Results 1 to 12 of 12

Thread: என் காதல் கடிதம்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    என் காதல் கடிதம்.

    மற்றொரு இரவும் கழிகிறது
    மாற்றங்களின் ஊடே
    எந்த மாற்றமும் இல்லாத
    இன்னொரு நாளாய்..

    இன்னும் கவனிபாரற்று
    உன் இல்ல முகப்பில்
    கழட்டிவிடப் பட்ட
    காலணிகளின் ஊடே
    கிடக்கிறது
    என் இதய அஞ்சல்..

    ..

    ஊரெல்லாம் சுற்றிவிட்டு
    மீள வருகிற எண்ணங்கள்
    உதறிவிட்டுப் போகின்றன
    உன் நினைவுகளை..

    ..

    ஒவ்வொரு நினைவுகளும்
    உன் முகமூடி அணிந்து கொண்டு
    என்னை எதிர்த்துப் பேசுகின்றன..

    ..

    நீ என்னை
    எவ்வளவு காயப்படுத்தினாலும்
    உனக்கு சாதகமாய்தான்
    பேசுகிறது
    என் மனம்
    என்னிடம்..

    ..

    என்னை மட்டும் காதல்
    தன் துட்ட தேவதைகளால்
    ஆசீர்வதித்ததா ?

    ..

    என் காதல்
    நெருப்பு
    நரக குழிகளில் இருந்து
    உயிர் கொண்டதா ?

    ..

    நீ
    என் மகிழ்ச்சியா ?
    கண்ணீரா ?

    ...

    எனக்கு தெரிந்த விதத்தில்
    எல்லாம் பேசிப் பார்த்துவிட்டேன்
    நீ மௌனத்தை மட்டும்
    தான் பேசிபோகிறாய்

    ..

    உன்னையும் மீறி
    நீ
    உதிர்த்துப்போகிற சில வார்த்தைகள்
    வந்து விழுகின்றன
    உளியும் சுத்தியலுமாய்
    என்மீது..

    என் சிற்பியே
    நீயே கூறு
    நான்-
    சிலையா ?
    அம்மிக்கல்லா ?

    -ஆதி

    .
    அன்புடன் ஆதி



  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதி View Post
    எனக்கு தெரிந்த விதத்தில்
    எல்லாம் பேசிப் பார்த்துவிட்டேன்
    நீ மௌனத்தை மட்டும்
    தான் பேசிபோகிறாய்
    முயற்சி அனைத்தும் முடிவின்றி மௌனமாய் போனதோ...?! ஆதியாரே...! சிலையோ அம்மியோ..செதுக்குபவன் சிற்பிதான்..! அதுபோல.. மௌனமோ...வார்த்தையோ.. காதலிப்பவள் காதலிதானே..?! கையில்(காதலில்) சிக்கும் இடத்தை பொருத்துதான் சிலையாவதும் அம்மியாவதும் இல்லையா ஆதியாரே..?! வாழ்த்துக்கள் நண்பரே...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    அது முடியும்போது தொடங்கும்!
    நீ தொடங்கும்போது முடியும்...!!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    முயற்சி அனைத்தும் முடிவின்றி மௌனமாய் போனதோ...?! ஆதியாரே...! சிலையோ அம்மியோ..செதுக்குபவன் சிற்பிதான்..! அதுபோல.. மௌனமோ...வார்த்தையோ.. காதலிப்பவள் காதலிதானே..?! கையில்(காதலில்) சிக்கும் இடத்தை பொருத்துதான் சிலையாவதும் அம்மியாவதும் இல்லையா ஆதியாரே..?! வாழ்த்துக்கள் நண்பரே...!
    உண்மைதான் சுகந்தா கைகளைப் பொருத்தான் இருக்கிறது கல்லும் காதலும் சிற்பமாவதும் அம்மியாவது..

    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சுகந்தா..

    அன்புடன் ஆதி
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    முயற்சி அனைத்தும் முடிவின்றி மௌனமாய் போனதோ...?! ஆதியாரே...! சிலையோ அம்மியோ..செதுக்குபவன் சிற்பிதான்..! அதுபோல.. மௌனமோ...வார்த்தையோ.. காதலிப்பவள் காதலிதானே..?! கையில்(காதலில்) சிக்கும் இடத்தை பொருத்துதான் சிலையாவதும் அம்மியாவதும் இல்லையா ஆதியாரே..?! வாழ்த்துக்கள் நண்பரே...!
    அடடே சுகந்தா,
    இதென்ன மிகவும் முதிர்ச்சியான வரிகள்.
    நீர் சின்ன பிள்ளை என்றுதான் நான் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டிருந்தேன் படித்ததும் அசந்து போனேன். அசத்துரப்பா.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    மற்றொரு இரவும் கழிகிறது
    மாற்றங்களின் ஊடே
    எந்த மாற்றமும் இல்லாத
    இன்னொரு நாளாய்..
    ஒரு நாள் உதிக்கக்கூடும்
    உனக்கென்று தனித்த சூரியன்
    ஆதி என்று பேரைச் சொல்லி
    அசைந்து தழுவும் காற்று...

    Quote Originally Posted by ஆதி View Post
    என்னை மட்டும் காதல்
    தன் துட்ட தேவதைகளால்
    ஆசீர்வதித்ததா ?
    காதலின் பழக்கம் அது..
    முதலில் அது துட்ட தேவதைகளைத் தான் அனுப்பும்...
    அப்புறம் வெண்ணிற தேவதைகள் எதிர்பாராத விடியலில்
    உன் வாசல் கதவு தட்டும்...

    Quote Originally Posted by ஆதி View Post
    என் காதல்
    நெருப்பு
    நரக குழிகளில் இருந்து
    உயிர் கொண்டதா ?
    காதல் நெருப்பு...தொட்டுபார்...
    தீக்குள் விரலை விட்டால்
    தீண்டும் இன்பம் தோன்றும்,,
    வடு கூட சுகமாய் ஏதோ சொல்லிச்செல்லும்...


    Quote Originally Posted by ஆதி View Post


    உன்னையும் மீறி
    நீ
    உதிர்த்துப்போகிற சில வார்த்தைகள்
    வந்து விழுகின்றன
    உளியும் சுத்தியலுமாய்
    என்மீது..


    -ஆதி
    இன்னும் உடைந்து போகாமல் இருக்கிறாயே
    ஒருநாள் அடைந்து தீருவதற்கு முதல் படி இதுதான்...
    Quote Originally Posted by ஆதி View Post



    என் சிற்பியே
    நீயே கூறு
    நான்-
    சிலையா ?
    அம்மிக்கல்லா ?

    -ஆதி
    அவள் சொன்னாள் ஆதி...
    நீ அம்மிக்கல்லாய் ஆனால் கூட
    அவள் கால் மிதித்து அருந்ததி பார்க்கும்
    தருணம் சிற்பமாய் போவாயாம்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கொடுத்து வைத்தவரய்யா இந்த கவிதையின் நாயகன்.
    வந்து விழும் வார்த்தைகளெல்லாம் உளியாய் அவரை செதுக்கியிருக்கிறதே...அதனால்தான் இன்னும் உடைந்து போகாமல்...வரும் விடியலுக்கு காத்திருக்கும் உறுதி வாய்த்திருக்கிறது.

    அழகான இந்த கவிதையும்,அதற்கான சுபி,யவனிகா இவர்களின் பின்னூட்டங்களும்..ஆஹா...ரசிக்க வைத்து விட்டது.ரசித்து வாழ்த்துகிறேன்.பாராட்டுகள் ஆதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஆதியின் அற்புத
    கவித்தேரில்
    அழங்கார தோரணமாய்
    சுகந்தப்ரீதன், யவனியக்கா
    பின்னூட்டம்.. நெஞ்சில்
    தேனூட்டம்..
    பேச்சிழந்து நான்..!

    அம்மி மிதிக்க
    அரிவை வந்து
    இல்லறம் அமைய
    வாழ்த்துகள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஆதி View Post
    இன்னும் கவனிபாரற்று
    உன் இல்ல முகப்பில்
    கழட்டிவிடப் பட்ட
    காலணிகளின் ஊடே
    கிடக்கிறது
    என் இதய அஞ்சல்..
    தபால்காரன் சரியில்லையோ.
    வாசலில் வீசி சென்றுவிட்டானே..
    சாத்வீகமாக
    நுழைத்து சென்றிருக்ககூடாதோ

    வீட்டுக்குள் யாருமில்லையென்ற
    அனுபவம் இல்லாதவனோ?
    யோசித்துக்கொண்டிருக்கிறேன்
    இதய அஞ்சல் பிரிப்பதற்காக?

    (யாருக்கு தெரியும்
    செருப்புகள் மறைத்தும் இருக்கலாம்
    அஞ்சலை)
    Last edited by அமரன்; 14-02-2008 at 07:41 AM.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by ஆதி View Post
    மற்றொரு இரவும் கழிகிறது
    மாற்றங்களின் ஊடே
    எந்த மாற்றமும் இல்லாத
    இன்னொரு நாளாய்..

    இன்னும் கவனிபாரற்று
    உன் இல்ல முகப்பில்
    கழட்டிவிடப் பட்ட
    காலணிகளின் ஊடே
    கிடக்கிறது
    என் இதய அஞ்சல்..
    அஞ்சல் அனுப்ப தபால் காரான் வரவில்லையோ..
    அது சற்று முற்பட்ட காலமோ..


    Quote Originally Posted by ஆதி View Post
    ஊரெல்லாம் சுற்றிவிட்டு
    மீள வருகிற எண்ணங்கள்
    உதறிவிட்டுப் போகின்றன
    உன் நினைவுகளை..

    ..

    ஒவ்வொரு நினைவுகளும்
    உன் முகமூடி அணிந்து கொண்டு
    என்னை எதிர்த்துப் பேசுகின்றன..
    ஓ எண்ணத்திற்கு அவ்வளவு வலிமையோ..
    அப்ப எண்ணத்தை காக்க வேண்டும் போல..

    ..

    Quote Originally Posted by ஆதி View Post
    நீ என்னை
    எவ்வளவு காயப்படுத்தினாலும்
    உனக்கு சாதகமாய்தான்
    பேசுகிறது
    என் மனம்
    என்னிடம்..

    ..

    என்னை மட்டும் காதல்
    தன் துட்ட தேவதைகளால்
    ஆசீர்வதித்ததா ?

    ..

    என் காதல்
    நெருப்பு
    நரக குழிகளில் இருந்து
    உயிர் கொண்டதா ?

    ..

    நீ
    என் மகிழ்ச்சியா ?
    கண்ணீரா ?

    ...

    எனக்கு தெரிந்த விதத்தில்
    எல்லாம் பேசிப் பார்த்துவிட்டேன்
    நீ மௌனத்தை மட்டும்
    தான் பேசிபோகிறாய்

    ..

    உன்னையும் மீறி
    நீ
    உதிர்த்துப்போகிற சில வார்த்தைகள்
    வந்து விழுகின்றன
    உளியும் சுத்தியலுமாய்
    என்மீது..

    என் சிற்பியே
    நீயே கூறு
    நான்-
    சிலையா ?
    அம்மிக்கல்லா ?

    -ஆதி
    ஆகா ஆதியே..
    காதலுக்கு உள்ள சக்தி மிக வலிமையானது..
    உங்கள் காதல் நிறைவேறி
    கரம் பிடிக்க என் வாழ்த்துக்கள்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by ஆர்.ஈஸ்வரன் View Post
    அது முடியும்போது தொடங்கும்!
    நீ தொடங்கும்போது முடியும்...!!
    நீ முடிக்கும் இடத்தில்
    நான் துவங்கிறேன்..

    அப்துல் ரகுமானின் வரிகளை ஞாபகமூட்டி செல்கின்றன் உங்கள் பின்னூட்டம்..

    நன்றி ஈஸ்வரன்


    அன்புடன் ஆதி
    அன்புடன் ஆதி



  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    ஒரு நாள் உதிக்கக்கூடும்
    உனக்கென்று தனித்த சூரியன்
    ஆதி என்று பேரைச் சொல்லி
    அசைந்து தழுவும் காற்று...



    காதலின் பழக்கம் அது..
    முதலில் அது துட்ட தேவதைகளைத் தான் அனுப்பும்...
    அப்புறம் வெண்ணிற தேவதைகள் எதிர்பாராத விடியலில்
    உன் வாசல் கதவு தட்டும்...



    காதல் நெருப்பு...தொட்டுபார்...
    தீக்குள் விரலை விட்டால்
    தீண்டும் இன்பம் தோன்றும்,,
    வடு கூட சுகமாய் ஏதோ சொல்லிச்செல்லும்...




    இன்னும் உடைந்து போகாமல் இருக்கிறாயே
    ஒருநாள் அடைந்து தீருவதற்கு முதல் படி இதுதான்...


    அவள் சொன்னாள் ஆதி...
    நீ அம்மிக்கல்லாய் ஆனால் கூட
    அவள் கால் மிதித்து அருந்ததி பார்க்கும்
    தருணம் சிற்பமாய் போவாயாம்...
    அக்கா நெகிழ வைச்சிடீங்கா உங்கள் பின்னூட்டதால்.. படிக்கும் பொழுது சரம் சரமாய் கண்களில் கண்ணீர்.. கடைசி வரி உருகிபோனேன் அக்கா.. அம்மி ஆனாலும் சிற்பமானலும் கவலையில்லை அவள் கை தொடும் கல்லாய் பிறந்ததில் மகிழ்ச்சியே..

    வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா..

    அன்புடன் ஆதி
    Last edited by ஆதி; 19-02-2008 at 05:31 AM.
    அன்புடன் ஆதி



Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •