பேயோட்ட உத்தரபிரதேச அரசு நடத்தும் பூஜை
December 12th, 2007 (Satrumun)
உத்தரபிரதேச அரசு அலகாபாத்தில் புதிதாய் கட்டப்பட்ட பாலத்திலிருந்து மக்கள் குதித்து தற்கொலை செய்வதைத் தடுக்க, காத்து கருப்பை விரட்ட, விசேட பூஜை மேற்கொள்ளவிருக்கிறது.
5.5 கிமீ தூரமுள்ள இந்தப்பாலம் யமுனை ஆற்றின் குறுக்கே டென்மார்க் நிறுவனமொன்றால் ரூ.500 கோடிக்குக் கட்டப்பட்டது.
கட்டிய நாள் முதல் 350 நபர்கள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதனால் அரசு இத்தைகைய சடங்குகள் மூலம் கெட்டவற்றை நீக்க திட்டமிட்டுள்ளதாக அலகாபாத் எஸ்டிஎம் ராஜேஷ் சிங் கூறினார். இதற்கு டென்மார்க் நிறுவன திட்ட மேலாளர் ராபர்ட் உத்வாத்தும் உடன்பட்டார். இந்தப்பாலம் இன்னும் அதிகாரபூர்வமாக திறக்கப்படாததும் சரியான சகுனம் இல்லை என்கிறார் அவர்.
மேலும்.http://in.news.yahoo.com/071212/211/6oc7f.html//
நாம் வாழ்வது 21ம் நூற்றாண்டு தானே?
Bookmarks