அறிவியலும் தமிழும்
அறிவியல், எங்கும் அறிவியல், எதிலும் அறிவியல். வாழ்க்கையே அறிவியல்.
அறிவியலின் இலக்கணத்தை நோக்கும் பொழுது "அறிவியல் என்பது ஒரு ஒழுங்கு முறைப் படுத்தப்பட்ட வழியில் அல்லது ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிவை பெறுவது அல்லது பெருக்குவது எனக் கொள்ளப்படும்". ஆகவே அறிவியலுக்கு அடித்தளமே ஆராய்ச்சி தான்.
ஆராய்ச்சியின் அவசியத்தை உணர்ந்து அதைப் பற்றி அறிய முற்படும் பொழுது, "ஆராய்ச்சி என்பது மனிதன் சில விசயங்களை புரிந்து கொள்ளவோ, கண்டுப்பிடிக்கவோ, கண்டுபிடித்த சில விசயங்களை திருத்தி அமைக்கவோ, மேம்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட வழியில் முயற்சி செய்வது" எனலாம். மனித அறிவின் அடையாளத்தை, வலிமையை மனிதனுக்கு உணர்த்தும் செயலாக ஆராய்ச்சி உள்ளது. இதை காலம் தொட்டே முயன்று வரும் சமுதாயங்கள் இன்று அறிவியல் உலகில் சிறந்து விளங்குகின்றன.
இத்தகைய அறிவியல் ஆராய்ச்சியில் தமிழர்களான நமது நிலை என்ன? என்ற அடிப்படை உண்மையை உணர வேன்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். நாம் நினைவு கொள்ளும் பொருட்டு எத்தனை தமிழ் அறிவியல் மேதாக்கள் உள்ளனர் என எண்ணிப் பார்தல் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே பட்டியல் உள்ளது. குறிப்பாக சொல்லப் போனால், சுப்பிரமனியம் சந்திரசேகர், அப்துல் கலாம், சர் சி வி ராமன், சீனிவாச ராமானுஜம், கஸ்தூரி ரங்கன் மற்றும் சில பெருமாக்கள்.
மனதினுள், உலகில் மிகப் பழம்பெரும் சமுதாயமக நினைக்கும் நமக்கு இந்த சில அறிவுப் பெருமாக்கள் போதுமா என்ற கேள்வி எழுந்திருக்க வேன்டும் அல்லது அறிவியல் வேட்கை நம்மிடையே தணிந்திருக்க வேன்டும். இதில் ஏதோ ஒன்று உண்மை. அறிவைச் சார்ந்த அறிவியல் இன்று பொருளதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கின்றது.
நாம், நமது பொருளாதர வளர்ச்சிக்காக நாடு விட்டு, கண்டம் நிட்டு எங்கெல்லாமோ சென்று உழைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலை மாறாதா? மாற்றத்திற்கான ஏற்பாடு தான் என்ன? என்ற ஏக்கம் நமக்கு மன அளவில் இருக்கத்தான் செய்கிறது.
யாரல் இந்த மற்றம்? எப்படி ஏற்படும்?
நாம் தான் இந்த மற்றத்திற்கான படிக்கற்கள். நாம் செய்ய வேன்டிய கடமைகள் அதிகமாக உள்ளது. இது ஒரு சமுதாய தொன்டு. இந்த தொன்டு செய்ய நாம் பணமோ, நன்கொடையோ தரத் தேவையில்லை.
முதல் கட்டமாக, நமது பிள்ளைகளை சிறந்த முறையில் படிக்க வைக்க வேன்டும். அறிவியல் தாகத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேன்டும். அவர்களுடைய அன்றாட விசயங்களில் கலந்துரையாட வேன்டும். அறிவியல் குழுமங்கலை ஊர் ஊராக அமைக்கும் பணியில் முயற்சி செய்ய வேன்டும். எந்த விசயங்களைப் பற்றி பேசினாலும் அதை அறிவியலோடு இணைத்துக் கூற வேன்டும். உலகிலுள்ள மேம்பட்ட அதி நவீன தொழில் நுட்ப சாதனங்கள் கிடைத்த பெருமையில் இளைய தலைமுறையினர் இருந்து விடாமல் பார்த்துக் கொள்ளவேன்டும். வெறும் உபயொகிகளாக மட்டுமில்லாமல் அதை கன்டுப்பிடிப்பதினால் ஏற்படும் ஆக்கபூர்வமான சமுதாய வளர்ச்சியைப் பற்றி எடுத்து கூற வேன்டும். இப்படியாக நமது முயற்சி காலம் தொட்டு நமது சமுதாயத்திடம் தொடர வேன்டும்.
இதை செய்ய ஒரு குறிப்பிட்ட நாள் தேவையில்லை. படிக்கும் இளைய தலைமுறையினரை அவர்கள் சிறந்த முறையில் அதிகமாக படிக்க தூண்ட வேன்டும். அவர்களுக்கு தேவைப்படும் மேல் கல்வி வழி நடத்தலை மேற்கொள்ளவேன்டும். எத்தனை துறைகள் இருக்கின்றது, எதை தேர்ந்தெடுக்கலாம் என்பதை கூட தெரியாமல் நிறைய மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சிறிய அளவிளாவது வழி காட்டலாம். குறைந்த பட்சம் ஊக்கமாக பெசலாம்.
இதை மனதளவில் உறுதி பூன்டு உடனே செயல் பட வேன்டும். இதை செம்மையோடு செய்வோமானல் நமது தமிழ் சமுதாயமும் உலகில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் அறிவியலும் தமிழும் வேறல்ல என்ற நிலையும் உருவாகும் என நம்பிக்கை கொள்ளலாம்.
எதிர் வரும் உலகில் நாமும் செழித்த குடி.
நன்றி
எதிர்பார்ப்புடன்
மீரான்.
Bookmarks