Results 1 to 8 of 8

Thread: ஏனிந்த தண்டனை..?!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2

    ஏனிந்த தண்டனை..?!!

    நேற்றிரவு எனக்கு கிடைத்த துன்ப மனநிலை, அதை ஆற்றிக்கொள்ள நான் தேடிய ஜீவனை மனதில் நினைத்து எழுதியது இது. இதை கவிதை என்று நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஆனால், இந்த வரிகளுக்குப்பின்னால் சொல்ல முடியா சோகம் உறைந்து கிடக்கிறது என்பது மட்டும் உண்மை. ஆறுதல் தேடி வந்திருக்கிறேன். அரவணைப்பீர்களா..?

    அன்பை பெறவே உனை நாடினேன்-உன்
    துன்பம் தரும் முடிவால் வாடினேன்.!

    உன்னிடம் என்னை தந்தது தவறோ..?- இப்படி
    என்னையே இழந்தது தான் உண்மை உறவோ.?!!

    உன்னை காண என் மனம் சொல்லுகிறது-ஆனால்
    உன் மௌனம் என்னை கொல்லாமல் கொல்லுகிறது

    சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை-அவை
    சொல்லில் அடங்கும் உணர்வுகளில்லை..!!

    ஊண், உறக்கம் தொலைந்து போனது-பெண்ணே
    உன்னால் என் கனவு கலைந்து போனது

    என்ன நினைத்து என்னிடம் வந்தாயோ.?-மனதால்
    என்னை கொல்ல தான் உன் அன்பை தந்தாயோ..??

    கவிக்கும் எனக்கும் காத தூரம் நீ அறிந்தது..!-இனி
    பாவி எனக்கு உன்னால் இனி அதுவும் பக்கம்..!!

    பிரிவு அன்பை என்றும் பிரிப்பதில்லை - என்
    பரிவு உன் மேல் என்றும் மரிப்பதில்லை

    கண்ணின் இமையாய் நான் இருப்பேன்-என்
    பெண்ணின் மனதை புரிந்து நடப்பேன்..!!

    கலங்காதே கண்மணி.. காத்திருப்போம் - நம்மை
    காலம் ஒன்றாய் கரை சேர்க்கும் வரை..!!

    இரணத்துடன்,
    இதயம்.
    Last edited by இதயம்; 10-12-2007 at 04:09 AM.
    அன்புடன்,
    இதயம்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    முதலில் ஆறுதல் தேடி வந்த உள்ளத்துக்கு ஆறுதலோடு அரவணைப்பும் இங்கு கிட்டுமென்பதை மனமார சொல்லிக் கொள்கிறேன்.ஏற்பட்ட வேதனை எழுத்துக்களாய் பிரசவிக்கப்பட்டுவிட்டதால்...சுமை கொஞ்சம் குறைந்திருக்கும்.
    காதல் மனது எப்போதுமே மிக மென்மையானது,சிறிய கீறலும் பெரிய வலியுண்டாக்கும்.ஆனால்....கடக்கும் மேகங்களாய் அதுவும் கடந்து போகும்.ரணப்படுத்தியதே, குணப்படுத்தும்.ஆறுதல் வேண்டி இங்கு நீங்கள் அளித்தக் கவி வலி சொல்கிறது.விரைவில் சரியாகுமென்று என் மனம் சொல்கிறது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் IDEALEYE's Avatar
    Join Date
    14 Nov 2007
    Location
    Island
    Posts
    235
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    2
    Uploads
    0
    வரிகளில் தங்களின் மனவேதனைகளும்
    கலந்துவிட்டதால்
    ஒருவித தள்ளாட்டம் தெரிகின்றது நண்பரே....
    மனது எப்போதும் திடமாக இருந்தால்
    சாதனைகள் வேலியுடைத்துப்பொறுவது
    ஒன்றும் கஷ்டமில்லை....
    ஐஐ
    மனிதம் வாழட்டும்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    சேர்ந்த காதல் தொலைவில் உறவுகள்..!
    வலி சொல்ல முடியா இதயம்..!
    துடிப்பினுள்ளும் துணையின் நினைவு
    துவண்டு அழுகையில்
    தட்டிக் கொடுக்க இரவு மட்டும்
    துணையாக..!

    தூரங்கள் தொலைத்து
    உயிர் அங்கிருக்க,
    உடல் மட்டும் இங்கு
    தொலைதூர மண்ணில்..!

    காத்திருக்கும் காலம்
    கரைந்துவிடும் நாளில் - நிச்சயம்
    அன்பானவள் அருகிருப்பாள்.

    கவலை மறந்து
    கண்ணுறக்கம் கொள்ள
    காதல் துணையிருக்கும்..!


    ஆஹா... இதயம் அண்ணா...!
    கலக்கலான கவிதை..! இத்தனை நாள் இந்தத் திறமையைத் தான் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தீங்களா??

    வலி சொல்லும் வரிகள்..!
    செதுக்கிய விதம் அருமை. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் இதயம் அண்ணா.

    இன்னும் பல கவிதைகள் படையுங்கள். படிக்க காத்திருக்கிறேன் உங்கள் தங்கை பூ.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ரொம்ப பிரமாதம்...

    அதிலும் இவ்வரிகள்..

    கவிக்கும் எனக்கும் காத தூரம் நீ அறிந்தது..!-இனி
    பாவி எனக்கு உன்னால் இனி அதுவும் பக்கம்..!!

    பிரிவு அன்பை என்றும் பிரிப்பதில்லை - என்
    பரிவு உன் மேல் என்றும் மரிப்பதில்லை


    இதயம் இந்தக் கவிதை படித்தபின் எனக்கு சில வரிகள் தோன்றியிருக்கிறது. விரைவில் வடிவத்தில் இடுகிறேன்...

    நன்றிகளும்! வாழ்த்துக்களும்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    துடிக்கும் உங்கள் ஜீவனுக்கு மடியாக எங்கள் ஜீவன் இருக்கும் இதயம்..
    கவிதையைப் படித்ததும் நிறைய தோன்றியது. ஏனோ சொல்ல முடியவில்லை..

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    பிரிவுகள் என்று நிலைப்பதில்லை
    நிலைத்த அன்பு மாறுவதில்லை
    மாறும் காலம் மாற்றங்கள்நிகழ்த்தும்
    மாறிவரும் துன்பம் காத்திருந்தால்
    மாறாது வரும் அன்பு

    காத்திருங்கள் நினைத்த அனைத்தும்நடக்க வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by இதயம் View Post
    உன்னை காண என் மனம் சொல்லுகிறது-ஆனால்
    உன் மௌனம் என்னை கொல்லாமல் கொல்லுகிறது

    சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை-அவை
    சொல்லில் அடங்கும் உணர்வுகளில்லை..!!
    .
    அன்பின் ரணத்தை அழகாய் சொன்ன வரிகள்... கலக்கல் இதயம் அண்ணா.. இது கவிதை அல்ல..காவியம்..இதயத்தின் ஓவியம்... வாழ்த்துக்கள் அண்ணா..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •