல
"அத விடுடா. நம்ம ப்ராஜட்க்கு அருமையான ஒரு திட்டம் கிடச்சிருக்கு"
ரூபேஷ் ஆர்வமானான். கணிணியில் கூகிளாண்டவரை சொடுக்கிவிட்டு ப்ரேம் ரூபேஷ் பக்கம் திரும்பினான்.
"சொல்றேன் கேளு. முன்னாடில்லாம் நாம கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது பிளாப்பிகளை அதிகமாக பயன்படுத்தினோம். இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஏகப்பட்ட டிஸ்க் வந்திடுச்சு. பிளாப்பிகளோட பயன்பாடும் கொறஞ்சுடுச்சு. இனி எப்படியும் அஞ்சு வருஷத்துக்குள்ள பிளாப்பிகளே தேவைப்படாது."
உன்னிப்பாய் கவனிக்கத் தொடங்கினான் ரூபேஷ்.
"அப்போபிளாப்பிகளை பயன்படுத்தத் தேவையான பிளாப்பி டிரைவ்கள் எதற்கும் பயன்படாது. அதை வச்சு நாம ஏன் ரோபோ செய்ய முயற்சி பண்ணக்கூடாது."
சுவாரஸ்யம் குறைந்தவனாய் ரூபேஷ், "இது தானா. ஆமா இது சாத்தியமாகும்கற."
"எல்லாம் முடியும். என்ன கொஞ்சம் மாற்றங்கள செய்ய வேண்டிவரும். பார்ப்போம். நெட்ல தேடுவோம். புரொபஸரை பார்ப்போம். நம்மால கண்டிப்பா முடியும்."
ப்ராஜக்ட் வேலைகள் பரபரப்பாக ஆரம்பித்தது. ப்ரேம், ரூபேஷ் முழுமையாக ரோபோ தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அவ்வப்போது தங்கள் புரொபஸரை அணுகி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். ப்ராஜக்ட் பத்தி விண்ணப்பிக்கும் கடைசி நாளன்று ஒரு வழியாக ரோபோவை முடித்து விட்டனர். வெற்றிகரமாக சோதனையும் செய்து விட்டனர்.
போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள் வந்தது. இருவரும் அந்த நிறுவனத்தின் இணையத் தளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவழியாக முடிவுகள் வந்தது. தேர்ந்தெடுக்கப் பட்ட பத்து ப்ராஜக்ட்களில் இவர்களுடையதும் ஒன்று.
மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயினர். இனி அடுத்து அந்த கல்லூரிக்கு சென்று தத்தம் ப்ராஜக்ட்களை டெமோ செய்து காண்பிக்க வேண்டும். கிளம்ப வேண்டிய நாளன்று, புரபொஸர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களை பெற்று புகைவண்டி நிலையம் வந்தனர்.
மாணவர் கன்ஸெஸனில் வாங்கிய மூன்றாம் ஏ.சி. பெட்டியில் ஏறி அமர்ந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். அப்போது ப்ரேம் அறிந்திருக்கவில்லை. இந்தப் பயணம் அவன் வாழ்க்கையை திசை திருப்பப் போகிறதென்று.
- கொஞ்சம் பொறுத்துக்குங்க..
Last edited by மதி; 10-01-2008 at 01:15 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks