நேற்றிரவு எனக்கு கிடைத்த துன்ப மனநிலை, அதை ஆற்றிக்கொள்ள நான் தேடிய ஜீவனை மனதில் நினைத்து எழுதியது இது. இதை கவிதை என்று நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஆனால், இந்த வரிகளுக்குப்பின்னால் சொல்ல முடியா சோகம் உறைந்து கிடக்கிறது என்பது மட்டும் உண்மை. ஆறுதல் தேடி வந்திருக்கிறேன். அரவணைப்பீர்களா..?
அன்பை பெறவே உனை நாடினேன்-உன்
துன்பம் தரும் முடிவால் வாடினேன்.!
உன்னிடம் என்னை தந்தது தவறோ..?- இப்படி
என்னையே இழந்தது தான் உண்மை உறவோ.?!!
உன்னை காண என் மனம் சொல்லுகிறது-ஆனால்
உன் மௌனம் என்னை கொல்லாமல் கொல்லுகிறது
சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை-அவை
சொல்லில் அடங்கும் உணர்வுகளில்லை..!!
ஊண், உறக்கம் தொலைந்து போனது-பெண்ணே
உன்னால் என் கனவு கலைந்து போனது
என்ன நினைத்து என்னிடம் வந்தாயோ.?-மனதால்
என்னை கொல்ல தான் உன் அன்பை தந்தாயோ..??
கவிக்கும் எனக்கும் காத தூரம் நீ அறிந்தது..!-இனி
பாவி எனக்கு உன்னால் இனி அதுவும் பக்கம்..!!
பிரிவு அன்பை என்றும் பிரிப்பதில்லை - என்
பரிவு உன் மேல் என்றும் மரிப்பதில்லை
கண்ணின் இமையாய் நான் இருப்பேன்-என்
பெண்ணின் மனதை புரிந்து நடப்பேன்..!!
கலங்காதே கண்மணி.. காத்திருப்போம் - நம்மை
காலம் ஒன்றாய் கரை சேர்க்கும் வரை..!!
இரணத்துடன்,
இதயம்.
Bookmarks