ஒவ்வொரு வருடமும்
ஒன்றாந்தேதி
வந்துதான் போகிறது!
உள்ளத்தில் ஒன்றுவதாய்
இந்த ஒன்று இருக்கட்டுமே...
சுற்றம் மட்டுமல்ல
சுயத்தையும்
சுத்தமாய் வைத்திருப்போம்
ஆத்திரத்திர்க்கோர்
அங்குசம் வாங்குவோம்
அமைதி நிலவ நாமும்
அணிலாய் இருப்போம்
மரமொன்றை நடுவோம்
இயலாதெனில்
இருப்பதைக் காப்போம்!
மழைநீர் சேமிப்போம், அதை
பிழையின்றி பயணாக்குவோம்
ஏதேனுமோர் ஏழைக்கு
எழுத்தறிவிப்போம்
சிறிதேனும் சிலருக்கு
உதிரம் தருவோம்!
குடிநீருக்கு மாற்றாய்
குளிர்பானம் தவிர்ப்போம்
குடிநீரில் குளியலை
அறவே மறப்போம்!
அயலாரிடம்
அன்புப் புன்னகைப் பூப்போம்
அன்றாட வாழ்வில்
அன்பை அதிகம் சேர்ப்போம்!
இனி ஒன்றிவிட்ட
இந்த ஒன்றை
எப்போதும் தொடர்வோம்!
Bookmarks