மாமியார் மருமகள் இருவருக்கும் இடையில் மாட்டுப்பட்டு றொம்பவே நொந்து போயிருக்கிறிங்க போலிருக்கு...
ஹி... ஹி... ஹி...
எக்ஸ்:(ஸ்டேடஸ் மெஸேஜ்) என்மேல் விழுந்த பனித்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
தாமரை: பார்க்கில் தூங்கினது போனதும் போதும். எழுந்திரியுங்க..
காலங்காத்தால பார்க்கில தூங்கிட்டு கேள்வியைப் பாரு
எக்ஸ்: போங்கண்ணா... நடந்தாலும் விழுகின்றது
இம்சை தாங்க முடியாமத்தான் கேக்குறேன்..
தாமரை: ஒரு வேளை பக்கத்தில பேசிகிட்டு இருக்கறவங்க வாயிலிருந்திருக்கலாம்
எக்ஸ்: தனியப்போனாலும் வீழுதே...அப்பப்போ வழுக்கியும் வீழ்த்துதே..
தாமரை: அப்போ நீங்களே ஜொள்ளு விடறீங்கன்னு நினைக்கிறேன்
கன்ஃபார்ம்..அதேதான்
எக்ஸ்: பனித்துளியைக் கேட்டால் நீங்கள் பதில் சொல்றீங்களே..
தாமரை: என்ன செய்வது ஊமைங்க கிட்ட கேள்வி கேட்பது உங்க பாணி..
எக்ஸ்: ஊமை சைகையிலாவது சொல்லலாமே
தாமரை: பேசத்தெரியாதவங்களுக்கு சப்போர்ட் பண்ணறது நம்ம பாணி.. அதான் காலை வாரிவிட்டுக் கூட சொல்லி இருக்கே
எக்ஸ்: அப்போ எப்படி குளிர்ச்சியாக இருக்கே..ஹி...ஹி...
தாமரை: ஒரு வேளை உமக்கு இன்னும் கொஞ்சம் சொரணை பாக்கி இருக்கோ என்னவோ!
எக்ஸ்: குளிர்ச்சியாக இருப்பதால் எல்லாமே சொகமா இருக்கு..
சொரணை இருப்பதால்தானோ என்னவோ
தாமரை: புரியுது.. இதே டயலாக்கை குட்டையில் ஊறும் சிலரும் சொல்லி இருக்காங்க
எக்ஸ்: தேங்கினாத்தானே குட்டை.. இருந்தும் எப்படி சொகமா இருக்கும்? பனித்துளி இன்னும் அட்ரஸ் சொல்லலையே.. சொன்னா விட்டுடுவோமில்ல கேள்வியை
தாமரை: உங்க உடம்பிலேயே ஒரு வேளை கிடார் வாசிப்பீங்கன்னு நினைக்கிறேன்
எக்ஸ்: ஏனுங்கண்ணா எங்கே தொட்டாலும் இனிக்கும் பக்குவம் இன்னும் வரல்ல..
தாமரை: உடலில் கிடார் வாசிப்பது என்றால் சொறிந்து கொள்வது.. சொறிந்து கொண்டாள் சுகமாத்தான் இருக்குமாம். சொல்லக் கேள்வி
எக்ஸ்: சொறிய சொறிய சொகமா இருந்தாலும் புண்ணாகினால் ரணமா இருக்குமே
தாமரை: ஆமாம்.. சாதா ரணமா ;-)
எக்ஸ்: அதனால இன்னும் உடம்பில வாசிக்கத்தொடங்கல கித்தார்
Last edited by தாமரை; 27-02-2008 at 04:10 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
எக்ஸ்: (ஸ்டேடஸ் மெஸேஜ்) பூங்கதவே தாள் திறவாய்
தாமரை: யாரு உங்களை உள்ள விட்டு வெளிய தாழ்ப்பாள் போட்டது?
எக்ஸ்: ஹி ஹி இந்தக் குளிர்ல தாள் திறக்காம இருக்கறதுதான் பெட்டர்.
தாமரை: அப்ப ஏன் அப்படி
எக்ஸ்: நேத்து கேட்ட பாட்டு அது. ஸ்டேடஸ் மெஸேஜ் போட்டுட்டு தூங்கிட்டேன்.
தாமரை: சில சமயம் இப்படி ஏடாக்கூடமா என் கண்ணில பட்டுருது
எக்ஸ்: என்ன செய்யறது? விதி விளையாடுது..
தாமரை: நீர் விளையாடிட்டு விதி மேல பழி போடுவீரே
எக்ஸ்: ஹி ஹி
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மேலே உள்ள இருபதிவிலுமுள்ள இரண்டு எக்ஸூம் ஒரு எக்ஸ் தானுங்களே...??
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை: வணக்கம்
எக்ஸ்: வணக்கம் தாமரை, நலமா?
தாமரை: நலம். சொல்லுங்க
எக்ஸ்: பிஸியா நீங்க?
தாமரை: இல்லை, தாமரை
எக்ஸ்: டீ குடிக்கலாம் வாங்க
தாமரை: இப்போதைய தேவை.. ஒரு கோப்பைத் தேனீர்
ஹா ஹா
எக்ஸ்: எனக்கு எப்போதும் அது தேவை
தாமரை: அப்போ அதை பேரல்னு மாத்திடலாம்
எக்ஸ்: வாரறீங்களே?
தாமரை: யோசிச்சுப் பாருங்களேன்.. தலையையும் காலையும் மட்டும்தான் வார முடியும். கையையோ இடுப்பையோ வார முடியுமா?
எக்ஸ்: ஆரம்பிச்சிட்டீங்களா? இதுக்குன்னு பெங்களூர்ல கோர்ஸ் எதும் நடத்தறாங்களா?
தாமரை: இன்னும் இல்லை.. ஆனால் நல்ல பிஸின்ஸ் ஐடியா
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வாங்கண்ணா... நல்லா இருக்கீங்களா!! கடிகளைப் பார்த்து எத்தனை நாளாச்சு!
எக்ஸ்: நீங்க இப்போ தான் எழும்புனீங்களா..
தாமரை: ஆறு மணிக்கு பெட் காஃபியோட சினிமாவில் வருமே அந்த மாதிரி குளிச்சு
எக்ஸ்: ஆஹா....
தாமரை: தலையில் துண்டை சுத்திகிட்டு கையில் காஃபியோட அண்ணி வந்து எழுப்பினாங்க
எக்ஸ்: ம்ம் அண்ணிக்கிட்ட சொல்லணும்.. இனிமே பெட் காபிய கட் பண்ண சொல்லி
தாமரை: அண்ணி அவ்வளவு திக்கா காஃபி போடமாட்டாங்க.
எக்ஸ்: காலங்காத்தால நற நற
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இத் தொடரில் வரும் பல்வேறு எக்ஸ்களை சரியாக அடையாளம் காண்போருக்கு பரிசு 1000 ஐகேஷ்,!!!!
Last edited by தாமரை; 27-02-2008 at 08:25 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks