Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: அவர்கள் அப்படித்தான்

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    அவர்கள் அப்படித்தான்

    \"டே பார்த்தி....அந்த லாடு லபக்குதாஸு(கொஞ்சம் பந்தா பார்ட்டி) எங்கடா இன்னும் காணோம்\" கணேஷின் கேள்விக்கு,

    \"அவனா..... சாரு ஜமாவுல சேர்றதுக்கு இன்னிக்கு கொஞ்சம் லேட்டாகுமாம்....காலையில போன் பண்ணியிருந்தான்\" ஷாகுல் பதில் சொன்னான்.

    \"ஏன் 9 மணிக்கு பில் கேட்ஸோட மீட்டிங் இருக்காமா...?\"

    \"இல்லடா....அவங்கப்பா என்னமோ வேலை குடுத்திருக்காராம்,அத முடிச்சிட்டு வர்றதுக்கு நேரமாகுன்னு சொன்னான்\"

    \"இதப் பார்றா...புள்ள அப்பன் பேச்சையெல்லாம் கேக்க ஆரம்பிச்சிடிச்சா....\"கணேஷ் நக்கலாக சொல்லி முடித்ததும் அந்த ஜமாவே சேர்ந்து ஒரு ஓ......ஹோ....போட்டார்கள்.

    \"மச்சி....அப்டியே தலையை திருப்பாம நைஸா உன்னோட லெஃப்ட்ல பாரேன்\"சொண்டி என்கிற சுந்தரேசன் சொன்னதும் ஷாகுல் அப்படியே செய்தான்.

    \"அட நம்ம மின்னலு....கூட யார்றா அது வடிவேலு...?\"

    \"அய்யா மின்னலோட மாமாவாம்...துபாய் ரிட்டர்ன்...\'இன்று ஒரு தகவலாக தந்தது செழியன்,சுருக்கமாக செல்லு(அப்பா தமிழ் வாத்தியார்).

    அது ஒரு பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இருக்கும் டீக்கடை+பெட்டிக்கடை.இந்த குரூப்....ஆமாம்...நீங்கள் நினைப்பது சரிதான்.காலை முதல் மாலைவரை அந்த இடத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு பொகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் கலாய்க்கும் இளைஞர்கள்.
    இதில் கணேஷ்,செழியன்,ஷாகுல்,ரேமண்ட் ராஜா,பார்த்தி எல்லோரும் பட்டதாரிகள்.மும்முரமாக இல்லையென்றாலும்,தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள்.சொண்டி என்கிற சுந்தரேசன் வட்டிக்கடைக்காரரின் இரண்டாவது மகன்.

    \"டே லபக்குதாஸு வர்றாண்டா\" சத்தமாக செல்லு சொன்னதும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

    \"வாடா பரமேசு,என்னா காலங்காத்தால மொளகாப்பொடி அரைக்கப் போய்ட்டியா\"ஷாகுல்.

    \"அட போங்கடா,நேத்து எங்கப்பா வண்டி வழியில மக்கர் பண்ணியிருக்கு,அதை ஃபிரெண்ட் வீட்ல விட்டுட்டு அவரு வண்டியை வாங்கிட்டு வந்திருக்காரு.அதான் காலங்காத்தால அவர் வேலைக்கு போறதுக்குள்ள என்னை போய் குடுத்துட்டு வரச் சொன்னார்.வண்டியை விட்டுட்டு,லொங்கு லொங்குன்னு அங்கருந்து நடந்து வரேன்\"

    \"அது ஒண்ணும் இல்ல மச்சி....இந்த பண்ணாடைக்கு தொப்பை வுய்ந்திடிச்சி,அத அவங்கப்பா கவனிச்சிருப்பாரு....இதான் சோம்பேறியாச்சே தானா நடக்காதுன்னு தெரிஞ்சிக்கிட்டு காலையிலேயே வாக்கிங் போக வெச்சிருக்காரு...கில்லாடிடா..உங்கப்பா\"ரேமெண்ட் அடித்த கமெண்ட்டுக்கு பரமேசு அவனைத் துரத்தினான்.

    \"டம்....ச்சடார்...\"

    சத்தத்தைக் கேட்டு எல்லோரும் திரும்பிப்பார்க்க....சாலையில் சிறிது தூரத்தில் ஒரு ட்டூவீலர் விழுந்திருந்தது.

    ஒரு அவசரத்தோடு அனைவரும் அங்கே ஓடினார்கள்.அதற்குள் கொஞ்சம் பேர் கூடிவிட்டார்கள்.அவர்களை விலக்கிப் பார்த்த கணேஷ் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் சங்கடப்பட்டான்.புதிதாகத் திருமணம் ஆனவர்கள் என்பது மஞ்சள் மினுக்கு மாறாத தாலியிலும்,அவள் அணிந்திருந்த நகைகளிலும் தெரிந்தது.பக்கத்தில் அவள் கணவன் சுய நினைவற்றுக் கிடந்தான்.அந்தப் பெண்ணின் முந்தானை சக்கரத்தில் சிக்கிக்கொண்டு ...அவளை விட்டு விலகியிருந்தது.கைகளை X குறியாக்கி தற்காலிகமாக தன் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருந்தாள்.அந்த முகத்தில் பயமும் அழுகையும் அப்பட்டமாகத் தெரிந்தது.அருகில் இருக்கும் கணவனைக் காப்பாற்றவேண்டும் என்றாலும் புடவையை துறக்க வேண்டி வரும்.அதைச் செய்ய இயலாத பரிதாபத்திலிருந்தாள்.கணேஷ் கூடியிருந்தவர்களை கோபமாகப் பார்த்துவிட்டு,உடனே தன் ஜெர்க்கினை எடுத்து \"சிஸ்டர் இந்தாங்க இதைப் போட்டுக்குங்க...கவலைப் படாதீங்க நாங்க இருக்கோம்\"என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு..அவள் தயக்கத்துடன் அந்த ஜெர்க்கினை வாங்கி அணிந்து கொண்டதும் அவசரமாய் சேலையை முந்தானை வரைக் கிழித்து அவளுக்கு விடுதலைக் கொடுத்தான்.
    அதற்குள் மற்ற நன்பர்கள் அவள் கணவனை சோதித்தார்கள்.
    \"மச்சி தலையில பலமா அடிப் பட்டிருக்குடா..சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கொண்டு போகனும்...ஆட்டோவை கூப்புடுடா என்று ஷாகுல் அலறினான்.பரமேசு உடனே வெளியேறினான்.அந்தப் பெண் நடுங்கிக்கொண்டிருந்தாள்.

    ஆட்டோ வந்ததும் ஆளுக்கொரு பக்கமாய் அடிபட்டவனைத் தூக்கி, ஆட்டோவில் முதலில் செல்லு அமர்ந்துகொள்ள ஷாகுலும்,பரமேசும் அவனை ஆட்டோவுக்குள் நுழைத்தார்கள்.

    \"சிஸ்டர் நீங்க உக்காந்துக்குங்க பக்கத்துலதான் ஹாஸ்பிட்டல் சீக்கிரம் போயிடலாம்.கவலைப் படாதீங்க அவருக்கு ஒண்ணும் ஆகாது\" சொலிவிட்டு..\"டே மாப்ள சிக்கிரமா ARK க்கு கொண்டு போங்கடா...நாங்க பின்னாலேயே வறோம்.\" என்று ஷாகுலிடமும்,பரமேசுவிடமும் சொல்லிவிட்டு மற்றவர்களுடன் வேகமாக தங்கள் கலாய்ப்பு இடத்துக்குத் திரும்பினான் கணேஷ்.நிறுத்தியிருந்த பைக்குகளில் மருத்துவமணை நோக்கி பறந்தார்கள்

    கொஞ்ச நேரத்தில் மருத்துவமணையில் இருந்தார்கள்.உடனடியாக அவசர முதலுதவிப் பிரிவில் அவரை சேர்த்தார்கள்.

    \"சிஸ்டர் உங்க வீட்லருந்து யாரையாவது கூப்பிடனுமா...இந்தாங்க இந்த செல்-லருந்து கூப்பிடுங்க\" என்று அந்தப் பெண்ணிடம் தன் செல்போனை கொடுத்தான் கணேஷ்.

    கையில் போனை வாங்கிய அந்தப் பெண் சிறிதுநேரம் எந்த எண்ணும் நினைவுக்கு வராமல் தயங்கிவிட்டு பின் அழுத்தினாள்.

    உள்ளேயிருந்து அவசரமாய் வந்த நர்ஸ் \'அவருக்கு தலையில நல்ல அடி பட்டிருக்கு..ப்ளட் தேவைப்படும்\" என்றதும்,
    \"நாங்க ஆறு பேர் இருக்கோம் சீக்கிரமா எந்த குரூப்புன்னு சொல்லுங்க யாராவது ஒருத்தர் ரெண்டு பேரோடது மேட்ச் ஆகும்....ப்ளட்டைப் பத்திக் கவலையில்லை....அவருக்கு சீரியஸா ஒண்ணுமில்லையே...\"ரேமெண்ட் ராஜாவின் கேள்விக்கு

    \"ஸ்கேனுக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க..அதுக்கப்புறந்தான் எதுவும் சொல்ல முடியும். ஹெட் இஞ்சூரிங்கறதால இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது\"நர்ஸின் பதிலைக் கேட்டு அந்தப் பெண்ணின் கண்களில் குபுக்கென கண்ணீர் எட்டிப் பார்த்தது.
    அதைக் கவனித்த சுந்தரேசன்\"சிஸ்டர் நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க...ஒண்ணும் ஆகாது.எல்லாம் சரியாயிடும்..நாங்க இருக்கமில்ல\"என்றதும் அந்தப் பெண் அவர்களைப் பார்த்து கைகூப்பினாள்.எல்லோருக்கும் கண்கள் கலங்கிவிட்டது.

    ஏறக்குறைய ஆறு மணி நேரத்துக்குப் பிறகு,ரத்தம் எடுக்கப்பட்டு,கொடுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர் சொல்லும்வரை அங்கிருந்து விட்டு அந்தப் பெண்ணுக்கும்,அவள் வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடமும் சொல்லிவிட்டு திரும்பினார்கள்.

    அடுத்தநாள் காலை ஒன்பது மணி.அதே டீக்கடை+பெட்டிக்கடை.

    \"மச்சி அங்கப் பார்றா மின்னலு வேற ஒரு ஆளு கூட வர்றா...இது யாரு சிங்கப்பூரு மாமனா...?\"
    கூட்டமாக \"ஓ....ஹோ\" சத்தம் கேட்டது.

    அவர்கள் அப்படித்தான்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அவர்கள் மட்டும் அப்படித்தான்..அவர்கள் மட்டும் அப்படித்தான்.. என்னவோ நிஜக் கதைகளா எழுதறீங்களே! சபாஷ் சிவாஜி!
    Last edited by தாமரை; 12-12-2007 at 10:52 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி தாமரை.நீங்கள் அழுத்திசொன்னது மிகவும் உண்மைதான்.எனக்கு இன்றைய இளைஞர்கள் மீது மிக மிக நல்ல எண்ணம் உள்ளது.அதன் வெளிப்பாடுதான் இது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அவர்கள் அப்படிதான், வேல வெட்டி இல்லாம வெட்டியா பேசீட்டு இருப்பாங்க, ஆனா யாராவது பிரச்சனை வந்த மனிதாபிமான தலை தூக்கும் உதவிக்கு ஓடுவார்கள். பிறகு அடுத்த நாள் பழையபடி. அவர்கள் அப்படிதான். வெல் டன் சிவாஜி. கருவுக்கு அழகாய் பொருந்திய தலைப்பு

    இதுல சில நேர்மாரான செயலும் இருக்கு. இப்படி சேரும் நாலு அப்பாவி நல்ல பசங்க கூட்டம் சில சமயத்துல தவறான செயலுக்கு துனை போவாங்க. அவர்களும் அப்படிதான்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எல்லாத்துலயும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யுது வாத்தியாரே....அவங்க அப்படி...இவங்க இப்படி....பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி தலைவா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மனிதாபிமானம் எல்லோர் மனதிலும் உள்ளது. ஆனால் சிலருக்கு எட்டிப்பார்க்க மறுக்கிறது. இதற்கு நாட்டின் சட்டதிட்டங்களும் ஒருவகை காரணங்கள்.

    இளைய சமுதாயத்தை படம்பிடித்து காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சிவா....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நல்ல கதை அண்ணா...இள ரத்தம்... எல்லாமுமே இருக்கத்தானே வேண்டும்...என்னக் கேட்ட இளைஞர்கள் ரொம்ப நல்லவங்க...சில நேரம் நல்லவங்க மாதிரி நடிச்சிட்டு சில தாத்தாக்கள் செய்யிற ரவுசு தான் தாங்க முடியாது...மக மாதிரிம்மா நீயின்னு ஆரம்பிச்சு...பேச ஆரம்பிச்சு...மக கையாக பொது மாத்து வாங்கற வரைக்கும் பேசுவாங்க...ப*ச*ங்க* எவ்வ*ள*வோ தேவ*லை....
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    மனிதாபிமானம் எல்லோர் மனதிலும் உள்ளது. ஆனால் சிலருக்கு எட்டிப்பார்க்க மறுக்கிறது. இதற்கு நாட்டின் சட்டதிட்டங்களும் ஒருவகை காரணங்கள்.

    இளைய சமுதாயத்தை படம்பிடித்து காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சிவா....
    ஆமாம் அன்பு....மனிதாபிமானம் எட்டிப் பார்ப்பதற்குக்கூட சட்ட திட்டங்கள் சில சமயம் தடையாகத்தானிருக்கிறது.இருந்தும் இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை.சமயத்துக்கு உதவுகிறார்கள்.நன்றி அன்பு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    .ப*ச*ங்க* எவ்வ*ள*வோ தேவ*லை....
    நூத்துக்கு நூறு சரிதாம்மா...சில பெருசுங்க சில சமயம் ரொம்ப வில்லங்கம் புடிச்சவங்க....நிறைய பார்த்திருக்கேன்.
    பாராட்டுக்கு நன்றிம்மா!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    நல்லவங்க மாதிரி நடிச்சிட்டு சில தாத்தாக்கள் செய்யிற ரவுசு தான் தாங்க முடியாது..
    அம்மா யவனிகா இந்த மன்றத்துல இதயம், புள்ளி ராஜா, ஆதவா போன்ற நிரைய தாத்தாகள் இருக்காங்க. ஏன் நம்ம சிவா ஜி யே ஒரு தாத்தாதான். அவுங்கள் நீங்க இப்படி திட்டரது கொஞ்ச கூட நல்லா இல்ல.
    இப்படிக்கு
    தாத்தாக சார்பாக பேசும் இழைஞர்கள் சங்க தலைவன்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2

    Talking

    Quote Originally Posted by lolluvathiyar View Post
    அம்மா யவனிகா இந்த மன்றத்துல இதயம், புள்ளி ராஜா, ஆதவா போன்ற நிரைய தாத்தாகள் இருக்காங்க. ஏன் நம்ம சிவா ஜி யே ஒரு தாத்தாதான். அவுங்கள் நீங்க இப்படி திட்டரது கொஞ்ச கூட நல்லா இல்ல.
    இப்படிக்கு
    தாத்தாக சார்பாக பேசும் இழைஞர்கள் சங்க தலைவன்
    நீங்க சில, பல தாத்தாக்களோட என்னையும் சேர்த்து சொன்னதக்கூட நான் பொறுத்துக்கிட்டேன். ஆனா, உங்களை இழைஞர்களின் சங்கத்தலைவன்னு சொன்னத தான் என்னால ஜீரணிக்க முடியல வாத்தியார்..!

    என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா..?-ன்னு நீங்க அடிக்கடி போய் கேட்டு கட்டை தொரைக்கிட்ட, பட்டை கழண்டு வர்றது எல்லாருக்கும் தெரியும். வரைஞ்ச மீசை வச்சிக்கிட்டே இப்படி வகை தொகையா பேசறீங்களே.. நீங்க உண்மையிலேயே இளைஞரா இருந்தா.???!! கற்பனை பன்னி(!) பார்த்தா ரொம்ப திகிலா இருக்கு வாத்தியார்..!!
    Last edited by இதயம்; 13-12-2007 at 05:24 AM.
    அன்புடன்,
    இதயம்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதரவுக்கு நன்றி தலைவா....ஆனா...இதயம்,புள்ளிராசா,ஆதவா...இவங்க வரிசையில என்னை சேர்த்தது கொஞ்சம்கூட நல்லால்ல.....அவங்க வயசென்ன..அனுபவமென்ன...அவங்களோடப் போயி.....சின்னப் பையனை....வெட்கப்படவெக்காதீங்க தலைவா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •