Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 84

Thread: பாரத விலாசில் பூ...!!-நிறைவு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Lightbulb பாரத விலாசில் பூ...!!-நிறைவு

    பாரத விலாசில் பூ...!!

    தலைப்பு வித்தியாசமா இருக்கு தானே...!! ஆமாம்.. பாரத விலாஸ் படத்தை யாருமே மறந்திருக்க மாட்டீங்க..!
    பல தரப்பட்ட மாநில மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு படம். இதில் பூவுக்கு எங்கே வேலை இருக்குன்னு தானே கேக்குறீங்க??

    அதைச் சொல்லத்தான் இந்த பதிவு.

    பூவின் இப்போதைய பாகுபாடற்ற சகோதரத்துவத்தையும், அன்பையும் பார்க்கும் பலருக்கும் ஆச்சர்யம் வந்திருக்கும். அதற்கான அடித்தளம் ஏற்பட்டது அன்றைய என் வளர் பருவத்து சூழல் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

    ஒவ்வொரு குழந்தையின் எண்ணவோட்டமும், திறமையும் அந்தக் குழந்தை வளரும் சூழலையும் பொறுத்தது என்று சொல்வாங்க.

    அந்த மாதிரி ஒரு அன்பான சூழலில் வளர்ந்தது தான் நான் செய்த பாக்கியம்.

    நான் பிறந்து ஒரு 4 வயது வரை ஒரு ரூமில் கால் பங்கு தடுத்து சமையல் அறையாய் ஆகிய ஒரு ஒண்டிக்குடித்தனத்தில் தான் வளர்ந்தேன். பின்பு, வாடகை ஏற்றத்தால் அதே வீதியில் ஒரு மூன்று அறைகள் இருக்கும் வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். (அதில் இரு அறைகளைச் சேர்த்தால் ஒரு அறை அளவு தான் வரும்). ஆயினும், அப்போது அதுவே அரண்மனை தான். அது 5 வீடுகள் தொகுப்பாய் கொண்ட ஒரு காம்பவுண்ட் வீடு. என் வீடு இருந்த வரிசையில் என் வீடோடு சேர்த்து இரு வீடுகள்.

    எதிர்புறம்.. எங்க நான்கு வீடுகளுக்கும் உரிமையாளர் அதாவது ஓனர். அவர் வீடு ஒட்டி இரு வீடுகள். மொத்தத்தில் 5 வீடுகள். இரு வீடுகள் எதிரில் 3 வீடுகள்.

    என் வீட்டுக்கு ஒட்டிய வீட்டில் ஒரு வயதான பாட்டி தாத்தா.. தெலுங்கு பேசுபவர்கள். நாரயணாவையே சதா துதிப்பவர்கள். இந்த பாட்டி தைத்துக் கொடுத்து சம்பாதித்துக் கொண்டிருந்தார். தாத்தாவுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு சின்ன வேலை. இருவரும் அன்யோன்ய தம்பதிகள். இவர்களை எப்பவுமே "தையல் பாட்டி" என்று தான் சொல்வோம். இன்று வரை இந்த பாட்டியின் நிஜப்பேயர்
    தெரியாது.

    அப்புறம், எங்க வீட்டுக்கு நேரெதிரில் இருக்கும் வீட்டு உரிமையாளர் வீடு. எங்க இருவரின் கதவுகளையும் திறந்து அவங்க வீட்டிலிருந்து கடைசி அறையிலிருந்து பார்த்தால் எங்க வீட்டின் சமையல் அறை கடைசி வரை தெரியும். அவ்வளோ நேராக எதிரில் அமைந்த வீடு.

    இவங்க கேரளாவிலிந்து வெகு நாட்கள் முன் வந்த மலையாளர்கள். அன்பான உள்ளங்கள். வீட்டுக்கார அக்காவினை நான் இன்று வரை "சேச்சிக்கா" என்று தான் அழைப்பேன்.

    அவர்களின் வீட்டுக்கு ஒட்டிய வீடு எங்கள் போலவே ஒரு தமிழர் வீடு. அவர்கள் வீடு ஒட்டிய வீட்டில் ஒரு பேங்க் ஆபிசர் இருக்கும் தெலுங்கு பேசும் குடும்பத்தினர் வீடு.

    5 வீட்டு கணக்கும் கூட்டிக் கழிச்சி சரியா வந்திருக்கா பாருங்க??

    அடுத்து எங்க தொகுப்பு வீட்டுக்கு அருகிலேயே அமைந்திருந்தது இன்னொரு மூன்று வீடுகள். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் எந்த சுவர் இடைவெளியும் இல்லை. பிரதான கதவுகள் மட்டுமே தனித்தனியாய்..

    அதில் முதல் வீட்டில் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். அந்த அற்புதமான தமிழ் மணத்துடன் அன்பான நபர்கள். அவர்களுக்கு ஒட்டிய வீட்டில் ஒரு 50 வயது நெருங்கும் வயோதிக கிருத்துவ தம்பதிகள். இவர்கள் குடிவருகையில் ஒளிந்து பார்த்து பின் மெல்ல மெல்ல பம்மிச் சென்று "பாட்டி" என்று அழைக்க, அவங்க தன்னை "மம்மி" என்று அழைக்கச் சொல்ல, இன்று வரை அன்பினால் பிணைந்து விட்டு நீங்காத அந்த தம்பதிகள் மம்மி-டாடி என்றே மனத்தில் நிலைத்துவிட்டனர்.

    அடுத்து, அவர்களின் அருகில் இருக்கும் வீட்டில் எங்க வீதியில் மளிகைக் கடை வைத்து ஓஹோ என்று வியாபாரம் செய்த ஒரு புதுமண இஸ்லாமிய தம்பதிகள். செல்லமாய் இவர்கள் குடும்பத்தை "பாய்" வீடு என்றும் இவர் கடையை "பாய் கடை" என்றுமே அழைப்போம்.

    இவ்வாறு மொழி, மதம் வேறுபாடுடைய வித்தியாசங்கள் நிறைந்த மனிதர்களோடு தான் என் வாழ்வின் மிக நீண்ட இடைவெளியாக 14 வருடங்கள் கூட்டுப்புழுவான நான் பட்டாம்பூச்சியாய் வளர்ச்சிதைமாற்றம் பெற அன்யோன்யமாய் தாய்-பிள்ளை போல வளர்ந்தேன் என்று சொன்னால் நம்புவீர்களா??

    இதனால், இந்த குடியிருப்பை செல்லமாய் நான் "பாரத விலாஸ்" என்று அழைப்பதில் பிழையும் உண்டோ...??!!

    (விலாசமாகும் இன்னும்)
    Last edited by பூமகள்; 17-03-2008 at 02:40 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    நல்ல தொடக்கம் பூமகள்.. ஒரேடியா எல்லாத்தையும் அறிமுகப் படுத்திட்டீங்க.. அமர்க்களப் படுத்துங்க..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    (விலாசமாகும் இன்னும்)

    ஓ...
    உங்கள்
    சகோதரத்துவத்தின் விலாசம்
    பாரத விலாஸ்தானா..
    பாராட்டுகள் பூமகள்..

    விலாசம் விசாலமாவது
    எப்போது
    Last edited by அமரன்; 15-12-2007 at 11:14 AM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    பிழையே இல்லை பூ...எல்லாவற்றையும் இன்னும் நீ நினைவு வைத்திருப்பது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

    உன்னைப் போல தான் நானும்.நானும் என் தங்கையும் பள்ளியிலிருந்து வரும் போது என் அம்மா இருக்க மாட்டார்கள்.அம்ம வரும் வரை பக்கத்து வீட்டில் தான் இருப்போம். பக்கத்து வீட்டு அக்காவின் பெயர் ஜெயா. அவர்கள் வீட்டு சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்.எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர்கள் தான் இன்று
    வரை எனக்கு அண்டைவீடு.

    என் மூத்த மகனின் பிரசவத்தின் போது, நான் வலியில் அழுவது பார்க்க முடியாமல் என் அம்மா கூட லேபர் வார்டிலிருந்து வெளியே வந்து விட்டார்கள். கடைசி வரை என்னுடன் இருந்தது ஜெயா அக்கா தான். அதனாலோ என்னமோ என் மூத்தமகனை
    3 வயது வரை வளர்த்ததும் அவர்கள் தான், இவனும் அங்கேயே பழியாய் கிடப்பான்...இப்பவும் ஊரிலிருந்து யார் வந்தாகும் அவர்களின் ஸ்பெசல் சாம்பார் பொடி, முறுக்கு இத்யாயிகள் இங்கே வந்து விடும். ஊருக்குப் போகும் போது என் பையன் பாதி நேரம் விபூதியும் நெற்றியுமாக அலைவான்.இன்றும் வீட்டில் நான் ஊதுபத்தி ஏற்றினால் பெரியவனும் சின்னவனும் சாமி கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். என்ன சொல்லி அவர்களுக்கு விளங்க வைப்பது....இந்த ஊதுபத்தி நம்ம சாமிக்குடா..அவங்க சாமிக்கில்லடா என்றா? பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.

    மலரும் நினைவுகள் பகிரத் தூண்டிய பதிவு பூ இது, நன்றி.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    ஓ...
    பாரத விலாஸ்தான்
    உங்கள் சகோதரத்துவத்தின் விலாசமோ..
    எப்போது
    விலாசம் விசாலமாகும்..
    என்னுடைய விலாசம் உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    என்னுடைய விலாசம் உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா?
    விசாலம்,அழகு, முகவரி எல்லாம் தெரிந்திருச்சு.
    எனது விலாசம் உங்களுக்கு தெரிஞ்சிருச்சா
    Last edited by அமரன்; 15-12-2007 at 11:58 AM.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.
    தங்கையே...உங்களை நினைத்து மிக மிகப் பெருமைப்படுகிறேன்.இப்படிப்பட்ட தங்கைகளை எனக்குக் கொடுத்த இந்த மன்றத்திற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by யவனிகா View Post
    பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.
    பெருமைபடவைக்கும் விடயம். பாராட்டுகள்.. சின்னவனின் சின்னத்தனமொன்று..
    மத நம்பிக்கைகளை அவர்களுக்குள் விதையுங்கள். மதத்தை விதைப்பதை தவிருங்கள்..

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by யவனிகா View Post
    பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.
    என்னதான் 10 குழந்தை பெற்றிருந்தாலும் எந்தத் தாயும் தன் மகள் பிரசவத்தின் போது தைரியமாய் இருப்பதில்லை சகோதரி.. என் தாயும் அப்படித்தான், மாமியாரும் அப்படித்தான்..

    அவர்களாய் அறிந்து கொண்டு கேட்கும் பொழுதுதான் கேட்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் ஆழமாய் பதியும். தவறின்றி உணரவும் முடியும். இல்லையெனில் கோவில் கடந்தால் கை வணங்க, கண் மூடி விட்டு காரியம் பார்க்கும் அனிச்சை செயலாகி விடும்.

    அதனாலேயே பல நல்ல விஷயங்கள் அலட்சியப்படுத்தப் படுகின்றன.

    ஒரு நல்ல விஷயம் பேசினால் பத்து நல்ல விஷயம் வெளியே வருகிறதே!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    நல்ல தொடக்கம் பூமகள்.. ஒரேடியா எல்லாத்தையும் அறிமுகப் படுத்திட்டீங்க.. அமர்க்களப் படுத்துங்க..
    முதல் பின்னூட்டமே மலர்களின் அரசரிடமிருந்து..!
    மிகுந்த நன்றிகள் அண்ணா.

    Quote Originally Posted by அமரன் View Post
    விலாசம் விசாலமாவது
    எப்போது
    எப்போதுமே அது விசாலமாகிட்டு தான் இருக்கு அமர் அண்ணா!!
    உங்களுக்கு புலப்படாததா அண்ணா??

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    படிக்கத்தூண்டும் மலரும் நினைவுகள்.ஒண்டுக்குடித்தனமென்பது பல விஷயங்களின் அனுபவங்கள் கிடைக்கும் ஒரு பல்கலைகழகம்.அப்படி அனுபவம் பெற்றவர்களில் ஒருவன் என்ற முறையில் என் நினைவுகளும் பின்னோக்கிப் போகக் காரணமாக இந்தத் திரி இருக்கிறது.சிறிய வீடுகளுக்குள் விசாலமான மனங்கள்,உயர்வான உறவுகள்.தொடரும்மா பூ....கூடவே வருகிறோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post
    பிழையே இல்லை பூ...எல்லாவற்றையும் இன்னும் நீ நினைவு வைத்திருப்பது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.
    யவனி அக்கா...!!
    நிஜமா உங்க அன்புக்கு நான் என்றுமே கடமைப் பட்டிருக்கிறேன். உங்களின் அன்பான ஊக்கமும் பாசமும் என்னவென்று சொல்லுவேன்...!
    மனம் நெகிழ்ந்து கூப்பிடுகிறேன்.. "அக்கா........!!" மிக்க நன்றிகள் அக்கா.

    ஊருக்குப் போகும் போது என் பையன் பாதி நேரம் விபூதியும் நெற்றியுமாக அலைவான்.இன்றும் வீட்டில் நான் ஊதுபத்தி ஏற்றினால் பெரியவனும் சின்னவனும் சாமி கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். என்ன சொல்லி அவர்களுக்கு விளங்க வைப்பது....இந்த ஊதுபத்தி நம்ம சாமிக்குடா..அவங்க சாமிக்கில்லடா என்றா? பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.
    எத்தனை பெரிய மனது உங்களுக்கு!!!!

    இதைப் படிக்கும் போது வானம் அளவு என் மனத்தில் நீங்கள் உயர்ந்து விட்டீங்க அக்கா.. !!

    மதத்தின் பெயரால் அடிச்சிட்டு, எல்லைக் கோடிட்டு பேசிப் பேசி தீராத ஒன்று, எவ்வளவு அழகாய் கையாண்டு அன்பின் மூலம் வென்றிருக்கிறீர்கள்...!!

    கடவுள் ஒன்று தான். இதில் அவரவர் நம்பிக்கை படி விதவிதமாய் வழிபடுகிறோம். பிஞ்சுகளின் மனத்தில் அந்த வேறுபட்ட வழிபாடு கூட அறிந்திருக்கவில்லை. அவர்கள் எண்ணப்படி, எல்லாக் கடவுள்களும் ஒன்றே..!

    மிக சிறந்த குழந்தைகளாக உங்கள் குழந்தைகள் திகழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை அக்கா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •