என் ரேகைகளைக்
கணிதனிடம் காண்பித்தேன்
சொன்னான்
எனக்கும் காதலுக்கும் தூரம் என
புலப்பட்டுவிட்டது எனக்கு
பொய்யுரைக் கணிதன் அவன் என
அண்டை வீட்டில்
நீ இருக்கையில்
காதல் எனக்கெப்படி
தூரமாகும் ??
-ஆதி
என் ரேகைகளைக்
கணிதனிடம் காண்பித்தேன்
சொன்னான்
எனக்கும் காதலுக்கும் தூரம் என
புலப்பட்டுவிட்டது எனக்கு
பொய்யுரைக் கணிதன் அவன் என
அண்டை வீட்டில்
நீ இருக்கையில்
காதல் எனக்கெப்படி
தூரமாகும் ??
-ஆதி
Last edited by ஆதி; 14-02-2008 at 10:42 AM.
அன்புடன் ஆதி
காதல் சுமந்த காதலி அடுத்தவீட்டில்
அதைக் கிட்டாதென உரைத்தான் கணிதன் ஏட்டில்
இப்படி பல பொய்யுரைஞர்களுண்டு நாட்டில்
கவலை எதற்கு காதல் மழை உன் காட்டில்...
அருமையான சிந்தனை.வாழ்த்துகள் ஆதி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
தோராயமா சொல்லி
ஜாதகத்தை சாதகமாக்கும்
கணிதர்கள் கில்லாடிகள்
ஆராய்ந்து சொல்வதிலும்..
அண்டைவீட்டினகம் எங்கோ?
Last edited by அமரன்; 04-01-2008 at 12:29 PM.
எனக்கும் பொய்யெனத்தான் பட்டது,
அவன் சொன்ன அந்த நேரம்....
மெய்யென்று ஏற்று விட்டேன் இப்போது,
இதோ...இன்னொருவனுடன் நீ.....
Last edited by யவனிகா; 04-01-2008 at 10:35 AM.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
அவன் கூறியது பொய்யாகவே இருக்கட்டும், யாரும் காதலியை தூரத்தில் பார்க்க விரும்பமாட்டார்கள். ஆனால் அவன் காதலுக்கும் உங்களுக்கும் தானே தூரம் என்றான் காதலிக்கும் உங்களுக்கும் இல்லையல்லவா அதுவறை சந்தோசமே
உங்களுடைய அதிர்ஷ்டம். அண்டை வீட்டிலே.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks