Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: பாரம்..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    பாரம்..!

    புலர்ந்தும் புலராத காலைவேளை. மணியஞ்சாகிவிட்டது என்று கோயில்மணி அடித்துச்சொல்ல பதறி அடித்து எழுந்தாள் சரசு. குளிருக்கு இதமாக மண்தரையில் படுத்திருந்ததாலோ என்னவோ கிழிந்த சேலை அவளை விட்டு விலகி இருந்தது. அதைச் சரிசெய்து விட்டு குலைந்திருந்த தலையை சரிசெய்துகொண்டு வெளியே வந்தாள். பக்கத்துக் குடிசைத்திண்ணையில் பாக்குவெத்தலை இடித்துக்கொண்டிருந்த பங்கசக்கிழவிக்கு பாசத்துடன் புன்னகையை பரிசாக்கிவிட்டு, வழக்கமான வேலைகள்எல்லாவற்றையும் முடித்து விட்டு வீட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.ஊர்ப்பெரியவீட்டின் படலை பழுதாகாவண்ணம் பாதையில் விரிசல் ஏற்படுத்தி வளவுக்குள் நுழைய, வாலைக் குழைத்து குழைவுடன் வரவேற்றது கறுப்பு நாய். மெல்லப்பிடரியில் தடவி செல்லம் கொஞ்சும்போது கனைப்புச் சத்தத்துடன் எஜமானி. சாயம் போன வார்த்தைகளை விசிறி அடித்தாள்..

    "பழையசோறு தின்றாலும் கொழுப்புக் கூடிட்டுது உனக்கு. வேலைக்கு வரும் நேரமிதுவாடி?".

    பழங்கஞ்சி மிளகாய் பழகிப்போனதால், சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு, மலைபோலக் குவிந்திருக்கும் பாத்திரங்கழுவும் வேலையை தொடங்கினாள். சற்று நேரத்திற்கெல்லாம், யாரோ அவளை பார்ப்பதாக உள்ளுணர்வு சொன்னது.சுற்று முற்றும் பார்த்தாள். யாருமில்லை என்று தெளிந்தாள்.

    "இந்தாடி... இந்த உடுபுடைவைகளை நல்லா கசக்கித் துவைத்துபோடு. எப்பதான் அழுக்கில்லாமல் துவைக்கப்போறாயோ சனியனே.. எனக்கு மட்டும் எங்கிருந்து வந்து சேருகின்றீர்களோ" யானைப்பிளிறலுடன் மறைந்தாள் எஜமானி.

    பாத்திரம் தேய்க்கும் சத்தத்தையும் மீறி யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. அவளையே பார்த்துக்கொண்டிருந்த நாயைப் பார்த்துப் புன்னகைத்தாள். கைவேலையை கவனித்தது.

    கிணற்றடித் தொட்டியில் நீர் மொண்டு நிரப்பிவிட்டு உடுப்புகளை ஈரமாக்கி, சவர்க்காரம் போட்டு, தன் பெண்டாகி தன் பெண்டைத் தானே கழற்றிக்கொண்டு இருக்கும்போது, "இன்னும் துவைக்கலையா.. சனியனே.. சனியனே.. திண்டு திண்டு திரண்டு போயிருக்கிறாயே தவிர வேலையை வாகாச்செய்ய திராணி இல்லை. மாட்டுக்கொட்டகையை எப்பவடி சுத்தம் செய்யப்போறாய்" வெடித்தமடி மலைபோல ஆடி அசைந்து எசமானி செல்ல சருகுகள் அழுத சத்தம் கேட்டது. ம்மா என்று மாடுகள் அழைத்த சத்தம் அதனுடன் கலந்தது...

    உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, கோமாதாக்கள் இருப்பிடத்தை கோயிலாக்கிவிட்டு, அவைகளுக்கு தண்ணி காட்டிவிட்டு தந்தாகம் தணிக்க துணிந்தவளை நெட்டித்தள்ளியது இடிக்குரல்.. "வேலை செய்து கிழித்த கிழிப்பிலை தண்ணி கேட்குதோ மகாராணிக்கு.... அப்படியே இதையும் தின்னு" பழைய பாத்திரத்தில் இருந்த பழஞ்சோறை தண்ணியில் கலந்துகுடிக்க பரிசாகபுரை ஏறியது..தன்னையும் யாரோ நினைக்கின்றார்கள் என்ற மகிழ்வுடன் குடித்துவிட்டு வீட்டுக் கொல்லப்புறக்கதவால் உள்நுழைந்து வீட்டைப் பெருக்கினாள்.. ஒருவாறு கட்டளைகளை நிறைவேற்றி அடிமாட்டுக்கூலியைப் பெற்றுக்கொண்டு அவள் குடிசைக்கு போகும்போது நேரம் மூன்று ஆகிவிட்டது...

    குடிசை தனிமையாக வெயிலில் காய்ந்து கொண்டிருக்க, காலையில் அவள் ஆக்கி வைத்த சுடுசோறு ஆறிப்போய் இருந்தது.. பதைக்கும் மனதுடன் பாயைப் பார்க்க அது நின்ற நிலையில் இருந்தது.. வெளியே ஓடி எங்கும் தேடிக் களைத்து வந்தவளுக்கு பக்கத்துக் குடிசை பங்கசம் சேதி சொன்னாள்..

    "ஏண்டி சரசு.. முந்தா நேத்து கூட்டியாந்தியே ஒருத்தி..யாருடி அவ... காலங்காத்தலா வேலைக்குப் போன உன்பின்னால போனாள்...கொஞ்ச நேரத்துக்குமுன்ன வந்தாள். உனக்கு பாரமா இருக்க வருமபல். அதனால போறேன்னு உங்கிட்ட சொல்லச்சொல்லிட்டு போயிட்டா..."

    அதைக் கேட்டதும், யாருமற்ற தனக்கு, யாருமற்ற அவளை துணையாக ஆண்டவன் அனுப்பினானென சற்றுமுன் வரை புளகாங்கிதப்பட்ட சரசு, பாதரசப் பீப்பாவை நெஞ்சில் வைத்தது போல குடிசையின் திண்ணையில் சாய்ந்தாள்..
    Last edited by அமரன்; 13-12-2007 at 09:07 PM.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    யாருமில்லாதவர்களுக்கு ஆண்டவன் துணை என்பார்கள்.அப்படிப்பட்ட ஒருத்திக்கு எங்கிருந்தோ வந்தவள் துணையாய் இருப்பாள் என்ற எண்ணத்தையும் மாய்த்துவிட்டு மீண்டும் இவளை தனியாக்கிவிட்டுப் போய்விட்டாள்.வெறித்த பார்வையிலும்,விசும்பல் சத்தத்திலும் மட்டும் அந்த பாத்திரத்தைக் காட்டியது அருமை.படிப்பவர் யூகத்துக்கு அதை விட்டு விட்டதும் அருமை.அதிலும் புரையேறியதையும் நினைத்து சந்தோஷப்படும் சரசு,எவ்வளவுதூரம் அவளின் தனிமையின் கொடுமையை அனுபவித்திருப்பாளென்று உணர முடிகிறது.
    சிறிய சம்பவம்தான்.அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.ஆனால் ஒரு கதை படித்த நிறைவு இல்லை.வெகு சுருக்கமாக முடிந்துவிட்டதை போல ஒரு உணர்வு.எங்கிருந்தோ வந்தவளின் வெளியேற்றம் இத்தனை பாரத்தைக் கொடுத்தது என்று உணர அழுத்தமான காரணம் கொடுக்கப் படாததே என்று நினைக்கிறேன்.
    வாழ்த்துகள் அமரன்.
    Last edited by சிவா.ஜி; 14-12-2007 at 05:11 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஒரு வேளை அது ஓவியாவோ? நாலஞ்சு நாளா அவங்களைத்தான் காணோம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அருமை அமரன், எப்படி உங்களுடைய இந்த கதையை பின்னூட்டங்களை படிக்கும் முன்னரே புரிந்து கொண்டேன். பாவம் துனைக்கு யாரோ ஒருத்தியை அழைத்து வந்தால் அவளோ விட்டு விட்டு போய் விட்டாள். அந்த பாத்திரத்தை கன்னில் காட்டாமலே ஆனால் அதன் முக்கியத்துவத்தை காட்டி விட்டீர்கள்.
    அதிலும் வீட்டு வேலை செய்யும் பென் கஸ்டபடுவதை அழகாக எழுதிஇருந்தீர்கள், அதை நான் நேராக பார்த்து கொண்டிருப்பவன். அதன் இன்னொரு முகமும் அடியே அறிந்தவன், எங்கள் வீட்டிலும் வேலை செய்ய ஒரு பென் வருவாள், இதேபோல எல்லா வேலையும் செய்வாள் 2 மனி நேரம் தொடர்ச்சியாக இருக்கும், என் மனைவி திட்டி விரட்டி கொன்டுதான் வேலை வாங்குவாள், ஆனா கோவையில் குரைந்த கூலி கிடையாது, வீட்டு வேலை செய்யும் பென்கள் மாத வருமானம் 10000 வரும். மில்லுக்கு போரவன் கூட அவ்வளவு ஈட்ட முடியாது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    அமரண்ணா கதையை இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம்...
    நேக்கு முதல்ல புரிஞ்சிக்க கஷ்டமா இருந்திச்சி..
    அப்புறம் ரெண்டு மூணு முறை படிச்ச பிறகு தான் புரிஞ்சது...

    வர.. வர.. மணிரத்னம் படம் பாத்து எல்லாரும் கெட்டுபோயிட்டாங்க..
    சுருக்கமா சொல்றேன்னு ஆணியடிக்கிற மாதிரி சொல்றேன்னு கிளம்பிட்டாங்களே...
    "ஏண்டி சரசு.. முந்தா நேத்து கூட்டியாந்தியே ஒருத்தி..யாருடி அவ... காலங்காத்தலா வேலைக்குப் போன உன்பின்னால போனாள்...கொஞ்ச நேரத்துக்குமுன்ன வந்தாள். உனக்கு பாரமா இருக்க வருமபல். அதனால போறேன்னு உங்கிட்ட சொல்லச்சொல்லிட்டு போயிட்டா..."
    Last edited by மலர்; 14-12-2007 at 07:35 AM.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சிறிய சம்பவம்தான்.அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.ஆனால் ஒரு கதை படித்த நிறைவு இல்லை.வெகு சுருக்கமாக முடிந்துவிட்டதை போல ஒரு உணர்வு.எங்கிருந்தோ வந்தவளின் வெளியேற்றம் இத்தனை பாரத்தைக் கொடுத்தது என்று உணர அழுத்தமான காரணம் கொடுக்கப் படாததே என்று நினைக்கிறேன்.
    வாழ்த்துகள் அமரன்.
    இது ரொம்பப் பிடிச்சிருக்கு.. உண்மைதான் சிவா. கதையாக இருக்கக்கூடாது என்று நினைத்து எழுதினேன். அவரவர் அனுபவித்த தனிமைத்துணை வேதனையைப் பொறுத்து பாரம் இருக்கட்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை.. மிக்க நன்றி.. குறைகளை தொடர்ந்து சொல்லுங்கள்.. பிடிச்சிருக்கு..

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by மலர் View Post
    அமரண்ணா கதையை இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம்...
    நேக்கு முதல்ல புரிஞ்சிக்க கஷ்டமா இருந்திச்சி..
    அப்புறம் ரெண்டு மூணு முறை படிச்ச பிறகு தான் புரிஞ்சது...

    வர.. வர.. மணிரத்னம் படம் பாத்து எல்லாரும் கெட்டுபோயிட்டாங்க..
    சுருக்கமா சொல்றேன்னு ஆணியடிக்கிற மாதிரி சொல்றேன்னு கிளம்பிட்டாங்களே...
    ரொம்பவும் வலிக்குதா மலர்?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    கதைச் சுருக்கம் போல ஒரு கதை.. படிப்பவரின் மனதைப் பொருத்து கனம் கொடுக்கும் கதை.. தனிமையின் கொடுமை அனுபவித்தவனுக்கே அது புரியும்.. என்னைப் பொருத்தமட்டில் கதையில் இன்னும் கொஞ்சம் கனம் கூட்டி இருக்கலாம்.. படிக்கும் வரை இதயத்தில் ஈரமாய் இருந்தக்கதைப் படித்தவுடன் உலர்ந்துவிடுகிறது.. ஆனால் சொல்லவந்ததைக் கதை சொல்லிவிட்டுப் போகிறது..

    வாழ்த்துக்கள் அமரன்..

    -ஆதி
    Last edited by ஆதி; 14-12-2007 at 07:57 AM.
    அன்புடன் ஆதி



  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    ஒரு வேளை அது ஓவியாவோ? நாலஞ்சு நாளா அவங்களைத்தான் காணோம்.
    அவுங்களா இருக்காது.. அவுங்க சொல்லாமல் கொள்ளாமல் போக மாட்டாங்க..

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஆதி View Post
    கதைச் சுருக்கம் போல ஒரு கதை.. படிப்பவரின் மனதைப் பொருத்து கனம் கொடுக்கும் கதை.. தனிமையின் கொடுமை அனுபவித்தவனுக்கே அது புரியும்.. என்னைப் பொருத்தமட்டில் கதையில் இன்னும் கொஞ்சம் கனம் கூட்டி இருக்கலாம்.. படிக்கும் வரை இதயத்தில் ஈரமாய் இருந்தக்கதைப் படித்தவுடன் உலர்ந்துவிடுகிறது.. ஆனால் சொல்லவந்ததைக் கதை சொல்லிவிட்டுப் போகிறது..

    வாழ்த்துக்கள் அமரன்..

    -ஆதி
    உடனடி ஈர உலர்வு இருப்பது போலத்தான் இருக்கின்றது..
    அடுத்த தடவை பார்த்துக்கலாம்.. நன்றி...

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    அவுங்களா இருக்காது.. அவுங்க சொல்லாமல் கொள்ளாமல் போக மாட்டாங்க..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நல்லவிவரிப்பு...!
    சுடுசொல் கூறும் எசமானியம்மா.... அடிக்கடி சனி பகவானைக் கூப்பிடுவது தான்.. கொஞ்சம் நெருடியது..!
    அமரன் அண்ணா... உங்க ஸ்டைலில் (அழகிய தீ) மாதிரி ஒரு கதையை எப்போ தரப்போறீங்க?? எனக்கு படிக்கனும்.
    கதை விவரிப்பு.. காட்சியமைப்பு அருமை. ஆமா.. அந்த துணியை கடைசி வரை துவைக்கவே இல்லையா??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •