முப்போகம் விளைந்து
முன்னவரைக் காத்த
மண்ணவள்.....
ஈரமிழந்து இறுகி...இன்று
கோரமாய்த் தெரிகிறாள்!
சுரந்து வற்றிய மடியாய்
பரந்து கிடக்கும்
வெடித்த வயல்!
பயிர் விளையா பருவத்தில்
காசழுத்தம் குறைந்ததால்
வீட்டிலடிக்கும் புயல்!
விரும்பாது பெற்ற
விவசாயி நிலை....
இயற்கையும் மனிதனும்
இணைந்து நடத்திய கொலை!
இதற்கு உழவனின்
உயிர்தானா விலை?
Bookmarks