நல்லாவே கொட்டுது.. கற்பனை.. பாமகளுக்கு...!
வாழ்த்துக்கள் பூ..!
நல்லாவே கொட்டுது.. கற்பனை.. பாமகளுக்கு...!
வாழ்த்துக்கள் பூ..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
இரவு நேர மழை...
இத்தனை நீர் - அடைமழை...
வித்தியாசமான சிந்தனை... அதைவிட ஆரென் அண்ணாவின் பதில் நச் சென்று இருக்கிறது.....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
பாமகள் வீட்டுப் பரண்தூசும் பண் பாடும்!
பரண்தூசுக்கு... ஹச்.. பாராட்டு தும்மல்!
(குலமகள் ராதை படத்தில் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாட்டுக்கு
நடிகர்திலகம் நனையும் செயற்கை மழை - சீராய் கோடுகளாய் இறங்குவதைக் கண்டபோது --- பெரிய்ய சல்லடையும் வாடகை தீயணைக்கும் வண்டி நீரும் நினைவுக்கு வந்தன - அப்போது..)
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அழகிய கவிதைகள் எழுதி, பின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் (ஆரென், ஷீ-நிசி, ஆதி, அமரன், சுகந்தப்ரீதன், ஆதவா) மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் தும்மலில் அன்பு மட்டுமே அளவின்றி தெறிப்பதை உணர முடிகிறது.
பெரியண்ணாவின் கண்ணில் பட்டு என் கவிதை வீடுபேறு அடைந்துவிட்டது.
மிக்க நன்றிகள் அண்ணலே..!
Last edited by பூமகள்; 16-02-2008 at 06:26 AM.
வானத்து ஒளிப் புள்ளிகளிருந்து
மண்ணுக்கு ஈரக் கோடுகளைத்
தீட்டியது யாரோ?
ஈரக் கதிர்களால்
மண்ணின் இமைகளைச்
சுட்டது யாரோ?
மேக உள்ளங்கையில்
மடக்கிய தன் விரல்களை
நீட்டியதோ வானம்?
வானக் கூரையின்
நட்சத்திர ஓட்டைகளிலிருந்து
ஒழுகும் அளிக்கற்றைகள்!
பூமிக் குழவியின்
வாய்க்குள் விழும்
வானத்தின் தாய்ப்பால்!
வானத்திலிருந்து பூமியை நோக்கி
ஆவேசத்துடன் ஈர ஈட்டிகளை
எறிவது யாரோ?
மண்ணின் புண்களை
ஆற்ற விண் நீட்டும்
அமுத மருந்து!
மண் காதலியின் மெய் தீண்டும்
விண் காதலனின்
நீண்ட விரல்கள்!
தாகத்தோடு மண் நீட்டிய
மர நாவுகளில்
விண் கொட்டிய அமுதம்!
மண்ணின் வரண்ட உறக்கங் கலைத்து
மண்ணைப் பசுமையில் எழுப்பும்
விண்ணின் ஈர மணிகள்!
மண் பசுமையாய்
மொழி பெயர்க்கும்
விண்ணின் ஈரமொழி!
தன் மண் குட்டியை
அன்புடன் நக்கும்
விண் நாயின் ஈர நாவு!
மண்ணின் மரத் தவசிகளுக்கு
விண் தரும்
அமுத வரம்
பசுமைக் கோலம் போட
மண்ணில் விண் வைக்கும்
ஈரப் புள்ளிகள்
மேகச் சூரியன்
தன்னையே அழித்து
மண்ணுக்குத் தரும் ஈரக் கதிர்கள்
மண்மேலே பசுமைக் கோடுகளாய் உயர்ந்தெழ
மண்கீழ் வீரியப் புள்ளிகளாய்ப் புதைந்துபோன
விண்ணின் ஈரக் கோடுகள்
பூமகளே!
உன் பரண் தூசு
தும்மலோ தும்மலென்று
என்னைத் தும்ம வைக்க
ஈரம் இங்கே.
Last edited by நாகரா; 17-02-2008 at 07:47 AM.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
அற்புதம்...!!
அபாரம்..!!
எட்ட முடியாத கற்பனைக் கீற்றுகள்..!!
முட்டி என்னை வீழ்த்திவிட்டது..!!
மூச்சு முட்ட படித்துச் சுவைத்து
பதிலிட தாமதமாகிவிட்டது...
மன்னியுங்கள் நாகராஜன் அண்ணா.
உங்களின் அடுக்குத் தும்மலில்
எமக்கு கிட்டியது சீர்மிகு கவித்தூறல்கள்..!!
இப்படியான தும்மல்கள்
இன்னும் பிறக்கட்டும்..!
மன்றம் செழிக்கட்டும்..!!
அழகிய கவித்துவத்துவ பின்னூட்டத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் 1000 இ-பண அன்பளிப்பும்..!!
பாராட்டுகள் நாகராஜன் அண்ணா.
அழகான ஒரு கவிதை, அதற்கு அற்புதமான நாகராஜனின் பின்னூட்டக் கவிதை - பாராட்டுக்கள் இருவருக்கும்.....!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
என்னவளை
நெஞ்சில் நினைக்கும்
பொழுதெல்லாம்
வானத்தில் பூமழை...
இயற்கை மழை பற்றி பூமகளில் சிந்தனை அருமை...
ஆரென் ஏணியில் ஏறி..நீரை கொட்டியிருப்பார் போல...
காதலியின் எண்ணத்தில்.. பூமழை காணும் நம்பிகோபாலின் சிந்தனையுன் அருமை...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks